தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையரை தொடர்ந்து வாட்டும் தூக்கமின்மை

3 mins read
8c17d018-fa25-44cc-b39f-320193ce514d
-

அனுஷா செல்­வ­மணி

சிங்­கப்­பூ­ரின் பர­ப­ரப்­பான வாழ்க்­கைச் சூழ­லில் இளை­யர்­கள் தங்­க­ளின் உடல் நல­னை­யும் மன நல­னை­யும் பேணிக்­காப்­ப­தில் தொடர்ந்து சவால்­க­ளைச் சந்­தித்து வரு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரின் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் ஓராண்­டுக்கு முன்பு வெளி­யிட்ட செய்­தி­யின்­படி, சிங்­கப்­பூ­ரர்­கள் பலர் ஏழு மணி நேரத்­திற்­கும் குறை­வாகவே உறங்­கு­கி­றார்­கள் என்று கண்­டறி­யப்­பட்­டது.

அதை­ய­டுத்து தமிழ் முரசு நாளி­தழ் அதன் இன்ஸ்­ட­கி­ராம் தளத்­தில் நேற்று முன்­தி­னம் நடத்­திய கருத்­துக்­க­ணிப்பு ஒன்­றின்­படி, இரு­ப­தி­லி­ருந்து முப்­பது வய­துக்கு உட்­பட்ட இளை­யர்­களில் 63 விழுக்­காட்­டி­னர், தின­சரி ஏழு மணி நேரத்­திற்­குக் குறை­வா­கத்­தான் உறங்­கு­கி­றார்­கள் என்று கண்­ட­றி­யப்­பட்­டது.

வேலை, படிப்பு, தூங்­கு­வ­தில் பிரச்­சினை, உடல் மற்­றும் மன­நலப் பிரச்­சி­னை­கள் எனப் பல கார­ணங்­களை அவர்­கள் சுட்­டிய நிலை­யில் வேலை­யும் படிப்­பும் தங்­க­ளின் தூக்­கத்தை வெகு­வாகப் பாதிக்­கிறது என்று அவர்­களில் 60 விழுக்­காட்­டி­னர் பகிர்ந்­தி­ருந்­த­னர்.

கணக்­காய்­வா­ள­ரா­கப் பணி­புரி­யும் 25 வயது கேசவ் குமார், தாம் வேலை முடிந்து உடற்­ப­யிற்­சிக் கூடத்­திற்­குச் செல்ல வேண்டி­யுள்­ள­தால் தூங்­கும் நேரம் குறைவு என்­றார்.

அதோடு, சில சம­யங்­களில் வேலை முடிந்த பிறகு குடும்­பத்­தி­னர் அல்­லது நண்­பர்­க­ளோடு வெளியே செல்­வது போன்ற கார­ணங்­க­ளால் அவர் ஏழு மணி நேரத்­திற்­கும் குறை­வா­கத் தூங்­கு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

வேலை தாம­த­மாக முடிவ­தால் தமக்கு விருப்­ப­மான தொலைக்­காட்­சித் தொடர்­களை ஓய்வு நேரத்­தில் பார்க்க வேண்­டி­யுள்­ளது என்­றார் தக­வல் தொழில்­நுட்ப ஆலோ­ச­க­ரான பூஜா ஜெய­பா­லன், 24. சில சம­யங்­களில் தூக்­கம் வந்­தா­லும் அந்­தத் தொட­ரைப் பார்த்­து­விட்டு உறங்­கச் செல்­வ­தால், தூங்­கும் நேரம் குறைந்­து­வி­டு­கிறது.

இரண்டு குழந்­தை­க­ளுக்­குத் தாயான 29 வயது நூர் சஃபிரா, தின­மும் கிட்­டத்­தட்ட மூன்று மணி நேரம் மட்­டும் தூங்­கு­வ­தாக கூறி­னார்.

ஐந்து மாதக் குழந்தை நடு இர­வில் இரண்டு முறை எழு­வ­தா­லும், இரண்டு வயது பிள்ளை சில நேரங்­களில் இர­வு­வே­ளை­யில் திடீ­ரெ­னக் கண்­வி­ழிப்­ப­தாலும் அவ­ரு­டைய தூக்­கம் கெடு­கிறது. மருத்­துவ ஆய்­வுக்­கூட நிபு­ண­ரா­கப் பணி­பு­ரி­யும் இவ­ருக்கு, தூக்­க­மின்­மை­யால் வேலை­யில் கவ­னம் சித­று­கிறது என்­றும் குறிப்­பிட்­டார்.

பதற்­ற­மான மன­நி­லை­யால் ஒவ்­வோர் இர­வும் தூங்­கு­வ­தற்­குச் சிர­ம­மாக உள்­ளது என்­றார், பொறி­யி­யல் துறை­யில் பணி­பு­ரி­யும் அகி­லேஷ், 28. மருத்­து­வரை நாடும் அள­வுக்கு அவ­ரு­டைய நோய் கடு­மை­யாக இல்­லா­த­தால் தற்­போது இந்­தப் பிரச்­சி­னையைத் தாமே சமா­ளித்­துக்­கொண்டு, தம்­மால் முயன்ற அள­வுக்­குத் தூங்க முயல்­கி­றார்.

மேல்­ப­டிப்­பைத் தொடங்­கு­வதற்கு முன் வேலைக்­குச் சென்று­கொண்­டி­ருந்த 24 வயது தேவி­ஸ்ரீ லெட்­சு­ம­ணன், அந்த கால­கட்­டத்­தில் நன்­றாக உறங்­கி­ய­தா­க­வும் தற்­போது படிப்­பின் கார­ண­மா­கத் தூக்­கத்தை இழந்து­விட்­ட­தா­க­வும் கூறு­கி­றார்.

குடும்­பம், நண்­பர்­கள் ஆகி­யோ­ருக்கு மட்­டு­மல்­லா­மல் தனக்­கும் நேரத்தை ஒதுக்­கிச் செல­விட விரும்­பும் இவர், தேர்­வு­களாலும் பள்­ளிப் பாடங்­க­ளா­லும் தூங்­கும் நேரம் குறைவு என்­றார்.

மின்­னி­லக்­கச் சாத­னங்­க­ளைத் தொடர்ந்து பயன்­ப­டுத்­து­தல், கணினி விளை­யாட்­டு­க­ளுக்கு அடி­மை­யாக இருத்­தல், தாம­த­மாக இர­வில் தூங்க நண்­பர்­கள் தரும் நெருக்­கு­தல் ஆகிய கார­ணங்­க­ளு­டன் மறு­நாள் பள்­ளிக்­கும் வேலைக்­கும் காலை­யி­லேயே எழுந்­தி­ருக்க வேண்­டிய சூழ­லால் இளை­யர்­கள் தங்­க­ளுக்­குத் தேவைப்­படும் தூக்­கத்­தைப் போது­மான அளவு பெறு­வ­தில்லை. இதில் பெற்­றோ­ரின் பங்­கும் உண்டு. உறக்­கத்­தின் முக்­கி­யத்­து­வத்தை அவர்­கள் முத­லில் உணர்ந்­தி­ருக்க வேண்­டும். இளை­யர்­கள் தாங்­களே முடி­வெடுக்­க­லாம் என்று எண்­ணி­விடா­மல் அவர்­க­ளுக்கு வழி­காட்­டும் வகை­யில் பெற்­றோர் உத­வ­லாம்.

தூக்­கம் போதாத ஒவ்­வொரு மணி நேரத்­திற்­கும் இளை­யர்­கள் தங்­க­ளின் சுகா­தா­ரம், சிந்­த­னைத் திறன், நலன் ஆகி­ய­வற்றை அபாய நிலைக்கு உட்­ப­டுத்­து­கிறார்­கள் என்று மன­ந­லக் கழ­கத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யும் மூத்த ஆலோ­ச­க­ரு­மான டாக்­டர் டேனி­யல் ஃபுங் கூறு­கிறார்.

போது­மான தூக்­கம் பெற...

கால அட்­ட­வ­ணை­யு­டன் தின­மும் என்ன செய்ய வேண்­டும் என்று நன்கு திட்­ட­மிட்­டுக்­கொண்­டால் நேர விர­யத்­தைத் தவிர்த்து போது­மான நேரம் தூங்க முடி­யும்.

தின­மும் பல­த­ரப்­பட்ட நட­வ­டிக்­கை­களில் சுறு­சு­றுப்­பு­டன் செயல்­பட்­டால் அவற்­றின் மூலம் ஏற்­படும் அலுப்­பால் எளி­தில் தூங்க இய­லும்.

மன­ந­லம் தொடர்­பான பிரச்­சினை உள்­ளது என்ற சந்­தே­கம் எழுந்­தால், நிபு­ணர்­க­ளி­டம் ஆலோ­சனை நாடு­வது சிறந்­தது.

தூங்­கு­வ­தற்கு ஒரு மணி நேரத்­திற்கு முன்­ன­தா­கவே அனைத்து வகை­யான மின்­னிலக்­கச் சாத­னங்­க­ளின் பயன்­பாட்­டை­ ஒரு­வர் நிறுத்­திக்­கொள்­வ­தும் நல்­லது.