1. அரிசியைக் கழுவி தாராளமாக தண்ணீர் சேர்த்து சிறிது குழையும் அளவுக்கு வேக வைக்கவும். (ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை). 2. அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும். 3. பின்னர் அரிசியை நொய் போன்று மசிக்கவும்.
4 சாதத்தை அடுப்பில் வைத்து வெல்லம் சேர்க்கவும். 5. அல்வா பதம் வரும் வரை கலக்கவும். 6. நெய் சேர்த்து கிளறவும். 7. தாளிப்பு: வாணலியில் சிறிது நெய்விட்டு முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து சிறிது வறுக்கவும்.
8. வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சையை பொங்கலில் சேர்த்து கிளறவும். கடைசியில் ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.