'ஒவ்வொரு தமிழரும் லீ குவான் இயூவுக்கு நன்றி சொல்லவேண்டும்'

'ஒவ்வொரு தமிழரும் லீ குவான் இயூவுக்கு நன்றி சொல்லவேண்டும்'

2 mins read
8d71ac7b-b160-4830-a12a-18d2a8686067
-
Google News Preferred Icon

நம் தாய்­மொ­ழி­யான தமிழ்­மொழியை சிங்­கப்­பூ­ரின் அதி­கா­ரத்­துவ மொழி­களில் ஒன்­றாக ஆக்­கி­ய­தற்கு சிங்­கப்­பூ­ரின் முதல் பிர­த­மர் அம­ரர் திரு லீ குவான் இயூவை ஒவ்­வொரு தமி­ழ­ரும் நன்றி உணர்­வோடு நினைத்­துப் பார்க்க வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற முன்­னாள் நிய­மன உறுப்­பி­னர் இரா. தின­க­ரன் கூறி­யி­ருக்­கி­றார்.

சென்­னை­யில் நடைபெற்ற இரண்டு நாள் அய­ல­கத் தமி­ழர் தினத்­தின் இரண்­டாம் நாள் நிகழ்­வில் அவர் இவ்­வாறு கூறி­னார். சிங்­கப்­பூ­ரின் கல்­விக் கூடங்­களில் தமிழ் கற்­பிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அடுத்த தலை­மு­றை­யி­ன­ரைத் தமிழ்­மொ­ழி­யைத் தொடர்ந்து பேச­வைக்­கப் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை சிங்­கப்­பூர் அர­சாங்­கம் எடுத்து வரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். அய­ல­கத் தமி­ழர் தினம் சிறப்­பாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்த திரு தின­கரன், காலை­யில் சிறப்­புரை ஆற்­றிய தமிழக முத­ல­மைச்­சர் மு. க. ஸ்டா­லின் அறி­வித்த நான்கு திட்­டங்­களை வர­வேற்­றுப் பாராட்­டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

வெளி­நா­டு­களில் வாழும் தமி­ழர்­கள் குறித்து முழு­மை­யாக ஆய்­வு­செய்து தர­வு­களை ஆவ­ணப்­ப­டுத்­துவது; வெளி­நாட்­டுத் தமிழர்­க­ளின் பிள்­ளை­கள் 200 பேரை ஆண்­டு­தோ­றும் தமிழ் நாட்­டிற்கு வர­வ­ழைத்­துப் பண்­பாட்­டுச் சுற்­று­லா­வுக்கு ஏற்­பாடு செய்­வது; வெளிநாடு­க­ளிலோ, இந்தியாவின் மற்ற மாநி­லங்­க­ளிலோ பணிக்­குச் சென்று எதிர்­பா­ரா­வி­த­மாக இறந்­து­வி­டும் தமி­ழர்­க­ளின் குடும்­பத்­திற்கு ஓய்­வூ­தி­யத் திட்­டம் அறி­மு­கப்­படுத்துவது; அயல் நாடு­க­ளுக்­குச் செல்­வோர் பற்­றிய தர­வுத் தளம் ஏற்­ப­டுத்துவது ஆகி­யவை அந்த நான்கு திட்­டங்­கள்.

எந்த வள­மும் இல்­லாத சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லில் வளர்ச்சி கண்டு, தமி­ழர்­கள் உட்பட லட்­சக்­க­ணக்­கான வெளி­நாட்­டி­ன­ருக்கு வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கிக் கொடுத்­துள்­ள­தைச் சுட்­டிய திரு தின­க­ரன், இரு­தரப்­பும் ஒன்று மற்­ற­தன் மண்­ணில் முத­லீடு செய்ய இன்­னும் கூடுதல் முயற்­சி­களை மேற்­கொள்­ள­லாம் என்­றார்.

அய­ல­கத் தமி­ழர் தினத்­தின் முதல் நாள் நிகழ்ச்­சி­யில் சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் திரு. நா. ஆண்­டி­யப்­ப­னும் கவி­மா­லைக் காப்­பா­ளர் திரு. மா. அன்­ப­ழ­க­னும் உரை­யாற்­றினர்.