பண்பாட்டில் மாற்றம் ஏற்பட உதவும் உணவுப் பழக்கம்

பண்பாட்டில் மாற்றம் ஏற்பட உதவும் உணவுப் பழக்கம்

1 mins read
3a143294-2cd2-46d5-8980-269214d4ae07
-

நமது உண­வுப் பழக்­கம் நமது பண்­பாட்­டில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் என்று தமிழக முன்­னாள் தக­வல் ஆணை­யர் முனை­வர் சாரதா நம்பி ஆரூ­ரன் கூறி­யி­ருக்­கி­றார்.

சென்­னைப் புத்­த­கக் காட்­சி­யில் சிங்­கப்­பூ­ரின் சார்­பில் அமைக்­கப்­பட்­டுள்ள காட்­சிக் கூடத்­தில் கடந்த வியா­ழக்­கிழமை, சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் திரு ஷாந­வா­சின் 'அயல் பசி' நூலை அறி­மு­கம் செய்­த­போது அவர் அவ்­வாறு குறிப்­பிட்­டார்.

இந்­தோ­னீசிய, ஜப்­பா­னிய, அமெ­ரிக்க, பிரெஞ்சு உண­வுக் கலா­சா­ரங்­கள், உணவு வகை­கள், உண­வுத் தயா­ரிப்­பில் பயன்­ப­டுத்­தப்­படும் வித­வி­த­மான கத்­தி­கள், கரு­வி­கள், வித­வி­த­மான உணவு வகை­க­ளைப் பரி­மா­று­வ­தற்­கான மாறு­பட்ட முறை­கள், உல­கப் பிர­ப­லங்­க­ளின் விசித்­தி­ர­மான உண­வுப் பழக்­கங்­கள் உள்­ளிட்ட உணவு தொடர்­பான பல்­வேறு விவ­ரங்­களை 'அயல் பசி' நூல் விவ­ரிப்­ப­தாக முனை­வர் சாரதா தெரி­வித்­தார்.

தற்­போது பாஸ்டா எனும் உணவு தமி­ழர்­கள் உள்­ளிட்ட அனை­வ­ரின் விருப்ப உண­வாக மாறி­யி­ருக்­கிறது; இத­னால் விருந்­துண்­ணும் நிலை­கூட மாறி­யி­ருக்­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.

ஏற்­புரை ஆற்­றிய நூலா­சி­ரி­ய­ரும் சிராங்­கூன் டைம்ஸ் இத­ழின் ஆசி­ரி­ய­ரு­மான திரு ஷாந­வாஸ், தான் உண­வுக் கடை­களில் பணி­யாற்­றி­ய­போது சந்­தித்த பல்­வேறு சவால்­கள் பற்­றிக் கூறி­னார். அவற்­றின் தாக்­கமே இந்­நூல் என்­றார் அவர்.

எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் திரு. நா. ஆண்­டி­யப்­பன் வர­வேற்­பு­ரை­யும் துணைத் தலை­வர் திரு. சு. முத்­து­மா­ணிக்­கம் நன்­றி­யு­ரை­யும் ஆற்­றி­னர்.