அமர்ந்தே இருப்பவர்களின் உடனடி கவனத்துக்கு

அமர்ந்தே இருப்பவர்களின் உடனடி கவனத்துக்கு

3 mins read
27a6bc86-1dfc-4aaf-b58c-709df31daf38
அமர்ந்தே நாளைக் கழிப்ப­வர்­களுக்கு நீரி­ழிவு, மற­தி­நோய், இத­ய­ நோ­யால் மர­ணம் ஏற்­ப­டு­தல் போன்­ற­வற்­றின் அபா­யம் கூடு­கிறது. படம்: பிக்ஸாபே -

நாள் முழுவதும் அமர்ந்துகொண்டே இருப்பவர்கள் 30 நிமிடத்துக்கு ஒருமுறை, ஐந்து நிமிடங்கள் நடந்தால் அவர்களின் உடலுக்கும் மனதுக்கும்

பல நன்மைகள் உண்டு என்கிறது ஓர் அமெரிக்க ஆய்வு.

நாள் முழு­வ­தும் கணி­னி­யின் முன் அமர்ந்து வேலை செய்­து­கொண்டே இருப்­ப­வர்­கள் அல்­லது சோஃபாவில் உட்­கார்ந்தவாறு அதிக நேரம் தொலைக்­காட்சி பார்ப்­ப­வர்­கள் பல­ரும் அத­னால் தங்­கள் உடல்­ந­லத்­துக்­குத்­தான் கேடு என்­பதை அறிந்­தி­ருப்­பார்­கள்.

அமர்ந்தே நாளைக் கழிப்ப­வர்­களுக்கு நீரி­ழிவு, மற­தி­நோய், இத­ய­ நோ­யால் மர­ணம் ஏற்­ப­டு­தல் போன்­ற­வற்­றின் அபா­யம் கூடு­கிறது. ஒரு­வர் உடற்­ப­யிற்சி செய்­த­போ­தும் தின­மும் 12 முதல் 13 மணி நேரம் வரை அமர்ந்­தி­ருந்­தால், ஆகக் குறை­வான நேரம் அமர்ந்­தி­ருப்­ப­வர்­க­ளை­விட அவர் விரை­வா­கவே மர­ண­ம­டை­யும் வாய்ப்பு இரட்­டிப்­பா­கிறது.

அந்த அபா­யத்தை ஒரு சிறிய மாற்றம் குறைக்­கிறது என்ற நற்­செய்­தி­யைப் புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது.

அமர்ந்தே இருப்­ப­தால் உடல்­ந­லத்­துக்கு ஏற்­படும் அபா­யத்­தைக் குறைக்க ஒரு­வர் செய்­ய­வேண்­டிய குறைந்­த­பட்ச உடல் அசை­வு­கள் என்ன என்­ப­தைக் கண்­ட­றி­வது ஆய்­வின் நோக்­க­மா­கும்.

நியூ­யார்க் நக­ரில் உள்ள கொலம்­பியா பல்­க­லைக்­க­ழக மருத்­துவ நிலை­யத்­தைச் சேர்ந்த மருத்­து­வர் கீத் டியஸ் ஆய்வை வழி­ந­டத்­தி­னார்.

அமெ­ரிக்க விளை­யாட்­டுத் துறை மருத்­து­வக் கல்­லூ­ரி­யின் ஆய்­வி­த­ழில் ஆய்வு முடி­வு­கள் வெளி­யி­டப்­பட்­டன.

தங்­கள் ஆய்­வுக்­கூ­டத்­துக்கு வந்து தின­மும் பணி­யி­டத்­தில் இருப்­ப­து­போல தொண்­டூ­ழி­யர்­கள் பல மணி நேரத்­தைக் கழித்­த­னர். அவர்­க­ளின் ரத்த சர்க்கரை அள­வும் ரத்த அழுத்த அள­வும் தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­பட்டு வந்­தது. வெவ்­வேறு நேரங்­களில் ஆய்­ வாளர்­கள் அவர்­களை நடக்க வைத்­த­னர். சிலர் அரை மணி நேரத்­துக்கு ஒரு முறை­யும் சிலர் ஒரு மணி நேரத்­துக்கு ஒரு முறை­யும் நடந்­த­னர். அவர்­கள் நடந்த நேரம் ஒரு நிமி­டம் அல்­லது ஐந்து நிமி­டம். சிலர் நடக்­கவே இல்லை.

30 நிமி­டத்­துக்கு ஐந்து நிமி­டம்

30 நிமி­டம் அமர்ந்­துவிட்டு ஐந்து நிமி­டம் நடந்­த­வர்­க­ளுக்கு, அமர்ந்தே இருப்­ப­தால் ஏற்­படும் பல உடல்நலக் கேடுகள் குறை­ந்தன. அது­வும் ஆய்வு செய்­யப்­பட்­ட­வர்­கள் பெரு­வே­கத்­தில் நடக்­க­வில்லை. நடை­ப்ப­யிற்சி சாத­னத்­தில் மணிக்கு 1.9 மைல் (3.05 கிலோ­மீட்­டர்) எனும் வேகத்­தில்­தான் அவர்­கள் நடந்­த­னர். அந்த வேகத்­தில் நடந்­த­வர்­க­ளுக்கு உட­லில் பல மாறு­தல்­கள் நிகழ்ந்­த­தைக் கண்டு வியந்­த­தாக தலைமை ஆய்­வா­ளர் டாக்­டர் டியெஸ் கூறி­னார்.

ஒரு­வர் உணவு உண்­ட­பி­றகு சர்க்­கரை அளவு உய­ரும் என்­பது தெரிந்­ததே. இந்த ஆய்­வில், அரை மணி நேரத்­துக்கு ஒரு முறை ஐந்து நிமி­டம் நடந்­த­வர்­க­ளுக்கு உணவு உண்ட பின்­னர் ஏற்­படும் ரத்த சர்க்­கரை உயர்வு 58 விழுக்­காடு குறைந்­தது.

தசைக்கு அடிக்­கடி வேலை தர­வும்

ரத்­தத்­தில் உள்ள சக்­கரை, கொழுப்பு அள­வைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க நமது தசை­கள் உத­வு­கின்­றன. ஆனால் அந்­தப் பணி நிறை­வேற, தசை­க­ளைப் பயன்­ப­டுத்­த­வேண்­டும். அவை குறு­க­வேண்­டும்.

"பல மணி நேரம் அமர்ந்­தி­ருக்­கும்­போது தசை­கள் ரத்த சர்க்­கரை, ரத்­தக் கொழுப்பு அள­வைக் குறைக்­கும் வேலை­யில் முழு­மை­யாக உத­வு­வ­தில்லை.

"சிற்­றுண்­டி­க­ளைப் போல அடிக்­கடி சிறு­ந­டை­களை மேற்­கொள்­ளும்­போது தசை­க­ளுக்கு அசைவு கிடைத்து அவை செய­லில் இறங்­கு­கின்­றன. ரத்­தத்­தில் உள்ள சர்க்­கரை அளவு, ரத்­தக் கொழுப்பு ஆகி­ய­வற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் தசை­க­ளின் திறன் மேம்­ப­டு­கிறது," என்று டாக்­டர் டியஸ் விளக்­கி­னார்.

மேலும், ஆய்வு செய்­யப்­பட்­ட­வர்­களில் நடக்­கா­மல் இருந்­த­வர்­க­ளை­விட சிறு நேரத்­துக்கு நடந்­த­வர்­க­ளின் ரத்த அழுத்­தம், 5 எம்­எம்­எச்ஜி அளவு குறைந்­தது என்­பதை ஆய்­வா­ளர்­கள் கண்­ட­றிந்­த­னர்.

அமர்ந்தே இருக்­கும்­போது கால் ரத்த நாளங்­கள் வளை­ய­வும் குறு­க­வும் செய்­கின்­றன. அத­னால் ரத்த நாளங்­கள் முறுக்­கப்­பட்டு, ரத்த ஓட்­டம் பாதிக்­கப் ­ப­டு­கிறது. இது ரத்த அழுத்­தத்தை அதி­க­ரிக்­கிறது என்று டாக்­டர் டியஸ் விவ­ரித்­தார்.

அடிக்­கடி எழுந்து நடப்­பதால், கால்களில் ரத்த ஓட்­டம் சீராக இருக்கும் என்றும் சீரான ரத்த ஓட்­டம் ரத்த அழுத்­தம் ஏற்ற இறக்­கத்தைத் தடுக்க உதவும் என்றும் அவர் கூறி­னார்.

அத்­து­டன், நாள் முழு­வ­தும் அமர்ந்தே இருந்­த­வர்­க­ளை­விட அரை மணி நேரத்­துக்கு ஒரு முறை ஐந்து நிமி­டம் இலே­சாக நடந்­த­வர்­க­ளி­டம் சோர்வு குறைந்­த­தை­யும் மகிழ்ச்சி அதி­க­ரித்­த­தை­யும் ஆய்­வா­ளர்­கள் கவ­னித்­த­னர்.

அத­னால் அடிக்­கடி எழுந்து நடப்­பது மன­துக்கு உற்­சா­கம் தரும் என்று அவர்­கள் கூறி­னர்.