தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சன்லவ் இல்லத்தில் மூத்தோர் ஒன்றுகூடி வைத்த பொங்கல்

2 mins read
5224e3de-d80b-45f3-9ca3-52a1d44ad519
-
multi-img1 of 2

மோன­லிசா

சன்­லவ் இல்­லத்­தில் மூத்­தோர் அனை­வ­ரும் ஜன­வரி 14ஆம் தேதி ஒன்­றி­ணைந்து பாரம்­ப­ரிய முறை­யில் பொங்­கல் வைத்­துக் கொண்­டா­டி­னர்.

பொங்­கல் பொங்கி வரும் போது அனை­வ­ரும் தமி­ழில் 'பொங்­கலோ பொங்­கல்' என்று கூறி மகிழ்ந்­த­னர். பொங்­கல் பண்­டி­கை­யின் வர­லாற்றுப் பின்­ன­ணி­யும் கொண்­டாட்ட முறை­களும் மூத்த குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு விளக்­கப்­பட்­டது. வண்ண ஆடை­கள் உடுத்­தி­யும் மலர்­கள் சூடி­யும் அவர்­கள் கொண்­டாட்ட உணர்வை வெளிப்­ப­டுத்­தி­னர்.

ஹவ்­காங் வட்­டா­ரத்­தைச் சார்ந்த சன்­லவ் மூத்­தோர் நட­வ­டிக்கை நிலை­யத்­தில் நடை­பெற்ற இக்­கொண்­டாட்ட நிகழ்­வில் 30க்கும் மேற்­பட்ட பல இன முதி­ய­வர்­கள் மிகுந்த ஆர்­வத்­து­டன் பங்­கெ­டுத்­த­னர்.

"இது­போன்ற பல இன, பல சமய நிகழ்­வு­களை ஒன்று­கூடி கொண்­டா­டு­வது சிங்­கப்­பூ­ரின் ஒரு­மைப்­பாட்டை பிர­தி­ப­லிக்­கிறது.

"பன்­முக கலா­சார சூழ­லில் இது சமூ­கப் பிணைப்பை ஏற்­ப­டுத்­தும். குறிப்­பாக மூத்­தோர் இதில் ஈடு­ப­டு­வது இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு முன்­னு­தா­ர­ண­மாக அமை­யும்," என்று சன்­லவ் இல்­லத்­தின் தலைமை திட்ட அதி­காரி ராஜா மோகன் கூறி­னார்.

சன்­லவ் இல்­லத்­தின் சிராங்­கூன் நிலைய ஒருங்­கி­ணைப்­பா­ளர் ரீட்டா சாமி, "கொவிட் சூழ­லில் இது­போன்ற நிகழ்ச்­சி­கள் நிறுத்­தப்­பட்­டன. ஈராண்டு இடை­வெ­ளிக்குப் பின் இந்­த­ நிகழ்வு நடை­பெற்றது. இவ்­வகை கலா­சார நிகழ்ச்­சி­களை மூத்­தோர் மிகுந்த ஆவ­லு­டன் எதிர்­பார்க்­கின்­ற­னர்," என்று குறிப்­பிட்­டார்.

இந்­தப் பொங்­கல் கொண்­டாட்­டத்­தில் பங்கு பெற்­ற­வர்­களில் ஒரு­வர் தமிழ்­வாணி நாரா­ய­ண­சாமி, 65.

"பல்­வேறு இன, சமய நண்­பர்­க­ளு­டன் இணைந்து பொங்­கல் வைத்த அனு­ப­வம் மகிழ்ச்­சி­ய­ளித்­தது. நமது மர­பைப் பற்றி பிற இனத்­த­வ­ருக்கு எடுத்­துக் கூறும் வாய்ப்பு கிடைத்­த­தாக உணர்­கி­றேன். அவர் களுக்கு பொங்­கல் வைக்­க­வும் கற்­றுத்­தந்­தது மறக்க முடி­யாத அனு­ப­வம்," என்று அவர் கூறி­னார்.