கவனத்தையும் செயல்திறனையும் பாதிக்கக்கூடிய தொழில்நுட்பம்

கவனத்தையும் செயல்திறனையும் பாதிக்கக்கூடிய தொழில்நுட்பம்

3 mins read
b357f213-4d15-4a5b-bf4b-e0cd0a5113c9
-

கரு­ணா­நிதி துர்கா

மாண­வர்­கள், ஊழி­யர்­கள், ஓய்­வு­பெற்­ற­வர்­கள் என அனைத்துத் தரப்­பி­ன­ருக்கும் இன்று கவ­னச்­சி­த­றல் பெரும் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.

2004ஆம் ஆண்­டில் கலி­ஃபோர்­னியா பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தக­வல்­து­றைப் பேரா­சி­ரி­ய­ரான குளோ­ரியா மார்க் வேலை­யி­டச் சூழ­லில் கவ­னச்­சி­த­றல் பற்­றிய ஆய்­வு­களை நடத்­தியவர்.

ஒரு பணி­நா­ளில் எவ்­வ­ளவு முறை நமது கவ­னம் சித­று­கிறது என்று நாம் மதிப்­பி­டு­வ­தை­விட 25 மடங்கு கூடு­த­லாக கவ­னச்­சி­த­றல் நிகழ்­வ­தாக அவர் கூறு­கி­றார். கவ­னம் சித­றிய பின்­னர், செய்­து­கொண்­டி­ருந்த பணிக்­குத் திரும்ப சரா­ச­ரி­யாக 23 நிமி­டம் எடுக்­கும் என்று அவர் மதிப்­பிட்­டார்.

கவ­னச்­சி­த­ற­லுக்கு முக்­கிய கார­ண­மாக இன்று தொழில்­நுட்­பச் சாத­னங்­கள் உள்­ளன. நாம் காலை­யில் கண்­வி­ழித்­த­வு­டன் முத­லில் பார்ப்­பது கைப்­பே­சித் திரை­யைத்­தான். நாள் முழு­வ­தும் அது நம் கையை­விட்டு நீங்­கா­மல் இருக்­கிறது.

கடந்த ஆண்டு மேல்­நி­லைத் தேர்­வு­களை முடித்­து­விட்டு தேர்வு முடி­வு­க­ளுக்­காக காத்­தி­ருக்­கும் நர­சிம்­ம­மூர்த்தி தமிழ்­மதி, 18, தொழில்­நுட்­பம் தனக்கு பெரிய அள­வில் ஒரு கவ­னச்­சி­த­ற­லாக அமைந்­தது என்­றார்.

"வாட்­ஸ்அப், இன்ஸ்­டகி­ராம், ஃபேஸ்­புக் போன்ற தக­வல் தொடர்பு செய­லி­க­ளின்­மூ­லம் மற்­ற­வர்­க­ளு­டன் எந்­நே­ரத்­தி­லும் என்­னால் இணைந்­தி­ருக்க முடி­கிறது. அதே நேரத்­தில் கவ­னம் அடிக்­கடி கைப்பே­சி­யின் பக்­கம் திசை­தி­ரும்­பு­கிறது. அது செயல்­தி­றனைக் குறைக்­கிறது," என்­றார் தமிழ்­மதி.

உடற்­ப­யிற்சி மருத்­து­வத்­தில் மூத்த ஆலோ­ச­க­ராக பணிபுரி­யும் ரத்­தின பிரியா, 45, தொழில்­நுட்­பச் சாத­னங்­க­ளா­லும் கைப்பே­சி­யில் கவ­னம் குவிந்­துள்ளதாலும் பலர் வெளிப்­புற நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தில்லை என்­றார்.

"எங்­குச் சென்­றா­லும் கைப்­பே­சி­யில் மூழ்கி இருப்­ப­தால் பிற­ரு­டன் நேரில் பேசு­வது குறைந்து விட்­டது. இத­னால் உற­வு­க­ளுக்கு கொடுக்­கப்­படும் முக்­கி­யத்­து­வம்­கு­றை­கிறது," என்­றார் பிரியா.

'லஸாடா', 'ஷாப்பி' போன்ற இணைய வர்த்­த­கத் தளங்­கள் தமக்கு பெரி­தும் கவ­னச்­சி­த­ற­லாய் அமை­வ­தாக பிரியா கூறி­னார்.

தேசிய தொடக்­கக்­கல்­லூ­ரி­யின் முன்­னாள் மாண­வர் நிரஞ்­சனா ராம­சாமி, 18, தாம் ஆக்க பூர்­வ­மாக செயல்­ப­டு­வ­தற்கு தொழில்­நுட்­பம் இன்­றி­ய­மை­யா­த­தாக விளங்­கு­கிறது என்­றார்.

'இயோல்­பும்டா' (Yeolpumta), 'ஃபோரஸ்ட்' (Forest) போன்ற செய­லி­க­ளின் உத­வி­யு­டன் படிக்­கும் அல்­லது வேலை செய்­யும் நேரத்தை அவர் கணக்­கி­டு­கி­றார்.

"அத்­து­டன் அச்­செ­ய­லி­களில் என் நண்­பர்­கள் ஆக்­க­பூர்­வ­மாக செயல்­பட்ட நேரத்­தை­யும் என்­னால் பார்க்க முடி­யும். இவை நமக்­கும் நமது நண்­பர்­க­ளுக்­கும் இடையே ஆரோக்­கி­ய­மான போட்­டியை உரு­வாக்­கும்," என்று நிரஞ்­சனா குறிப்பிட்டார்.

தொழில்­நுட்­பச் சாத­னங்­க­ளால் ஏற்­படும் கவ­னச்­சி­த­றல்­களைத் தவிர்க்க சில கட்­டுப்­பாடு­ களை நிரஞ்­சனா விதித்­துக் கொள்­கி­றார். சமூக வலைத்­த­ளங்­கள், பொழு­து­போக்கு செய­லி­கள் போன்­ற­வற்­றில் குறைந்த நேரம் செல­வி­டு­வதை உறு­தி­செய்ய அவற்­றின் தக­வல்­கள் அறி­விப்பு செயல்­பாட்டை நிறுத்தி வைத்­து­வி­டு­வ­தாக அவர் கூறி­னார்.

'யுனி­வர்­ஸல் சலு­ஷன்' நிறு­வ­னத்­தின் பொறி­யி­யல் இயக்­கு­னர், அழகு திரு­நா­வுக்­க­ரசு, 48, தொழில்­நுட்­பம் பணி­சார்ந்த உற்­பத்­தித் திறனை வெகு­வாக அதி­க­ரித்­துள்­ள­தாக கூறி­னார்.

சில நிர்­வாக வேலை­க­ளுக்­காக இந்­தி­யா­வில் இருப்­போ­ரு­டன் இணைந்­தி­ருக்க மைக்­கி­ரோ­சா­ஃப்ட் தளங்­களை அவர் பயன்­ப­டுத்­து­கி­றார். குறிப்­பாக கொவிட்-19 காலத்­தில் தொழில்­நுட்ப வச­தி­க­ளால் தான் ஆவ­ணங்­களை பிற­ரு­டன் பகிர்ந்து வீட்­டி­லி­ருந்தே வேலை செய்ய முடிந்­தது என்­றார் அவர்.

"ஆனால் எவ்­வ­ள­வு­தான் உத­வி­யாக இருந்­தா­லும் பிரச்­சி­னை­கள் உள்­ளன. உதா­ர­ணத்­துக்கு இணை­யத்­தில் மோச­டி­களில் சிக்­கிக்­கொள்­ளும் ஆபத்து இருக்­கிறது. இத­னால் மன­ந­லன் பாதிக்­கப்­பட்டு செயல்­தி­றன் குறை­யக்­கூ­டும்," என்று அழகு திரு­நா­வுக்­க­ரசு எச்­ச­ரித்­தார்..

dhurga@sph.com.sg