பிள்ளைகள் கெட்ட வார்த்தை பேசிவிட்டால் பெற்றோர் செய்யக் கூடியவை

பிள்ளைகள் கெட்ட வார்த்தை பேசிவிட்டால் பெற்றோர் செய்யக் கூடியவை

3 mins read
359f7777-02e0-4d5a-b155-49239698363f
-

குழந்­தை­கள் கெட்ட வார்த்தை பேசி­னால் பெரும்­பா­லான பெற்­றோ­ருக்கு திக்­கென்று ஆவது இயல்­பு­தான்.

ஆனால் அச்­சப்­ப­டத் தேவை­யில்லை. பெரும்­பா­லான நேரங்­களில் அவர்­க­ளுக்கு தாங்­கள் உச்­ச­ரிக்­கும் சொல்­லின் பொருளோ அதன் தாக்­கமோ தெரி­வ­தில்லை.

சிறு­வர்­கள் இளம் வய­தில் தகாத சொல் பேசு­வ­தும் காலப்­போக்­கில் அதைக் கைவி­டு­வ­தும் இயற்கை என்­றும் சிறு­வர்­கள் முன்­பை­விட இளம் வய­தில் தகாத சொல் பேசு­வ­தா­க­வும் ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த சமூ­க­மொ­ழி­யி­யல் பேரா­சி­ரி­யர் திமத்தி ஜே, முந்­தைய 30 ஆண்­டு­க­ளை­விட இளம் வய­தி­லேயே இரண்டு வயது மழ­லை­யர்­கூட தகாத சொல் பேசு­வ­தாக பிரிட்­ட­னில் 2010ல் நடந்த சமூ­க­மொ­ழி­யி­யல் கருத்­த­ரங்­கில் புள்­ளி­வி­வ­ரத்தை முன்­வைத்­தார்.

குழந்­தை­க­ளின் வளர்ச்­சி­யின் ஒரு பகு­தி­யாக தகாத சொல்­லைப் பேச முயற்சி செய்­வ­தாக மருத்­துவ மன­நல நிபு­ணர் டாக்­டர் நேட்­டலி கேம்ஸ் கூறி­னார். அதற்­குப் பல்­வேறு கார­ணங்­கள் உள்­ள­தா­க­வும், இத்­த­கைய சொற்­களை பாலர்­கள் பயன்­ப­டுத்­தும்­போது அவர்­கள் தங்­கள் மொழி­யைப் பரி­சோ­திக்க அவ்­வாறு செய்­வ­தா­க­வும் டாக்­டர் கேம்ஸ் தெரி­வித்­தார். பிள்­ளை­கள் தகாத சொல்­லைப் பயன்­ப­டுத்­தும் போது பெற்­றோர் அதை எதிர் கொள்ள நிபு­ணர்­கள் சில வழி­க­ளைப் பரிந்­து­ரைக்­கின்­ற­னர்.

அள­வுக்கு அதி­க­மாக உணர்ச்­சி­வ­சப்­பட வேண்­டாம் என்­றார் எஸ்­ஜி­ஃபே­மி­லிஸ் அமைப்­பைத் தோற்­று­வித்த எஸ்­தர் ஃபூங்-டான். பெற்­றோர் உணர்ச்­சி­வ­சப்­பட்டு எதிர்­கொண்­டால், பிள்­ளை­கள் அவர்­க­ளின் முன் தகாத சொற்­க­ளைத் தவிர்த்­து­விட்டு மற்ற இடங்­களில் அவற்­றைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டும் என்று அவர் கூறி­னார்.

சில நேரங்­களில் ஓர் உணர்வை வெளிப்­ப­டுத்த விரும்பி, அதற்­கான பொருத்­த­மான சொற்­கள் வராத போது பிள்­ளை­கள் தகாத சொல்­லைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டும் என்று திரு­வாட்டி ஃபூங்-டான் குறிப்­பிட்­டார்.

"எனக்கு எரிச்­ச­லாக உள்­ளது என்று கூறவோ அந்த நேரத்­தில் தூர நடந்­து­வி­டும்­ப­டியோ பெற்­றோர் பிள்­ளை­க­ளுக்­குக் கற்­றுத்­த­ர­லாம்," என்­றார் மன­நல ஆலோ­ச­கர் டாக்­டர் கேம்ஸ். அல்­லது பிள்ளை சற்று அமை­தி­யா­கும்­போது, "உன் கோபம் எனக்­குப் புரி­கிறது ஆனால் அதை வெளிப்­ப­டுத்த வேறு பொருத்­த­மான வழி­கள் உள்­ளன," என்று பெற்­றோர் பேசி உணர்த்­த­லாம் என்­றும் டாக்­டர் கேம்ஸ் கூறி­னார்.

பேசி புரிய வைக்­க­வும்

பிள்­ளை­கள் கெட்ட வார்த்தை பேசி­னால் அதைக் கண்­டு­கொள்­ளா­மல் விடு­வ­தை­விட பேசி சரி­செய்­வதே சிறந்த தீர்வு என்று மருத்­துவ மன­நல நிபு­ணர் சான்­வின் காங் தெரி­வித்­தார்.

கெட்ட வார்த்தை பேசு­வ­தால் அச்­சூழ்­நி­லை­யில் ஏதா­வது நன்மை ஏற்­ப­டு­கி­றதா என்­றும் அவற்­றைப் பேசு­வது பழக்­கம் ஆகி­விட்­டால் மற்­ற­வர்­கள் தங்­களை எவ்­வாறு பார்ப்­பார்­கள் என்­றும் பிள்­ளை­ க­ளுக்­குப் பெற்­றோர் விளக்க வேண்­டும் என டாக்டர் காங் அறிவுறுத்தினார்.

ஆனால், சில நேரங்­களில் பிள்­ளை­கள் தகாத சொல்­லைப் பேசி தங்­களை வேண்­டு­மென்றே கோபப்­ப­டுத்த நினைப்­ப­தாக பெற்­றோ­ருக்­குத் தோன்­ற­லாம்.

அந்­நே­ரத்­தில் அவர்­க­ளி­டம் பேசா­தும் அதைக் கண்­டு­கொள்­ளா­ம­லும் போவது சிறந்­தது என்று டாக்­டர் காங் கூறி­னார். பெற்­றோ­ரின் ­கவ­னம் கிடைக்­கா­விட்­டால் பிள்­ளை­கள் அத்­த­கைய சொற்­க­ளைப் பேசு­வதை நிறுத்­தக்­கூ­டும் என்­றார் அவர்.

சிறு­பிள்­ளை­க­ளின் வாயி லிருந்து தகா­தச் சொற்­கள் வரும்­போது பல நேரங்­களில் சிரிப்பு வர­லாம். ஆனால் அவ்­வாறு வெடித்­துச் சிரிக்க வேண்­டாம்.

தகாத சொல் பேசி­னால் பெரி­ய­வர்­கள் மகிழ்­வர் என்ற எண்­ணத்தை அது பிள்ளை களுக்கு ஏற்­ப­டுத்­த­லாம் என்று டாக்­டர் நேட்­டலி கேம்ஸ் விவ­ரித்­தார்.

மேலும், பெற்­றோர் எந்­தச் சொற்­கள் ஏற்­பில்­லா­தவை என்­பதை பிள்­ளை­க­ளு­டன் கலந்­து­பேசி, அச்­சொற்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னால் விரும்­பிய தொலைக்­காட்­சி­யைப் பார்க்க முடி­யாது போன்ற விளை­வு­கள் ஏற்­படும் என்று எடுத்­துக்­கூ­ற­லாம். பிள்­ளை­கள் தகாத சொற்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தைத் தவிர்த்­துத் தங்­க­ளைத் திருத்­திக் கொண்­டால் அவர்­க­ளின் நன்­ன­டத்­தை­யைப் பெற்­றோர் பாராட்­டு­வது உகந்­தது என்­றார் டாக்­டர் காங்.

பிள்­ளை­கள் தகாத சொல் பயன்­ப­டுத்­தி­னால் அது தங்­கள் பிள்­ளை­வ­ளர்ப்­பின் தோல்வி அல்­லது பிர­தி­ப­லிப்பு என்று நினைக்க வேண்­டாம் என்று டாக்­டர் காங் அறி­வு­றுத்­தி­னார். பிள்­ளை­கள் தவறு செய்­வது இயல்பு என்­றும் தங்­க­ளி­டம்­தான் பிரச்­சினை என நினைக்­கா­மல் பெற்­றோர் வழி­காட்­டி­க­ளாக இருக்க வேண்­டும் என்­றும் அவர் கூறி­னார்.