சாதனை படைத்த மலேசியரின் கதை

சாதனை படைத்த மலேசியரின் கதை

2 mins read
fb752abf-712f-4cd7-aea3-3546edd12e0f
-
multi-img1 of 2

பிரசன்னா கிருஷ்ணன்

ஒரு காலத்­தில் குண்­டர் கும்­ப­லில் இருந்து, சிறைக்­குச் சென்ற பிறகு தனது வாழ்க்­கைப் பாதையை மாற்­றிக்­கொண்­ட­து­டன் 2013ஆம் ஆண்டு தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­க­ளின் சது­ரங்­கப் போட்­டி­யில் மலே­சி­யா­வுக்கு வெண்­க­லப் பதக்­க­மும் வென்று தந்­தார் திரு கெங்­கேஸ்­வ­ரன் முனி­யன். இவ­ரின் கதையை ஆவ­ணப் பட­மாக எடுத்­துள்­ளார் சனத்­கு­மார் கணே­சன்.

அமெ­ரிக்­கா­வின் 'லாஸ் ஏஞ்­ச­லிஸ் ஃபில்ம் அவார்ட்ஸ்' திரைப்­பட விருது நிகழ்ச்­சி­யில் 'ஆகச் சிறந்த ஊக்­க­ம­ளிக்­கும் திரைப்­படம்' என்ற அங்­கீ­கா­ரத்­தைப் பெற்­றது 'வாண்­டெட்-ஷேட்ஸ் ஆஃப் லைஃப்' ஆவ­ணப் படத் தொட­ரின் திரு கெங்­கேஸ்­வ­ர­னின் கதை­யைச் சித்­தி­ரிக்­கும் அங்­கம்.

புதிய பாதைக்­குத் தன்னை மாற்­றிக்­கொள்­வ­தில் பல சிர­மங்­களை எதிர்­கொண்­டார் திரு கெங்­கேஸ்­வ­ரன்.

"புதிய சூழ­லுக்கு மாறிய பின்­பும் எனது எண்­ணங்­கள் மீண்­டும் பழைய பாதைக்­குச் செல்­லத் தூண்­டும். முன்பு தொடர்­பில் இருந்­தோரை விட்­டு­விட்டு வேறு மனி­தர்­க­ளு­டன் பழ­கு­வது சவா­லாக இருந்­தது.

"எனி­னும், ஒரு கால­கட்­டத்­திற்­குப் பிறகு பழைய வாழ்க்­கைச் சூழல் படிப்­ப­டி­யாக வில­கத் தொடங்­கி­யது. என்னை அடுத்த கட்­டத்­திற்­குக் கொண்­டு­செல்­லும் மக்­களை நான் ஈர்க்க ஆரம்­பித்­தேன்," என்­றார் 43 வயது கெங்­கேஸ்­வ­ரன்.

சது­ரங்­கத்­தைச் சிறப்­பாக விளை­யா­டும் திரு கெங்­கேஸ்­வ­ரன் மற்­ற­வர்­க­ளுக்கு அதைக் கற்­றுத்தர ஏற்பாடு செய்தனர் வர்த்­த­கர் இளங்கோ தியாகுவும் அவர் மனைவி கோவும். சதுரங்க மாண­வர்­களில் ஒரு­வர்­தான் 'வாண்­டெட்' படத்­தின் இயக்­கு­நர் சனத். ஆசி­ரி­ய­ரின் கதையை உல­கிற்கு எடுத்­துச்­சொல்ல இவர் ஆசைப்­பட்­டார்.

"மனத்­திற்­குப் பிடித்த துறை­யைத் தேர்ந்­தெ­டுத்து, அந்­தப் பாதை­யில் சென்­றாலே பல நன்­மை­கள் தேடி­வ­ரும். எதிர்­பாரா வேளை­களில் அவை வந்து சேரும். அரிய கதை­க­ளைக் கொண்ட சாமா­னி­யர்­க­ளைப் பற்­றி­ய­து­தான் இந்த ஆவ­ணப் படத் தொடர்," என்கி­றார் சனத், 22.

மாறு­பட்ட வாழ்க்­கைப் பய­ணத்­தைத் தேர்ந்­தெ­டுத்து சமு­தா­யத்­தில் மறக்­க­மு­டி­யாத தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் மலே­சி­யர்­களின் கதை­க­ளைக் கண்­முன் கொண்­டு­வ­ரு­வதே இவ­ரின் இலக்கு.

திரு சனத், வர்த்­த­கம் உள்­ளிட்­டவை சார்ந்த கல்­வியை மாண­வர்­க­ளுக்கு வழங்­கும் அசெண்­டாஸ் அனைத்­து­லக இளை­யர் அமைப்­பின் துணை நிறு­வ­ன­ரும் தலை­மைச் செயல்­பாட்டு அதி­கா­ரி­யும் ஆவார்.

'வாண்­டெட்' ஆவ­ணப் படத் தொட­ரில் திரு கெங்­கேஸ்­வ­ர­னின் கதை­யைக் கூறும் அங்­கம் வரும் மார்ச் 26ஆம் தேதி 'பிஜி­பி­ஏசி' எனும் பெட்டா­லிங் ஜெயா கலை நிலை­யத்­தில் வெளி­யி­டப்­படும். அதன் பிறகு இதை மலே­சி­யா­வின் பல்­வேறு பள்­ளி­களில் திரை­யி­ட­வும் யூடி­யூப் தளத்­தில் வெளி­யி­ட­வும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. தொலைக்­காட்சியில் திரை­யி­டவும் ஆலோசிக்கப்படுகிறது.