தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் 35ஆம் ஆண்டு தமிழ் மொழித்திறன் முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் தெலுக் பிளாங்கா சமூக மன்ற பலநோக்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பிப்ரவரி 4ஆம் தேதி தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியும் நடைபெறும்.
பிப்ரவரி 11ஆம் தேதி தொடக்கநிலை 5ஆம் வகுப்புக் கான பேச்சுப் போட்டியும் 25ஆம் தேதி அன்று மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான கதை சொல்லும் போட்டியும் இடம்பெறும்.
மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வாசிப்புப் போட்டியும் 11ஆம் தேதி தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பாட்டுப் போட்டியும் நடத்தப்படும்.
மேற்கண்ட நாள்கள் எல்லாம் சனிக்கிழமைகள் ஆகும். எல்லா நாள்களிலும் போட்டிகள் பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கும்.
அனைத்துப் போட்டியாளர்களும் பிற்பகல் 1.00 மணி முதல் தெலுக் பிளாங்கா சமூக மன்ற பலநோக்கு மண்டபத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இறுதிச் சுற்றுகள் அனைத்தும் மார்ச் 25ஆம் தேதி பிற் பகல் 1.00 மணி முதல் தெலுக் பிளாங்கா சமூக மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் எல்லா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்தியர் நற் பணிச் செயற்குழு கூறியது.
நியமனம் செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்கள் அடங்கிய விண்ணப்பங்களை, மின்னஞ்சல் அல்லது தொலைப்பிரதி மூலமாக வரும் ஜனவரி 30ஆம் தேதிக்குள் தெலுக் பிளாங்கா சமூக மன்றத்துக்கு அனுப்புமாறு பள்ளி முதல்வர் களையும் தமிழ் ஆசிரியர்களையும் நற்பணிச் செயற்குழு கேட்டுக்கொண்டது.
மேல்விவரம் பெற தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:
கி. இராமமூர்த்தி - 8118 4671 க. ராஜாராம் - 9771 4943
ச. விஜய் - 9148 2343

