உறவு மேம்பட நேரத் திட்டமிடல் அவசியம்

உறவு மேம்பட நேரத் திட்டமிடல் அவசியம்

3 mins read
5fa26dce-5374-4d3e-92fb-7c3191aa7082
-
multi-img1 of 2

மோன­லிசா

பிள்­ளை­கள் பிறந்த பின்­னர் அவர்­களே உல­கம் என்­றா­கிப்­போ­னது. அவர்­க­ளின் உடல், மன ஆரோக்­கி­யத்­தை­யும் தேவை­க­ளை­யும் கவ­னித்­துக் கொள்­வ­தி­லேயே பெரும்­பா­லான நேரத்தை செல­விடு­கி­றேன் என்று கூறி­னார் மூன்று குழந்­தை­க­ளுக்குத் தாயான திவ்யா அரு­ணாச்­ச­லம்.

இவ­ருக்கு எட்டு வயது மகனும் ஐந்து வயது இரட்­டை­யர்­களான மக­னும்-மகளும் உள்­ள­னர்.

35 வயது இல்­லத்­த­ர­சி­யான இவர் பிள்­ளை­கள் பிறந்த பின்­னர் தன்­னு­டைய வேலையை விட்­டு­விட்­டார். உத­வி­யா­ளரை நம்பி பிள்­ளை­களை விட்­டுச் செல்­வ­தில் விருப்­பம் இல்­லாத இவர், சமை­யல், வீட்டு வேலை­கள், பிள்­ளை­க­ளின் படிப்பு, பொழு­து­போக்கு என அனைத்­தை­யும் தானே கவ­னித்­துக் கொள்­கி­றார்.

ஒவ்­வொரு மணி நேரத்­தை­யும் திட்­ட­மிட்­டுச் செல­விட வேண்­டிய சூழ­லில், முன் போல் தன் கண­வ­ரு­டன் தனி­மை­யில் நேரத்தை செல­விட முடி­யாது போனதை உணர்ந்­தார். அர­சாங்க ஊழி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் இவ­ரின் கண­வ­ரு­டன் அன்­றா­டம் சில மணி நேரம் செலவு செய்ய முடி­வெ­டுத்­தார்.

பணி முடித்து கண­வர் வீடு திரும்­பி­ய­தும் பிள்­ளை­கள் வீட்­டுப் பாடம் செய்­யும் வேளை­யில், இரு­வ­ரும் அந்த நாளில் நடை­பெற்ற நிகழ்­வு­க­ளைப் பகிர ஆரம்­பித்­த­னர்.

இர­வில் பிள்­ளை­கள் உறங்­கிய பின் இரு­வ­ரும் தங்­க­ளின் விருப்­ப­மான தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யைப் பார்க்க ஆரம்­பித்­த­னர். கருத்து வேறு­பா­டு­க­ளி­னால் சண்டை ஏற்­பட்­டா­லும்கூட இந்­தப் பழக்­கத்தை கைவி­டாத இவர்­கள் இதன் மூலம் அன்­பும் புரி­த­லும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­க­வும் கூறி­னர்.

தங்­க­ளு­டைய மூன்று வயது மகள் குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் இருக்­கும் நேரத்­தில் வாய்ப்பு கிடைக்­கும்­போ­தெல்­லாம் தங்­க­ளுக்­குப் பிடித்­த­மான இடங்­க­ளுக்­குச் சென்று வரு­கின்­ற­னர் 35 வய­தான மென்­பொருள் பொறி­யா­ளர்­க­ளான ஆதித்யா பக்‌ஷி - மல்­லிகா அலை தம்­ப­தி­யி­னர்.

வார இறு­தி­யி­லேயே திட்­ட­மிட்டோ அல்­லது திடீ­ரென்று கூட எங்­கா­வது வெளி­யில் செல்­வோம். மதிய உணவு, காலார ஒரு நடை, கடைத்­தொ­கு­தி­களில் ஆடை­கள் உட்­பட பொருள்­கள் வாங்­கு­வது, எங்­கே­னும் அமர்ந்து பேசிக்­கொண்­டி­ருப்­பது போன்ற குழந்தை பிறப்­ப­தற்கு முன் நாங்­கள் அடிக்­கடி செல்­லும் இடங்­க­ளுக்கு மீண்­டும் செல்­வோம். இது­போன்ற செயல்­பா­டு­கள் எங்­க­ளுக்­குப் பழைய இனி­மை­யான நினை­வு­க­ளைத் தூண்­டு­வ­தோடு மிகுந்த மகிழ்ச்­சி­யை­யும் அளிக்­கும் என்று கூறி­னார் மல்­லிகா.

இவர்­க­ளைப் போலவே கிடைக்­கும் சொற்ப நேரத்­தை­யும் மகிழ்­வு­டன் வாழ்க்­கைத் துணை­யு­டன் எளி­மை­யான பல வழி­களில் செல­வி­ட­லாம். வீட்­டில் பிள்­ளை­க­ளைப் பார்த்­துக்கொள்ள துணை இருந்­தால், அவர்­க­ளி­டம் பிள்­ளை­களை விட்டு­விட்டு ஒரு சில மணி நேரம் வெளி­யில் சென்று வர­லாம்.

திரைப்­ப­டம் பார்த்­தல், பிடித்த உண­வ­கத்­திற்­குச் செல்­லு­தல், சுற்­று­லாத்­த­லங்­க­ளுக்­குச் செல்­லு­தல் போன்­ற­வற்­றைச் செய்­ய­லாம். ஆண்­டுக்கு ஒரு­மு­றை­யே­னும் கண­வ­னும் மனை­வி­யும் மட்­டும் எவ்­வித குற்­ற­வு­ணர்ச்­சி­யு­மின்றி சில நாள்­கள் ஒரு சிறிய சுற்­றுலா சென்று வர­லாம்.

பிள்­ளை­க­ளைப் பார்த்­துக் கொள்ள வேறு ஆள் இல்­லா­த­வர்­கள் வீட்­டி­லேயே பல வழி­களில் ஒன்­றாக நேரத்­தைச் செல­வ­ழிக்­க­லாம்.

ஒன்­றாக யோகா உள்­ளிட்ட உடற்­ப­யிற்சி செய்­தல், ஒன்­றாக காலை நேர தேநீர், காப்பியைத் தயா­ரித்து அருந்­து­தல், ஒன்­றாக அமர்ந்து செய்­தித்­தாள் படித்­தல், உலக நில­வ­ரங்­களை விவா­தித்­தல் போன்ற பல விஷ­யங்­க­ளைச் செய்­ய­லாம்.

நேரம் கிடைக்­கும்­போ­தெல்­லாம் வீட்டு வேலை­க­ளைப் பகிர்ந்து செய்­ய­லாம். இசை, நட­னம், விளை­யாட்டு போன்ற இணை பொழு­து­போக்கு நட­வ­டிக் கைக­ளை­யும் சேர்ந்து செய்­ய­லாம்.

தின­சரி இது­போன்ற ஏதே­னும் ஒரு செய­லில் ஒன்­றாக ஈடு­படும் போது உறவு வலுக்­கும், மனக்­கசப்­பு­கள் குறை­யும் என்று கூறி­னார் மென்­பொ­ருள் பொறி­யா­ள­ரான 38 வயது ஜெய­ராஜ் ஜெய­கு­மார்.

எழுத்­தா­ளர்­க­ளான இவ­ரும் இவ­ரு­டைய மனைவி 35 வய­தான இந்­து­மதி மனோ­கர­னும் நேரம் கிடைக்­கும் போதெல்­லாம் ஒன்­றாக அமர்ந்து புத்­த­கங்­கள் வாசிப்­பது வழக்­கம். ஒரு­வர் எழு­திய கதை­களை இன்­னொ­ரு­வர் படித்து விமர்­ச­னம் செய்வது தம்­ப­தி­ய­ராக இவர்­கள் விரும்­பிச் செய்­யும் செய­லா­கும்.

ஆறு வயது மகள் மகிழ்­வதனிக்­கும் மூன்று வயது மகள் கவின் மொழிக்­கும் பெற்­றோ­ராக ஒதுக்­க­வேண்­டிய நேரம் தவிர்த்து கிடைக்­கும் நேரத்­தை­ எல்­லாம் துணை­யு­டனே செல­வ­ழிக்­கின்­ற­னர் இந்தத் தம்­ப­தி­யர். சரி­யான திட்­ட­மி­ட­லும் கைப்­பே­சி­, சமூக வலைத்­த­ளங்­க­ளி­ல் செல­வி­டும் நேரத்தைத் தவிர்த்­தாலே தம்­ப­தி ­ய­ருக்­குள் நிறைய நேரம் கிடைக்கும் என்று கூறி­னார் இந்து­மதி.