மெழுகுவர்த்தியை ஒளிக்காக மட்டுமன்றி நுகர்வோருக்கு உற்சாகமூட்டும் வகையில் நறுமணம் சேர்க்கப்பட்டவற்றையும் நம்மில் பலர் பயன்படுத்துகிறோம்.
பல்வேறு நறுமணங்களில் கிடைக்கும் இந்த மெழுகுவர்த்திகளை ஏற்றுவதால் மனம் அமைதியடைகிறது. மூளை சுறுசுறுப்படைகிறது. மூச்சு சீராகிறது என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் இத்தகைய நறுமண மெழுகுவர்த்திகளால் காற்றின் தரம் பாதிக்கப்படுமா என்ற கவலை சிலருக்கு எழுந்துள்ளது.
செயற்கையான ரசாயனப் பொருள்கள் மூலம் மணமூட்டப்பட்ட மெழுகுவர்த்திகளை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும்போது தீங்கு நேரும் என்கின்றனர் வல்லுநர்கள்.
இத்தகைய மெழுகுவர்த்திகள் எரியாதபோதும் ஓர் அறையில் உள்ள காற்றின் தரத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே இயற்கையான முறையில் உயர்தர நறுமண எண்ணெய்களைக் கலந்து மணமூட்டப்பட்ட மெழுகுவர்த்திகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும்படி வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
குறிப்பாக தேன்மெழுகு காற்றின் தரத்தை மேம்படுத்த உதவக்கூடியது என்பதை அவர்கள் சுட்டினர். இதிலிருந்து வெளியாகும் வேதிப்பொருள் நச்சுப் பொருள்கள், மாசடையச் செய்யும் பொருள்கள் ஆகியவற்றுடன் கலந்து காற்றிலிருந்து அவற்றை நீக்க உதவுகின்றது. இதனால் காற்றின் தரம் மேம்படும். அறையின் அளவு, காற்றோட்டம் ஆகிய அம்சங்களையும் கவனித்தல் அவசியம்.
தகவல், படம்: இணையம்

