பேருந்துக் கவிமாலை: சீனப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

1 mins read
5d1d1974-c73f-4b43-bad6-7c9ab188d59b
-

மாதத்­தின் இறுதி சனிக்­கி­ழமை மாலை­யில் தேசிய நூல­கத்­தில் நிகழ்ச்சி படைக்­கும் கவி­மாலை அமைப்பு, ஆண்­டு­தோ­றும் சீனப்­ புத்­தாண்­டினை ஒட்டி, பேருந்­துக் கவி­மாலை என்ற நிகழ்ச்­சியை நடத்­தி­வருகிறது.

அந்த வகை­யில், இம்­மா­தம் 22ஆம் தேதி பேருந்­துக் கவி­மாலை நிகழ்ச்சி நடை­பெற்­றது. கவி­மா­லைக் கவி­ஞர்­களும் அவர்களின் குடும்­பத்­தி­ன­ரும் தேக்­கா­வில் இருந்து கிளம்பி பேருந்து மூலம் ரைஃபிள் ரேஞ்ச் இயற்­கைப் பூங்­கா­விற்­குச் சென்­ற­னர்.

பேருந்து பின்­னர் லேப்­ர­டோர் பூங்­கா­வைச் சென்­ற­டைந்­தது. ஏறத்­தாழ 75 பேர் இந்­நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­தாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

மதிய உண­வுக்­குப்­பின் தமிழ்­சார்ந்த விளை­யாட்­டு­களும் போட்­டி­களும் நடத்­தப்­பட்டு பரி­சு­களும் வழங்­கப்­பட்­டன. மாலைச் சிற்­றுண்­டி­யு­டன் நிகழ்ச்சி நிறை­வு­பெற்­றது.

வயது வேறு­பா­டின்றி அனை­வ­ரும் நிகழ்­வு­களில் ஆர்­வத்­து­டன் கலந்­து­கொண்­ட­னர். நிகழ்ச்சி ஆரோக்­கி­ய­மான போட்­டித்­தன்­மைக்­குப் பேருந்­து­த­லாக அமைந்­த­தா­கப் பங்­கேற்­றோர் கூறி­னர்.

மனங்­களில் மகிழ்­வுப் பூக்­களை நிரப்­பிக்­கொண்ட கவி­ஞர்­க­ளு­டன் மீண்­டும் தேக்­காவுக்குத் திரும்­பி­யது பேருந்து.

கவி­ஞர்­களை ஒருங்­கி­ணைத்­தல், கல­க­லப்­பான விளை­யாட்­டு­கள் என ஏற்­பாட்­டுப் பணி­களில் கைகொ­டுத்­த­னர் கவி­ஞர்­கள் சேவ­க­னும் அ. பிரபா தேவி­யும்.

புது­மைத்­தேனி மா. அன்­ப­ழ­கன், கவி­மா­லைத் தலை­வர் இன்பா இரு­வ­ரும் பேருந்துக் கவிமாலை நிகழ்ச்­சியை வழி­ந­டத்­தி­னர்.

செய்தி: கவிமாலை