சமூக ஊடகங்களில் பிள்ளையைப் பற்றி பகிர்ந்துகொள்வது...

சமூக ஊடகங்களில் பிள்ளையைப் பற்றி பகிர்ந்துகொள்வது...

2 mins read
773e089d-6220-408c-bf50-d6de493e08fd
-
Google News Preferred Icon

பெற்­றோர் தங்­க­ளின் பிள்­ளை­கள் அடை­யும் மைல் கல்­க­ளைப் பதி­வு­செய்­யும் பழக்­கம் இன்­றைய தொழில்­நுட்ப யுகத்­தில் பர­வ­லா­கவே உள்­ளது.

"இன்று என் மகள் தன் 'ஓ' நிலை முடி­வு­க­ளைப் பெற்­றுக்­கொள்­கி­றார்," என்று அண்­மை­யில் உள்­ளூர் பிர­ப­லம் ஒரு­வர் தம் மக­ளு­டன் ஏற்­பட்ட அனு­ப­வத்­தைச் சமூக ஊட­கங்­களில் பகிர்ந்­து­கொண்­டார். ஆனால், தன் தேர்வு முடி­வு­கள் ஏமாற்­ற­மாக இருந்­த­தால் அந்த மகள் கண்­ணீர் விட்­டார். அதை­யும் அந்­தத் தாயார் பதி­வு­செய்து, "முடிவை யாரா­லும் மாற்ற முடி­யாது. ஆனால் நம் செயல்­பா­டு­களை எண்­ணிப் பார்த்து அடுத்த முறை மேலும் சிறப்­பா­கச் செய்­ய­லாம்," என்று ஆறு­தல் அளித்­தார்.

இந்­தக் காணொளி 'டிக்­டாக்' தளத்­தில் மிகப் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டது. மக­ளுக்கு ஆறு­தல் கூறிய கூட்­டத்­தைக் காட்­டி­லும், மன­மு­டைந்து போயி­ருந்த அந்த மக­ளைக் காணொ­ளிப் பதி­வு­செய்த அந்த தாயாரை இணை­ய­வா­சி­கள் வெகு­வா­கச் சாடி­னர்.

பெற்­றோர் என்ற நிலை­யில் நாம் நம் பிள்­ளை­க­ளைப் பற்றி சமூக ஊடக நண்­பர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­ளும் அதே­வே­ளை­யில் அள­வுக்கு அதி­க­மான தக­வல்­களை நம்மை அறி­யா­ம­லேயே நம் பிள்­ளை­க­ளைப் பற்றி கசி­ய­வி­டு­கி­றோமா என்ற ஒரு சூழ்­நிலை நில­வி­வ­ரு­கிறது.

சமூக ஊட­கங்­களில் இனி­மை­யான நினை­வு­க­ளைப் பதி­வு­செய்­வ­தில் தவ­றில்லை என்று இக்­கா­லப் பெற்­றோர் எண்ணி இருக்க, பிள்­ளை­க­ளுக்கு இது ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்­கின்­ற­னர் நிபு­ணர்­கள்.

இணைய அச்­சு­றுத்­தல், தொந்­த­ரவு அளித்­தல், அடை­யா­ளத் திருட்டு போன்ற குற்­றங்­கள் நேர்­வ­தற்கு இது வழி­வி­ட­லாம்.

இவ்­வாறு அள­வுக்கு அதி­க­மா­கப் பெற்­றோர் தங்­கள் பிள்­ளை­க­ளைப் பற்றி பகிர்ந்­து­கொள்­ளும் போக்­கால் 2030ஆம் ஆண்­டுக்­குள் மூவ­ரில் இரு இளை­யர்­கள் அடை­யாள மோச­டிக்கு ஆளா­க­லாம் என்று 2018ல் 'பார்­கி­லேஸ் பேங்க்' முன்­னு­ரைத்­தது.

பிள்­ளை­கள் கிடு­கி­டு­வென வளர்ந்­து­வி­டு­வ­தால் நினை­வ­லை­க­ளைப் பதி­வு­செய்­வ­தற்கு இத்­த­கைய சமூக ஊட­கத் தளங்­கள் உத­வு­வ­தா­கச் சிலர் கூறி­னா­லும், மிக­வும் முக்­கி­ய­மான தக­வல்­கள் அந்­தப் பதி­வு­களில் வெளி­யி­டப்­பட்­டால் அறி­மு­க­மில்­லா­த­வர்­கள்­கூட அந்­தத் தக­வல்­க­ளைத் தவ­றான முறை­யில் பயன்­ப­டுத்­த­லாம்.

'இதை நான் எதற்­காக பதிவு செய்­கி­றேன்?' என்ற கேள்­வியை முத­லில் பெற்­றோர் கேட்­டுக்­கொள்ள வேண்­டும். பல­ரும் பார்த்து ஒரு 'லைக்' போட வேண்­டும் என்­ப­தற்­காக மட்­டுமே அந்­தப் பதிவு என்­றால், அப்­ப­தி­வால் ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வு­க­ளைப் பெற்­றோ­ரும் பிள்­ளை­களும் சந்­திக்­கத் தயாரா என்­பதை நினைத்­துப் பார்க்க வேண்­டும் என்­கின்­ற­னர் நிபு­ணர்­கள்.

பிள்ளை பள்­ளிக்­குச் செல்­லும் முதல் நாளன்று எடுக்­கப்­பட்ட ஒரு படத்தை பெற்­றோர் சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றம் செய்­வ­தன் மூலம் மற்­ற­வர்­க­ளுக்கு அந்­தப் பிள்­ளை­யின் தோற்­றம், பெயர், பள்ளி போன்­ற­வற்­றைப் பற்­றிய விவ­ரங்­கள் தெரி­ய­வ­ரும். இத­னால் மோச­டி­கள் நிக­ழக்­கூ­டும். எனவே, முக்­கி­யத் தக­வல்­களை வெளி­யி­டாத வண்­ணம் பதி­வு­கள் இருத்­தல் அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது.

பிள்ளை வளர்ந்­த­பின், அந்­தப் பதிவு அவ­ருக்கு இனி­மை­யான நினை­வாக இருக்­குமா என்­பதை இனி எண்­ணிப் பார்த்­து­விட்டு பதி­வு­செய்­வதே சிறந்­தது.

செய்தி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

படம்: வெக்டீசி