என்பிஎஸ் பள்ளியின் தமிழ் இமயம் விழா

2 mins read
13070b62-15f1-40ca-b644-209871c4489c
இளை­யர்­க­ளி­டையே தமிழ் மொழிப் புழக்­கத்­தை­யும் மொழி­மீது அவர்­க­ளுக்­குள்ள ஆர்­வத்­தை­யும் ஈடு­பாட்­டை­யும் வளர்க்க புத்­தாக்க முறை­யில் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளா­கப் போட்­டி­களை நடத்­தி­வ­ரு­வ­தா­கப் பள்ளி குறிப்­பிட்­டது. படம்: ஃபேஸ்புக் -

என்­பி­எஸ் அனைத்­து­ல­கப் பள்­ளி­யின் என்­பி­எஸ் தமிழ் இம­யம் விழா 2023 இவ்­வாண்டு ஆறா­வது முறை­யாக நடை­பெற உள்­ளது. 'விழா­வில் சொல்! வெல்!' என்ற பேச்­சுப் போட்­டி­யும் 'குற­ளின் குரல்' என்ற திருக்­கு­றள் போட்­டி­யும் இம்­மா­தம் 18ஆம் தேதி காலை ஒன்­பது மணிக்கு நடை­பெ­றும்.

போட்­டி­க­ளுக்கு இம்­மா­தம் 12ஆம் தேதிக்கு முன்பு https://forms.gle/j7hVv3SfhD1f4ocN6 என்ற இணைப்­பின்­மூ­லம் மாண­வர்­கள் பதிவு செய்­து­கொள்­ள­லாம். மேல் விவ­ரங்­க­ளுக்கு 9007 4523 எனும் எண்­ணில் தொடர்­பு­கொள்­ள­லாம்.

எண் 95 ஜாலான் யூனோஸ் சாலை­யில் என்­பி­எஸ் அனைத்­து­ல­கப் பள்­ளி­யின் உயர்­நிலை பள்ளி வளா­கத்­தில் போட்டி நடை­பெ­றும்.

இளை­யர்­க­ளி­டையே தமிழ் மொழிப் புழக்­கத்­தை­யும் மொழி­மீது அவர்­க­ளுக்­குள்ள ஆர்­வத்­தை­யும் ஈடு­பாட்­டை­யும் வளர்க்க புத்­தாக்க முறை­யில் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளா­கப் போட்­டி­களை நடத்­தி­வ­ரு­வ­தா­கப் பள்ளி குறிப்­பிட்­டது.

இரண்டு போட்­டி­க­ளி­லும் இரண்டு பிரி­வு­களில் மாண­வர்­கள் பங்­கு­பெ­ற­லாம். பிரிவு ஒன்­றில் உயர்­நிலை 1-2 மாண­வர்­களும் அனைத்­து­ல­கப் பள்­ளி­களில் ஆறாம் வகுப்­பி­லி­ருந்து எட்­டாம் வகுப்­பு­வரை பயி­லும் மாண­வர்­களும் கலந்­து­கொள்­ள­லாம். பிரிவு இரண்­டில் உயர்­நிலை 3-4 மாண­வர்­களும் அனைத்­து­ல­கப் பள்­ளி­களில் ஒன்­ப­தாம் வகுப்­பி­லி­ருந்து 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாண­வர்­களும் பங்கு பெற­லாம்.

'சொல்! வெல்!' போட்­டி­யின் பிரிவு 1இன் தலைப்பு "இன்­றைய இளை­யர்­கள் தம் பண்­பாட்டை நன்கு அறிந்­துள்­ள­னர்/இல்லை" என்­ப­தா­கும். பிரிவு 2இன் தலைப்பு "பகு­தி­நேர வேலைக்­குச் செல்­வ­தால் மாண­வர்­கள் பொறுப்­பு­ணர்­வோடு இருக்­கின்­ற­னர்/இல்லை" என்­ப­தா­கும்.

ஒவ்­வொரு பேச்­சா­ள­ருக்­கும் இரண்டு நிமி­டங்­கள் கொடுக்­கப்­படும். முதல் நிமி­டத்­தில் கொடுக்­கப்­பட்­டுள்ள தலைப்பை ஒட்­டி­யும் இரண்­டா­வது நிமி­டத்­தில் தலைப்பை வெட்­டி­யும் பேச வேண்­டும்.

'குற­ளின் குரல்' திருக்­கு­றள் போட்­டி­யின் பிரிவு 1இல் அழுக்­கா­றாமை, வெஃ­காமை, கல்வி, அவை­யஞ்­சாமை, ஒப்­பு­ர­வ­றி­தல் ஆகிய அதி­கா­ரங்­களில் இருந்து கேள்­வி­கள் கேட்­கப்­படும். பிரிவு 2இல் நடு­நி­லைமை, தீவி­னை­யெச்­சம், கல்­லாமை, குற்­றங்­க­டி­தல், இட­ன­றி­தல் ஆகிய அதி­கா­ரங்­களில் இருந்து கேள்­வி­கள் கேட்­கப்­படும்.

ஒரே சுற்­றில் நடத்தி முடிக்­கப்­படும் இரு போட்­டி­க­ளி­லும் மதிப்­பெண்­க­ளின் அடிப்­ப­டை­யில் முதல் மூன்று நிலை­யில் உள்ள பள்­ளி­க­ளுக்குப் பரி­சு­கள் வழங்­கப்­படும்.