கான பிரகாசம்: இளையர் இசை விருந்து

கான பிரகாசம்: இளையர் இசை விருந்து

2 mins read
7eb730b2-c267-493c-bfc3-e3c0677530bd
-

ஆ. விஷ்ணு வர்­தினி

நவீன, பாரம்­ப­ரிய, கலவை பாணி­யி­லான இசை முழங்­கிய ஒரு நிகழ்ச்­சி­யாக 'கான பிர­கா­சம்' கச்­சேரி அமைந்­தது. புதி­தாக அமைக்­கப்­பட்ட சிங்­கப்­பூர் இந்­திய இளை­யர் பல்­லி­யல் இசைக்­குழு கடந்த ஞாயி­றன்று படைத்த இக்­கச்­சேரி, 'அவர் தெம்­ப­னிஸ் ஹப்'ல் ஏறத்­தாழ 350 பார்­வை­யா­ளர்­க­ளின் முன்­னி­லை­யில் நடந்­தே­றி­யது.

வீணை, வய­லின், மிரு­தங்­கம் முத­லிய வாத்­தி­யக் கலை­ஞர்­கள், பாடல் குழு­வி­னர் உட்­பட 30 இளை­யர்­கள் நிகழ்ச்­சி­யைப் படைத்­த­னர். 'கான பிர­கா­சம்' என்ற தங்­க­ளின் முதல் இசைப் படைப்­புக்­காக பல மாதம் பயிற்சி மேற்­கொண்டு வந்­துள்­ள­னர். ஒன்­றரை மணி நேரம் நீடித்த இக்­கச்­சே­ரி­யில் 10 பாடல்­கள் இடம்­பெற்­றன.

குறிப்­பாக, 20ஆம் நூற்­றாண்­டில் இந்­தி­யா­விலி­ருந்து சிங்­கப்­பூர் வந்­த­டைந்­தோ­ரின் பய­ணத்தை விவ­ரிக்­கும் 'கட­லின் மீது' எனும் குரல் இசை படைப்பு சிறப்­பங்­க­மாக அமைந்­தது.

திரு­மதி லட்­சுமி பால­கி­ருஷ்­ண­னின் வரி­கள், திரு­மதி ராதா விஜ­ய­னின் இசை­ய­மைப்பு, ஆகி­ய­வற்­று­டன் திரு­மதி விக்­னேஸ்­வரி வடி­வ­ழ­கன் பாட­லுக்­கான குரல் அமைப்­பு­களை வகுத்­தி­ருந்­தார். 'கிராஸ்­ரோட்ஸ்' என்ற தலைப்­பி­லான சீன-இந்­திய படைப்­பும் மக்­க­ளைக் கவர்ந்­தது.

இசைக்­கு­ழு­வில் மிரு­தங்­கம் வாசித்து வரும் 22 வயது அனி­ருத் பால­சுப்­ர­ம­ணி­யம், இசை வல்­லு­நர்­க­ளி­டம் இருந்து நேர­டி­யான வழி­காட்டு­தல் பெற்­றதை நல்ல அனு­ப­வ­மாகக் கரு­தி­னார். இசைத்­து­றை­யில் அனு­ப­வம் கொண்ட ஐந்து பயிற்­று­விப்­பா­ளர்­கள் இளை­யர்­க­ளுக்கு இப்­படைப்­புக்­கான பயிற்­சி­யில் வழி­காட்­டி­னர்.

"வாத்­தி­யங்­களும் பாட­கர் குழு­வும் இணைந்து செயல்­ப­டு­வ­தில் உள்ள சிக்­கல்­க­ளைப் புரிந்­து­கொண்­டேன். கடு­மை­யான பயிற்சி மேற்­கொண்டு ஒரு குழு­வாக ஒன்­றி­ணைந்­தோம். இது­போன்ற ஒரு தளத்­தில் இசை படைத்­தது தன்­னம்­பிக்கை ஊட்­டு­வ­தாக உள்­ளது," என்­றார் அவர்.

முதல்­மு­றை­யாக குழு­சார்ந்த ஓர் இசை நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டுள்­ள­தாக 13 வயது பாட­கர் ரேனா சுரேஷ் குமார் பகிர்ந்­து­கொண்­டார். எட்டு ஆண்­டு­க­ளாக இசை பயின்று வரும் இவர், இந்த இசைப் பய­ணத்­தில் சக குழு உறுப்­பி­னர்­க­ளு­டன் நல்­லு­றவை வளர்த்­துக்­கொண்­ட­தில் மகிழ்ச்சி தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் பல்­லி­யல் இசைக்­கு­ழு­வின் நிறு­வ­ன­ரும் நடத்­து­ந­ரு­மான திரு­வாட்டி லலிதா வைத்­தி­ய­நா­தன், இக்­குழு கடந்த 37 ஆண்­டு­களில் சேக­ரித்­துள்ள வளங்­க­ளை­யும் அனு­ப­வங்­க­ளை­யும் பய­னுள்ள முறை­யில் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்­குக் கொண்டு செல்­ல­வேண்­டும் என்ற நோக்­கில் இசை­யார்­வம் கொண்ட இளை­யர்­களை இத்­த­ளத்­தில் ஒன்­றி­ணைத்­துள்­ள­தாகக் கூறி­னார்.