ஆங்கர்வேல் சமூக மன்ற பொங்கல் விழா

ஆங்கர்வேல் சமூக மன்ற பொங்கல் விழா

2 mins read
c66a61be-d239-496d-956f-30599ce8e6e0
-

ஆங்­கர்­வேல் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வின் ஏற்­பாட்­டில் பொங்­கல் விழாவை முன்­னிட்டு இம்­மா­தம் 5ஆம் தேதி பல்­வேறு கலை­நி­கழ்ச்­சி­கள் இடம்­பெற்­றன.

பொங்­கல் வைக்­கும் நிகழ்ச்­சி­யைத் தொடர்ந்து, ஆடல், பாடல் நிகழ்ச்­சி­கள், சிறு­வர்­களின் சிலம்­பாட்­டம், பெண்­க­ளின் கும்­மி­யாட்­டம் முத­லிய பாரம்­ப­ரிய நிகழ்ச்­சி­களில் மக்­கள் பங்­கு­பெற்று மகிழ்ந்­த­னர்.

செங்­காங் மேற்­குத் தொகுதி குடி­யி­ருப்­பா­ளர்­கள் 300க்கு மேற்­பட்­டோர் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

சிறப்புப் பட்­டி­மன்­றத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிள்­ளை­களை நற்­பண்­பு­டை­ய­வர்­க­ளாக வளர்க்க, பெரி­தும் பின்­பற்ற வேண்­டி­யது கண்­டிப்­பான அணு­கு­மு­றையா? கனி­வான அணு­கு­மு­றையா? என்ற தலைப்­பில் முனை­வர் மன்னை ராஜ­கோ­பா­லன் நடுவராகச் செயல்பட்ட கலகலப்பான பட்டிமன்றம் நடை­பெற்­றது.

இன்­றைய சமூ­கச் சூழ­லில் பிள்­ளை­கள் திசை­மா­றிப் போகா­மல் நேர்­மை­யோடு இருக்க 'கண்­டிப்­பான அணு­கு­மு­றையே!' சிறந்­தது என்று திரு­மதி ஸ்வர்­ண­லதா ஆவு­டை­யப்­பன் தலை­மை­யில், திரு சிலம்­ப­ர­சன் பரு­சப்­புலி, திரு­மதி வானதி பிர­காஷ் ஆகி­யோர் பங்­கு­பெற்ற அணி வாதிட்­டது.

திரு­மதி கோவிந்­த­ராஜு சுமதி தலை­மை­யில், திரு இரா­மன் குருந்­த­லிங்­கம் நிர்­மல், செல்வி மோகன் ஹரி­வர்த்­தினி அணி­யி­னர், கனி­வான அணு­கு­மு­றையே சிறந்­தது என வாதிட்­ட­னர்.

பிள்­ளை­கள் பெற்­றோ­ரு­டன் அணுக்­க­மான உற­வு­களை வளர்த்­துக்­கொண்டு தன்­னம்­பிக்கை உடை­ய­வர்­க­ளா­கத் திகழ்­வ­தற்கு கனி­வான அணு­கு­மு­றையே சிறந்­தது என்­பதை அவர்­கள் முன்­வைத்­த­னர்.

இரு­த­ரப்பு வாதங்­க­ளை­யும் கேட்ட நடு­வர், இன்­றைய போட்­டித்­தன்மை வாய்ந்த உல­கில் பல சவால்­களை எதிர்­நோக்­கும் பிள்­ளை­க­ளுக்கு பெற்­றோர்­க­ளின் கனி­வான அணு­கு­மு­றையே துணை­பு­ரி­யும் என்று தீர்ப்பு வழங்­கி­னார்.

விழா­வின் சிறப்பு விருந்­தி­ன­ராக செங்­காங் குழுத்­தொ­குதி அடித்­தள அமைப்­பு­க­ளின் ஆலோ­ச­கரான டாக்­டர். லாம் பின் மின் கலந்­து­கொண்­டார்.

பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்­பா­டு­களை ஆங்கர்வேல் சமூக மன்ற இந்­திய நற்­பணிச் செயற்குழுத் தலை­வர் பொ. சந்­தி­ர­சே­க­ரும் செய­லவை உறுப்­பி­னர்­களும் முன்­நின்று நடத்­தி­னர்.