பன்னாட்டுத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

பன்னாட்டுத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

1 mins read

ஐக்­கிய நாட்­டுக் கல்வி, அறி­வி­யல், கலா­சார நிறு­வ­னத்­தால் அறி­விக்­கப்­பட்­டுள்ள பன்­னாட்­டுத் தாய்­மொழி நாளை தமி­ழர் பேரவை தலை­மை­யில் சிங்­கப்­பூர்த் தமிழ் அமைப்­பு­கள் ஒன்­றி­ணைந்து கொண்­டா­ட­வுள்­ளன.

வரும் 26ஆம் தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு உம­றுப் புல­வர் தமிழ் மொழி நிலை­யத்­தில் அந்­நி­கழ்ச்சி நடை­பெ­றும்.

அதில் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தமி­ழர் பேர­வை­யின் மதி­யு­ரை­ஞ­ரு­மான திரு. ஆர். ரவீந்­தி­ரன் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொள்­வார்.

உல­கில் உள்ள பல்­வேறு மொழி­க­ளை­யும் பன்­மு­கக் கலா­சா­ரங்­க­ளை­யும் பாது­காக்­கும் நோக்­கில் பன்­னாட்­டுத் தாய்­மொழி நாள் 2000ஆம் ஆண்­டி­லி­ருந்து முதல் பிப்­ர­வரி 21 அன்று உல­கம் முழு­வ­தும் கொண்­டா­டப்­பட்டு வருகிறது,

தமிழ் மொழியை சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து வாழும் மொழி­யாக வைத்­தி­ருக்­கப் பாடு­பட வேண்டும் என்ற நினை­வூட்­ட­லாக, பல்­வேறு தமிழ் அமைப்­பு­கள் இணைந்து இந்நிகழ்­வை நடத்தவுள்ளன.

சிங்­கப்­பூ­ரில் உல­கத் தாய்­மொழி நாள் கடந்த ஆண்டு முதன் முறை­யாக கொண்­டா­டப்­பட்­டது. சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் ஏற்­பாடு செய்த அந்­நி­கழ்­வில் 21 அமைப்­பு­கள் பங்­கேற்­றன.

இவ்­வாண்டு நிகழ்ச்­சி­யில் தாய்­மொழி பற்­றிய கவிதை, குறு­நா­ட­கம், கலந்­து­ரை­யா­டல் உள்­ளிட்டவை இடம்­பெ­றும்.

செய்தி: தமி­ழர் பேரவை