தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சேட்ஜிபிடி: ஆதரவா ஆபத்தா...

3 mins read
677691e8-e498-4adb-a80a-64886802befa
-

ரச்­சனா வேலா­யு­தம்

'சேட்­ஜி­பிடி' (ChatGPT) என்ற செயற்கை அறி­வுத்­தி­றன் மென்­பொ­ருள் மூலம் பள்­ளி­களில் பாடம் கற்­பிக்க, கல்வி அமைச்சு ஆசி­ரி­யர்­க­ளைத் தயார் செய்து வரு­கிறது. செயற்கை நுண்­ணறிவு காலப்­போக்­கில் பர­வ­லாகப் பயன்­ப­டுத்­தப்­படும் நிலை­யில், மாண­வர்­க­ளுக்கு அதைச் சரி­யான முறை­யில் கையா­ளச் சொல்­லிக் கொடுப்­பது நம் பொறுப்பு என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தமது நாடா­ளு­மன்ற உரை­யில் கூறி­னார்.

மாண­வர்­க­ளுக்கு அடிப்­படை அறி­வும் சிந்­த­னைத் திற­னும் இருக்­கும் நிலை­யில் அறி­வி­யல் நுண்­ண­றிவை அவர்­கள் தங்­களுக்­குச் சாத­க­மா­கப் பயன்­படுத்­திக்­கொள்ள முடி­யும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சான் பிரான்­சிஸ்கோ ஆராய்ச்சி நிறு­வ­ன­மான 'ஓபன் ஏஐ', இந்த 'சேட்­ஜி­பிடி'யை உரு­வாக்­கி­யதை அடுத்து அதைக் கடந்த நவம்­ப­ரில் பொது­மக்­களின் இல­வ­சப் பயன்­பாட்­டுக்கு வெளி­யிட்­டும் இருந்­தது.

கணக்­குக் கேள்­வி­க­ளுக்­குப் பதில் கண்­ட­றி­தல், இசை­ய­மைத்­தல், கணி­னிக் குறி­யீட்டு மொழி­யைச் செம்­மைப்­ப­டுத்­து­தல், கட்­டுரை எழு­து­தல் போன்ற செயல்­பா­டு­களைத் திற­மை­யா­கக் கையாளும் திறன் பெற்­றது இத்­தொ­ழில்­நுட்பம்.

இதற்­கி­டையே மாண­வ­ரின் கற்­ப­னை­யைத் தூண்­டும் வகை­யில் தேர்­வு­களில் சிந்­திக்க வைக்­கும் கதை வடிவ வினாக்­கள் கேட்­கப்­ப­டும்­போது இந்­தத் தொழில்­நுட்­பத்­தின் தேவை குறை­கிறது என்று சமூக அறி­வியல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சட்­டத் துறை­யைச் சேர்ந்த மூத்த விரி­வு­ரை­யா­ளர் அல்லி உத்திராபதி கூறி­னார்.

"இந்­தச் செயற்கை நுண்­ணறிவைப் பயன்­ப­டுத்தி வீட்­டுப்­பா­டங்­க­ளை­யும் தேர்­வு­க­ளை­யும் எழு­து­வது, எழுத்­துத் திருட்டு என்­பதை மாண­வர்­களும் அறி­வர்," என்­றார் அவர்.

இது­வரை சேட்­ஜி­பிடி தொடர்­பான மோச­டி­கள் சிங்­கப்­பூ­ரில் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று குறிப்­பி­டப்­பட்­டது. எனி­னும் மோச­டி­க­ளைத் தவிர்க்க நாம் தயா­ராக இருக்க வேண்­டும் என்று சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த முனை­வர் மணிவண்ணன் முரு­கே­சன் கூறி­னார்.

"சேட்­ஜி­பி­டிக்­குப் புரி­யா­த­வண்­ணம் சுய கருத்­து­களை ஆரா­யும் கேள்­வி­க­ளைப் பல்­க­லைக்­க­ழ­கம் தயா­ரிக்க முயற்சி செய்­கிறது. தற்­போது இந்­தத் தொழில்­நுட்­பம் தமிழ் கேள்­வி­க­ளுக்­குச் சரி­யா­கப் பதி­ல­ளிக்­கும் திறன் இல்­லா­த­தால் தமிழ் பாடங்­க­ளுக்கு இதைப் பயன்­ப­டுத்த முடி­யாது.

எனி­னும், வளர்ந்­து­வ­ரும் இந்­தத் தொழில்­நுட்­பத்தைத் தட்­டிக்­கழிக்­கா­மல் அதன் விளை­வு­களை மாண­வர்­க­ளுக்கு எடுத்­துக் கூற வேண்­டும்," என்­றார் தமிழ்­மொழி மற்­றும் இலக்­கி­யம், மனி­த­வி­யல் மற்­றும் நடத்தை அறி­வி­யல் பள்­ளித் தலை­வ­ரான இவர்.

கடி­ன­மான கேள்­வி­களை எளி­தான முறை­யில் சொல்­லிக் கொடுக்­கும் இந்த தொழில்­நுட்­பம், கருத்­துத் திருட்­டைக் கண்­ட­றி­யும் 'டர்­னிட்­டின்' (Turnitin) போன்ற சேவை­யால் கண்­ட­றிய முடி­யுமா என்ற அச்­சம் உள்­ளது என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழக இணைப்­பே­ரா­சி­ரி­யர் சித்ரா சங்­க­ரன் குறிப்­பிட்­டார்.

"கூகல், விக்­கி­பீ­டியா போல சேட்­ஜி­பி­டியை நாம் அறி­வுத்­திறனை வளர்க்­கப் பயன்­ப­டுத்­த­லாம். ஆனால், அது அளிக்­கும் விடை­க­ளைக் கண்­மூ­டித்­த­ன­மாக நம்­பா­மல் சரி­பார்க்க வேண்­டும். மனி­தர்­க­ளைப் போல விடை­ அளிக்­கும் இந்­தத் தொழில்­நுட்­பம் ஆசி­ரி­யர்­களை அச்­சு­றுத்­தி­னா­லும் பள்­ளி­யில் அதன் பயன்­பாட்­டைத் தடுக்க பல்­முனை அணு­கு­மு­றையை நாம் மேற்­கொள்ள முயற்சி செய்­கி­றோம்," என்று குறிப்­பிட்­டார்.

தமது பல்­க­லைக்­க­ழ­கப் பாடங்­க­ளுக்கு சேட்­ஜி­பி­டி­யைப் பயன்­ப­டுத்­தும் 24 வயது ஷாம் சி, இந்­தச் செயற்கை நுண்­ண­றிவு தன் கல்­விப் பய­ணத்தை சுல­ப­மாக்கி உள்­ள­தா­கக் கூறி­னார்.

"எனக்­குப் புரி­யாத கேள்­வி­களை இந்த சேட்­ஜி­பிடி மூலம் உட­னுக்­கு­டன் கேட்டு தெரிந்­து­கொள்­கி­றேன். ஒரு வாரம் கழித்து வகுப்­பில் ஆசி­ரி­யர்­களின் பதி­லுக்­காக இனி நான் காத்­தி­ருக்­கத் தேவை­யில்லை," என்று சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் பொரு­ளி­யல் பட்­டப் படிப்பை மேற்­கொள்­ளும் ஷாம் கூறி­னார்.

இந்­தச் செயற்கை நுண்­ணறிவு நமக்கு உத­வும் என்­றா­லும் இது நம்மை அடி­மை­யாக்­கி­வி­ட­லாம் என்ற பயம் தனக்­குள்­ள­தாக 23 வயது பிர­திஷா அ. குறிப்­பிட்­டார்.

"இதை எளி­மை­யா­கப் பயன்­படுத்த முடி­கிறது என்­றா­லும் சேட்­ஜி­பிடி அளிக்­கும் பதில்­கள் சரியா தவறா என்று ஆராயாமல் அப்படியே நம்பிவிட முடியாது. வீட்­டுப்­பா­டங்­களைச் சுய­மா­கச் செய்­வ­தால் என் அறி­வுத்­தி­றன் வளர்­கிறது. ஆனால் கணி­னி­யில் வரும் பதில்­க­ளைப் புரிந்துகொள்­ளாமல் எழு­து­வது எந்­திர வாழ்க்­கைக்­குச் சம­மா­கும்," என்று கூறி­னார் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மூன்­றாம் ஆண்டு படிக்­கும் இவர்.

செயற்கை நுண்­ண­றிவை நம் வேலை­யி­லும் நம் வாழ்க்­கை­யிலும் ஒன்­றி­ணைப்­ப­தால் மாற்­றங்­கள் பெரி­த­ள­வில் ஏற்­ப­டவே செய்­யும். இந்­நி­லை­யில் இந்த 'சேட்­ஜி­பிடி' அந்­தப் பெரும் மாற்­றங்­க­ளுக்கு ஒரு முதல் படி என்று சொல்­வதே தகும்.