ஆய்வு: வேலையிடத்தில் ஊழியர்கள் கண்ணீர் விடுவதில் தவறில்லை

ஆய்வு: வேலையிடத்தில் ஊழியர்கள் கண்ணீர் விடுவதில் தவறில்லை

2 mins read
c0001120-d61d-4666-9211-fc9798347c52
-

வேலை பார்க்­கும் இடத்­தில் இதற்­கு­முன் நீங்­கள் அழு­தி­ருந்­தால், அதைப் பற்றி பின்­னர் யோசித்­துப் பார்க்­கும்­போது உங்­க­ளுக்­குச் சற்று சங்­க­ட­மாக இருக்­க­லாம். உங்­க­ளைப் பற்றி வேலை நண்­பர்­கள் என்ன நினைப்­பார்­கள், உங்­க­ளின் திற­மை­யைப் பற்றி அது­வரை அவர்­கள் நினைத்­தி­ருந்­தது பாதிக்­கப்­ப­டுமா என்­றெல்­லாம் நீங்­கள் கவ­லைப்­ப­ட­லாம்.

இத்­த­கைய சூழ­லில் அடுத்து எவ்­வாறு வலி­மை­யு­டன் மீண்­டு­வ­ர­லாம் என்­பதே முக்­கி­யம்.

1. அழு­வது உங்­கள் வேலைக்கு

உலை வைக்­காது

வேலை­யி­டத்­தில் அழு­வ­தால் உங்­களின் வாழ்க்­கைத்­தொ­ழில் எவ்­வ­கை­யி­லும் பாதிப்­ப­டை­யாது.

நாம் நினைப்­ப­தை­விட நம்­மைச் சுற்­றி­யுள்­ள­வர்­கள் கூடு­தல் அனு­தா­பம் மிக்­க­வர்­கள் என்பதே உண்மை.

மூத்த நிர்­வா­கி­கள் 2,000 பேரி­டையே நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்­றில், அவ்­வப்­போது அழு­வ­தில் தவ­றே­தும் இல்லை என்று 44 விழுக்­காட்­டி­னர் கூறி­யி­ருந்­த­னர்.

வேலை­யி­டத்­தில் நம்­மைப் பற்றி மற்­ற­வர்­கள் கொண்­டுள்ள எண்­ணம் அழு­வ­தால் மாறாது என்று 30 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

அத­னால் முத­லில் நம்­மீது நாமே பரிவு காட்ட வேண்­டும். நம்மை நாமே கடு­மை­யாக விமர்­சித்­துக்­கொண்டு மற்­ற­வர்­கள் கூறும் குறை­க­ளைப் பெரிதுபடுத்தித் துவண்டு போகா­மல் பார்த்­துக்­கொள்­ள­லாம். உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­து­வ­தில் தவ­றில்லை.

2. சிறிது நேரம் அலு­வ­ல­கத்தை

விட்டு வெளி­யே­றுங்­கள்

ஒரு­வ­ரு­ட­னான உரை­யா­டல் உங்­களின் மனதைப் பாதிப்பதுபோல் இருந்தால் சிறிது நேரம் அவ்­வி­டத்தை விட்டு வெளி­யே­றி­வி­டுங்­கள்.

சிறிது மூச்­சுப் பயிற்­சி செய்தால் மனம் அமைதி பெறும், உணர்­வு­களும் கட்­டுக்­குள் இருக்­கும்.

3. அழு­த­தற்கு மன்­னிப்பு

கேட்­கத் தேவை­யில்லை

அலு­வ­ல­கத்­தில் அழுகை வந்­து­விட்ட பிறகு உங்­கள் எதிரே உள்­ள­வ­ரி­டம் 'அழு­வ­தற்கு மன்­னித்­துக்­கொள்­ளுங்­கள்' என்று கூற­வேண்­டாம். அது உங்­க­ளின் உணர்­வு­களை நீங்­கள் ஏற்­றுக்­கொள்­ளா­த­தற்­குச் சம­மா­கும்.

மேல­தி­காரி சொன்ன சொல்லோ மன­வு­ளைச்­சலோ, வேலை­யில் சிறந்து விளங்க வேண்­டும் என்ற கார­ணத்­தி­னால் கண்­ணீர் விட்­டீர்­கள் என்­பதை நீங்­களும் மற்­ற­வர்­களும் உண­ர்வதே முக்கியம்.

4. உதவி நாடத் தயங்­கா­தீர்

திடீ­ரென்று ஒரு­நாள் வேலை­யி­டத்­தில் அழுகை வந்­தால் அதை வழக்­கத்­திற்கு மாறா­னது எனக் கருத முடி­யாது. இருப்­பி­னும் அடிக்­கடி அலு­வ­ல­கத்­தில் அழு­து­கொண்­டி­ருக்­கும் பழக்­கம் உங்­க­ளுக்கு ஏற்­பட்­டால் மன­நல மருத்­து­வரை நாடு­வ­தில் தவ­றில்லை.

மனி­த­னுக்கு உணர்­வு­கள் இருப்­பது இயல்­பு­தான். அந்த உணர்­வு­க­ளைச் சரி­வர கையா­ளக் கற்­றுக்­கொண்­டால் நமது வலி­மை­யை­யும் தன்­னம்­பிக்­கை­யை­யும் பிறர் அறிந்­தி­டு­வர்.

வேலை­யி­டத்­தில் குறிப்பிட்ட சிலரால் உங்­களுக்கு அடிக்கடி மன­வு­ளைச்­ச­லும் அழுத்­த­மும் ஏற்­பட்­டால் அந்நபர்­க­ள் குறித்து உங்­க­ளின் மேல­தி­கா­ரி­யி­டம் தெரி­விப்பது நல்லது.

நமது வளர்ச்­சி­யை­யும் மன­ந­லத்­தை­யும் பாதிக்­கும் வண்­ணம் வேலை­யி­டம் அமைந்­தால், அத்­தகைய வேலைச் சூழல் தேவையா என்­ப­து குறித்­தும் நாம் சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.

செய்தி: இணையம்