ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு 2023

ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு 2023

2 mins read

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்­தும் ஆனந்த பவன் அம­ரர் மு.கு. இரா­மச்­சந்­திரா நினைவு புத்­த­கப் பரி­சுப் போட்டி, இவ்­வாண்­டும் நடை­பெற இருக்­கிறது.

அம­ரர் மு.கு. இரா­மச்­சந்­திரா நினைவு நாளை ஒட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பரி­ச­ளிப்பு விழா நடை­பெ­றும்.

சிறு­கதை, கவிதை, கட்­டுரை ஆகிய மூன்று துறை­களில் ஒன்­றைச் சேர்ந்த படைப்­புக்­குப் பரிசு வழங்­கப்­பட்டு வரும் நிலை­யில் இவ்­வாண்டு கவிதை நூலுக்­குப் பரிசு வழங்­கப்­ப­ட­ உள்­ளது.

அத­னால் 2020, 2021, 2022 ஆகிய மூன்று ஆண்­டு­களில் முதல் பதிப்­பாகப் பதிப்­பிக்­கப்­பட்ட கவிதை நூல்­க­ளின் 4 படி­க­ளைக் குடி­யு­ரிமை அல்­லது நிரந்­த­ர­வா­சத் தகுதி பெற்ற எழுத்­தா­ளர்­கள் இந்­தப் போட்­டிக்கு அனுப்பி வைக்க வேண்­டும்.

நூல்­களை அனுப்பி வைக்க இறுதி நாள் மார்ச் 31ஆம் தேதி­யா­கும்.

கவி­தைத் துறை­யில் பரிசு பெற்­ற­வர்­கள் மீண்­டும் கலந்­து­கொள்ள முடி­யாது என்­பதை நினை­வில் கொள்­ள­வும்.

மற்ற துறை­களில் பரிசு பெற்­ற­வர்­கள் இதில் கலந்­து­கொள்­ள­லாம்.

நூல்­களை அஞ்­ச­லில் அனுப்ப வேண்­டிய முக­வரி : Association of Singapore Tamil Writers, BLK 723 #13-149, Yishun St 71, Singapore 760723. அல்­லது பொரு­ளா­ளர் பிரே­மா­வி­டம் (HP No. 91696996) Aaria Creations, 32 Upper Dickson Road, Singapore 207491 என்­னும் முக­வ­ரி­யில் நேரி­லும் கொடுக்­க­லாம்.

சிங்­கப்­பூர், மலே­சியா, இந்­தியா ஆகிய மூன்று நாடு­களில் இருந்து மூன்று நடு­வர்­கள் சிறந்த நூலைத் தேர்ந்­தெ­டுக்க உத­வு­வார்­கள்.

அந்த நூலுக்கு 2,000 வெள்ளி ரொக்­க­மும் சான்­றி­த­ழும் வழங்­கப்­படும்.

போட்­டிக்­கான விதி­க­ளை­யும் விண்­ணப்­பப் படி­வத்­தை­யும் www.singaporetamilwriters.com எனும் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் இணை­யத் தளத்­தி­லி­ருந்­தும் பதி­வி­றக்­கம் செய்து­கொள்­ள­லாம்.

மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் நா. ஆண்­டி­யப்­பன் (97849105), கிருத்­திகா (kiruthikavirku@gmail.com) ஆகி­யோ­ரு­டன் தொடர்­பு­கொள்­ள­லாம்.