கவி­மாலை நடத்தும் கவி­தைப் போட்­டி­க­ள்

கவி­மாலை நடத்தும் கவி­தைப் போட்­டி­க­ள்

2 mins read

தமிழ்­மொ­ழி­விழா 2023ஐ முன்­னிட்டு வளர்தமிழ் இயக்­கம், தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக்­குழு மற்­றும் தேசிய நூலக வாரி­யத்­தின் ஆத­ர­வில் கவிமாலை அமைப்பு இவ்­வாண்­டும் கவி­தைப் போட்­டி­களை நடத்தும்.

மாண­வர்­க­ளின் தமி­ழாற்­றலை வளர்க்­கும் நோக்கில் உயர்­நி­லை­யில் பயி­லும் மாண­வர்­க­ளுக்­கான கவிதை, மற்­றும் மொழி­பெ­யர்ப்­புப் பயி­ல­ரங்கு நடத்தப்படும். தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­கான கவிதை சொல்­லும் போட்டி மற்­றும் பொது­மக்­க­ளுக்­கான கவி­தைப் போட்­டி­யும் நடைபெறும்.

கவி­தைப் பயி­ல­ரங்கும் போட்டியும்

கவி­தைப் பயி­ல­ரங்கு மற்­றும் போட்­டி­களில் உயர் நிலைப் பள்ளி, தொடக்­கக்­கல்­லூரி, பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள், தொழில் நுட்­பக் கல்­விக்­க­ழ­கங்­களில் பயிலும் மாண­வர்­கள் கலந்­து­கொள்ளலாம்.

கவி­தைப் பயி­ல­ரங்­கினை இசைக்­கவி இர­ம­ணன் வழி நடத்­துவார். கவி­தைப்­போட்­டிக்கு அழகு என்ற கருப்­பொ­ருளில் அரங்­கி­லேயே கவிதை எழு­த­வேண்­டும். முன்பதிவு செய்ய இறுதிநாள் நாளை 22ஆம் தேதியாகும்.

மொழி­பெ­யர்ப்­புப் பயி­ல­ரங்கு

மொழி­பெ­யர்ப்பு பயி­ல­ரங்­கி­னைத் தொடர்ந்து நடை­பெ­றும் போட்­டி­யில் தமிழ்க் கவி­தை­களை ஆங்­கி­லத்­தில் மொழி­பெ­யர்த்­தல் வேண்­டும்.

இவ்­விரு போட்­டி­களும் பிப்­ர­வரி 25ஆம் தேதி காலை 9 மணிக்கு ஜாலான் புசார் சமூ­க­மன்­றக் கலை­ய­ரங்­கத்­தில் நடை­பெ­றும். முன்­ப­தி­விற்கு http://tinyurl.com/ycefs597

தொடக்­கப்­பள்ளி மாண­வர்­களுக்கு

தொடக்­க­நிலை 1 முதல் 3 வரை பயி­லும் மாண­வர்­கள் சிங்­கப்­பூர் கவிஞர்­க­ளின் கவி­தை­க­ளைத் தேர்வு செய்து சொல்­ல­வேண்­டும்.

தொடக்க நிலை 4 முதல் 6 வரை பயி­லும் மாண­வர்­கள் காப்­பி­யங்­க­ளி­ல் இ­ருந்து அழகு என்ற கருப்­பொ­ரு­ளைக் கொண்­ட­வற்­றைப் பாட­லா­கவோ, நட­ன­மா­கவோ அல்­லது நடிப்­பா­கவோ படைக்­க­லாம்.

இரு­போட்­டி­க­ளிலும் ஒவ்­வொரு மாண­வ­ருக்­கும் அதிகபட்ச நேரமாக மூன்று நிமி­டங்­கள் வழங்­கப்­படும். முன்­பதி­விற்கு http://tinyurl.com/2p85jnk8

போட்­டி­கள், வரும் மார்ச் 18ஆம் தேதி சனிக்­கி­ழமை காலை 9 மணிக்கு விக்­டோ­ரியா சாலை­யில் உள்ள தேசிய நூல­கத்தின் ஐந்தாவது தளத்தில் நடை­பெ­றும்.

பொதுப்­பி­ரி­வுப் போட்டி

சிங்­கப்­பூ­ரர், நிரந்­த­ர­வாசி, முறை­யான வேலை அனு­மதி பெற்று சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் எவ­ரும் இப்­போட்டி­யில் கலந்து கொள்­ள­லாம்.

24 வரி­க­ளுக்­குள் அழகு என்ற கருப்­பொ­ரு­ளில் கவி­தை­ எ­ழுத வேண்­டும். ஒவ்­வொ­ரு­வ­ரும் இரண்டு கவிதை­கள் அனுப்ப வேண்­டும்.

கலந்துகொள்ள விரும்புவோர் www.kavimaalai.com என்ற இணையத் தளம் வழி­யா­கவோ அல்­லது poems@kavimaalai.com என்ற மின்­னஞ்­சல் முக­வ­ரிக்கோ கவி­தை­களை அனுப்­ப­லாம். அனுப்ப வேண்­டிய இறு­தித்­தேதி மார்ச் 5ஆம் தேதியாகும்.

போட்­டி­கள் தொடர்­பான மேல்விவ­ரங்­க­ளுக்கு 9144 5461/ 8332 7357

தமிழ்­மொழி மாதத்­தின் நிறைவு நிகழ்ச்சியாக நடக்கவுள்ள ­கவி­மாலை நிகழ்­வில் வெற்­றி­பெற்­றவர்களுக்கு ரொக்கப் பரி­சு­களும் சான்­றி­தழ்­களும் வழங்­கப்­படும்.

- செய்தி: கவிமாலை அமைப்பு