மகன் திட்டினார்; அம்மா திருந்தினார் பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் கண்டிப்பு எதுவரை...

மகன் திட்டினார்; அம்மா திருந்தினார் பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் கண்டிப்பு எதுவரை...

2 mins read
857cd0d8-c045-4ee5-9e1f-13d1af93b79e
-
multi-img1 of 2

"இப்­போது பொறுத்­துக்­கொள்­கி­றேன். ஆனால் நான் பெரி­ய­வ­னா­ன­தும் பாருங்­கள், என்ன செய்­கி­றேன் என்று!" சீனா­வைச் சேர்ந்த ஆறு வயது சிறு­வன், தன் அம்­மாவை இவ்­வாறு திட்­டி­யி­ருந்த காணொளி ஒன்று, பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டும் பேசப்­பட்­டும் வரு­கிறது. எப்­போ­தும் அள­வுக்கு அதி­க­மா­கத் தன்­னைக் கண்­டிப்­ப­தா­கக் கூறித் தன் தாயா­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தான் சிறு­வன்.

எந்­நே­ர­மும் தன்­னைத் திட்­டிக்­கொண்டும் தன்னை நோக்­கிக் கத்­திக்­கொண்­டும் இருக்­கும் அம்­மா­வி­டம் அவர், "சின்ன விஷ­யத்­துக்­கெல்­லாம் என் மன­தைப் புண்­ப­டுத்­து­கி­றீர்­கள். உங்­கள் போக்கே எனக்­குப் புரி­ய­வில்லை," என்­றார். தன்­னு­டைய தாயா­ரின் கோபத்­துக்கு எப்­போ­துமே தான் ஆளா­வது பெரும் துன்­பத்­தைத்­ த­ரு­வ­தா­கக் கூறிய அவர், அந்­தத் தாயாரை 'பய­மு­றுத்­தும் புலி' என்­றும் வரு­ணித்­தார்.

அத்­து­டன் நின்­று­வி­டா­மல் தன் அம்­மா­வின் பிள்ளை வளர்ப்பு முறை சரி­யில்லை என்­றும் ஒரு­நாள் இதற்­கான பின்­வி­ளை­வு­களை அவர் சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­றும் கூறினார்.

உறங்­கு­வ­தற்கு நேர­மா­கி­விட்­ட­தால் தன் இரவு உண­வைச் சீக்­கி­ர­மாக முடிக்­கும்­படி அந்த அம்மா கூறி­ய­தற்கு, மகன் இவ்­வாறு பேசத் தொடங்­கி­ய­தா­க 'ஸ்டார் வீடியோ' நிறு­வ­னத்­திற்கு அளித்த பேட்­டி­யில் சிறு­வ­னின் தாயார் கூறி­னார்.

இவ்­வாறு மக­னின் பேச்­சைக் கேட்ட அந்­தத் தாயார், தாம் இந்த விமர்­சனத்தை மதிப்­ப­தா­க­வும் ஏற்­றுக்­கொள்­வ­தா­க­வும் பதி­ல­ளித்­தா­ராம். காணொ­ளி­யைச் சிறு­வ­னின் தாயார் இணை­யத்­தில் பதி­வேற்­றம் செய்­ததை அடுத்து, இணை­ய­வா­சி­கள் பலர் தங்­க­ளின் பிள்ளை வளர்ப்பு முறை­யை­யும் ஆரா­யத் தொடங்­கி­விட்­ட­னர். சிறு­வன் கூறி­ய­தில் தவ­றில்லை என்­றும் கோபப்­ப­டு­வதை முடிந்­த­வரை பெற்­றோர்­கள் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் பலர் பதி­விட்­ட­னர். சிறு­வ­னின் குமு­ற­லைப் பார்­வை­யிட்ட சிலர், தங்­க­ளுக்கு இது ஒரு பாட­மாக அமைந்­த­தா­கக் கூறி­னர்.

நம் பிள்­ளை­கள் சிறு­வ­யது என்­றா­லும் அவர்­க­ளுக்­கும் உணர்ச்­சி­கள் இருக்­கும் என்­பதை மறந்­து­விட்டு நமது எதிர்­பார்ப்­பு­களை ஓயா­மல் அவர்­கள்­மீது திணிக்­கி­றோம். அத்­த­கைய நெருக்­கு­த­லுக்கு ஆளா­கும் பிள்­ளை­கள், மன அழுத்­தத்­தைச் சிறு வய­தி­லேயே உண­ரத் தொடங்கி­வி­டு­வர் என்­பதே உண்மை.

பிள்ளை வளர்ப்­பில் கண்­டிப்­பாக இருந்­தால் பிள்­ளை­கள் வாழ்க்­கை­யில் ஓர் உயர்ந்த நிலையை அடை­வர் என்று பெற்­றோர் சிலர் நினைக்­கி­றார்­கள். போட்­டித்­தன்­மை­யு­டன் பிள்ளை வளர்ப்­பில் ஈடு­படும் போக்கு ஆசிய பெற்­றோ­ரி­டையே பர­வ­லா­கவே காணப்­ப­டு­கிறது.

கொஞ்­சம் கண்­டிப்பு, கொஞ்­சம் அதி­கா­ரம், கொஞ்­சம் அன்பு என வெவ்­வேறு பிள்ளை வளர்ப்பு முறை­க­ளைப் பெற்­றோர் கையா­ளும்­போது பிள்­ளை­கள் ஆரோக்­கி­ய­மான மன­நி­லை­யைப் பெறு­வர். அத­னால் ஆத­ர­வும் ஆறு­த­லும் அவ­சி­யம் என்­ப­தைப் பெற்­றோர் முத­லில் உணர வேண்­டும்.