கவிமாலை ஒவ்வொரு மாதத்தின் இறுதிச் சனிக்கிழமையன்று சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் அதன் மாதாந்திரச் சந்திப்பினை நடத்திவருகிறது.
கவிமாலையின் 273வது சந்திப்பு நிகழ்ச்சி இன்று மாலை ஆறு மணிக்கு தேசிய நூலகம், ஐந்தாம் தளத்தின் 'பாசிபிலிட்டி' அறையில் நடைபெறவிருக்கிறது.
இம்மாதச் சந்திப்பில் இசைக்கவி இரமணன் 'கவிதையும் இசையும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்வினை கவிஞர் பழ.மோகன் ஒருங்கிணைப்பு செய்யவுள்ளார்.
பிடித்த, படித்த கவிதைகளை வாசித்தல், 'என் அன்பிற்குரிய' எனும் தலைப்பிலான இம்மாதப் போட்டிக் கவிதைகள் வாசித்தல் ஆகிய அங்கங்களுடன் பரிசளிப்பும் இடம்பெறவிருக்கிறது.
கவிதை விமர்சன அங்கமும் இடம்பெறும். கவிதையை விரும்பும் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.
செய்தி : கவிமாலை

