புதுப் பெற்றோர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்

புதுப் பெற்றோர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்

4 mins read
f56dfce9-e5c0-4e30-9cb1-95ab0d9ef771
-

குழந்தை பிறந்­த­தும் பெற்­றோர் என்ற புதிய பதவி ஒரு­வ­ருக்­குக் கிடைத்­து­வி­டு­கிறது. ஆனால் பெற்­றோர் என்ற பொறுப்பை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு ஒரு­வர் தம் வாழ்க்­கை­யில் செய்­யும் மாற்­றம் மிகப் பெரி­யது என்று மனித வளர்ச்­சியை ஆரா­யும் அறி­வி­யல் நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

புதி­தா­கப் பெற்­றோர் ஆன ஒரு­வ­ரின் வாழ்க்­கை­யில் மூளை, குணம், அடை­யாளம், உற­வு­கள் எனப் பல அம்­சங்­கள் மாற்­றங்­க­ளுக்கு உள்­ளா­கும்.

ஆத­ரவு இன்றி, உற­வு­கள் பாதிக்­கப்­பட்டு மன அழுத்­த­மும் நேர­லாம். இந்த மன அழுத்­தம் குழந்­தை­யின் அம்­மா­வுக்கு மட்­டு­மின்றி அப்­பா­வுக்­கும் ஏற்­ப­ட­லாம். புதுப் பெற்­றோர் என்ற நிலை­யில் நமது உணர்­வு­கள், உடல், வாழ்க்கை ஆகி­யவை அடை­யும் மாற்­றங்­கள் குறித்­தும் அந்த மாற்­றங்­க­ளைச் சமா­ளிக்­கும் வழி­மு­றை­கள் குறித்­தும் இனிக் காண்­போம்.

1. உணர்­வு­ரீ­தி­யாக நமது மூளை

நம்­மைத் தயார்ப்­ப­டுத்­தும்

புதுப் பெற்­றோர் எந்­நே­ர­மும் விழிப்­பு­நி­லை­யில் இருப்­பர். குழந்­தை­யின் பாது­காப்பு அதிக முக்­கி­யத்­து­வம் பெறும். குழந்­தையை அணைத்­தி­ருக்­கும்­போது நிம்­மதி கலந்த மகிழ்ச்­சியை உணர்­வர். தொடர்ந்து நல்ல பெற்­றோ­ராக இருக்­க­வேண்­டும் என்ற உற்­சா­கத்­து­டன் இருப்­பர். இந்த உணர்­வு­களை மூளை­யின் வெவ்­வேறு பகு­தி­களில் காணப்­பட்ட மாற்­றங்­கள் ஏற்­ப­டுத்­தி­ய­தாக 2014ஆம் ஆண்­டில் நடத்­திய ஆய்­வு­வழி ரூத் ஃபெல்ட்­மன் என்ற இஸ்­‌ரே­லிய ஆய்­வா­ளர் கண்­ட­றிந்­தார்.

2. குழந்­தை­யின் தேவை­களை

மேலும் நன்கு அறி­தல்

குழந்­தை­யு­டன் ஏற்­படும் உணர்­வு­ரீ­தி­யான பந்­தத்­தால் அக்­கு­ழந்தை பேச முடி­யாத நிலை­யி­லும் பெற்­றோ­ரால் அதன் தேவை­களை அறிந்­து­கொள்ள முடி­கிறது.

3. உணர்­வும் சிந்­த­னை­யும்

பரா­ம­ரிக்க உத­வும்

ஒரே சம­யத்­தில் வெவ்­வேறு வேலை­க­ளைச் செய்­யும் ஆற்­ற­லைப் புதுப் பெற்­றோர் பெறத் தொடங்­கு­வர். அதா­வது, குழந்­தை­யைப் பாது­காத்­தல், குழந்­தைக்கு ஏற்ப மாறிக்­கொள்­ளு­தல், குழந்­தைக்­காக திட்­ட­மி­டு­தல் போன்­ற­வற்­றுக்­குப் புதுப் பெற்­றோர் முன்­னு­ரிமை தரு­வர்.

குழந்­தைப் பரா­ம­ரிப்பு தொடர்­பில் அன்­னை­ய­ருக்கு உணர்­வு­ரீ­தி­யான மாற்­றம் அதி­கம் இருப்­ப­து­போல் தந்­தை­ய­ருக்­குக் குழந்­தைப் பாது­காப்பு தொடர்­பான சிந்­தனை அதி­கம் இருக்­கும் என்று ஆய்­வாளர் ரூத் கண்­ட­றிந்­தார்.

4. மன அழுத்­தம் குறை­யும்,

நினை­வாற்­ற­லும் குறை­யும்

குழந்­தை­யின் தேவை­களை அறிந்­து­கொள்­வ­தற்­குத் தயா­ரா­கும் மகளிர் தங்­க­ளின் கர்ப்ப காலத்­தின் பின்­பா­தி­யில் சற்று மன அமைதி அடை­வர் என்­றும் ஆய்­வு­கள் கூறு­கின்­றன. குழந்­தை­யின் தேவை­களை அறிந்­து­கொள்­வ­தற்கு அவர்­கள் தயா­ரா­வ­தால் தங்­க­ளின் உடல்­ரீ­தி­யான, மன­ரீ­தி­யான அழுத்­தங்­க­ளைப் பின்­னுக்­குத் தள்ளு­வதே கார­ணம் என்­கிறது ஆய்வு.

இருப்­பி­னும், அத­னு­டன் பெண்­ணின் நினை­வாற்­ற­லும் பாதிப்­ப­டை­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இது தொடர்­பில் மேற்­கொள்­ளப்­பட்ட 17 ஆய்­வு­களில் 80% மக­ளி­ருக்கு நினை­வாற்­றல் கர்ப்ப காலத்­தி­லும் குழந்­தைப் பிறப்­புக்­குப் பிந்­திய காலத்­தி­லும் இருந்­த­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டது.

5. வாழ்க்கை மேலும் அர்த்­த­முள்­ள­தா­கும்

அது­வரை சிறு­சிறு பிரச்­சி­னை­க­ளுக்கு அலட்­டிக்­கொண்­டி­ருந்தோர், ஒரு குழந்தை வந்­த­தும் தனி­ந­ப­ராக வளர்ச்சி காண்­பர். தன் வாழ்க்­கை­யைப் பற்­றி­யும் தன் எதிர்­கா­லத்­தைப் பற்­றி­யும் சிந்­திக்­கத் தொடங்­கு­வர். யாருக்­காக வேலை செய்­கி­றோம், யாருக்­காக வாழ்­கி­றோம் என்ற சிந்­தனை முதிர்ச்சி பிறக்­கும். நம்மை நம்பி ஒரு குழந்தை வந்­து­விட்­டது என எண்­ணும்­போது கூடு­தல் பொறுப்­பு­ணர்­வும் கவ­ன­மும் புதுப் பெற்­றோர் மன­தில் தோன்­றும்.

6. உடல், மன ரீதி­யான

சவால்­கள் அதி­க­மா­கும்

காயம் ஆறு­தல், தாய்ப்­பால் தரு­தல், களைப்பு, தூக்­க­மின்மை, உண­வு­மு­றை­யில் மாற்­றம் எனக் குழந்­தைப் பிறப்­புக்­குப் பின் மக­ளிர் அனு­ப­விப்­பவை உடல் ரீதி­யா­க­வும் மன ரீதி­யா­க­வும் சவால் விடுக்­க­லாம்.

பெற்­றோர் ஆகி­விட்­டோம் என்­ப­தால் அதி­க­ளவு எதிர்­பார்ப்­பு­க­ளைத் தங்­கள் மீதே திணிப்­ப­தைக் குறைத்­துக்­கொள்­வது உத­வும். ஆத­ர­வுக்­காக குடும்ப உறுப்­பினர்­க­ளின் உத­வியை நாட­லாம்.

7. கண­வன் மனைவி உறவுக்குச்

சோதனை வர­லாம்

புதுக் குழந்­தை­யால் கண­வன் மனைவி இடையே உள்ள உறவு பாதிக்­கப்­ப­ட­லாம் என்­கின்­ற­னர் குடும்­ப­நல நிபு­ணர்­கள். அது­வரை தம்­ப­தி­யாக இருந்­த­வர்­கள் புதி­தா­கப் பிறக்­கும் ஒரு குழந்­தை­யால் அந்த நிலையை இழக்­கின்­ற­னர்.

செல­வு­க­ளைச் சமா­ளித்­தல், குழந்­தைப் பரா­ம­ரிப்­புக்கு நேரம் ஒதுக்­கு­தல், மகப்­பேறு விடுப்­புக்­குப் பின் வேலைக்­குத் திரும்­பு­தல் எனத் தங்­க­ளின் அணுக்­க­மான உறவு சோத­னைக்கு உள்­ளா­வதை உண­ரும்­போது மேலும் எவ்­வாறு இணைந்து குழந்­தைப் பரா­ம­ரிப்­புக்­காக குழு உணர்­வு­டன் செயல்­ப­ட­லாம் என்று புதுப் பெற்றோர் சிந்­திக்க வேண்­டும்.

8. நண்­பர்­கள், உற­வி­னர்­களை

இழக்­கக்­கூ­டும்

புதுப் பெற்­றோ­ருக்கு நேரம் ஓர் எதி­ரி­யாகி­வி­ட­லாம். உற­வி­னர்­க­ளு­ட­னும் நண்­பர்­களு­ட­னும் முன்­பு­போல் பழ­கு­வ­தற்கு நேரம் கிடைக்­கா­மல் போக­லாம்.

பெற்­றோர் ஆன பிறகு, இத்­த­கைய உல்­லாச ஒன்­று­கூ­டல்­க­ளுக்கு நேரம் ஒதுக்க மனம் வராது என்­பதே உண்மை. இருப்­பி­னும், மன அழுத்­தம் அதி­க­மா­கும்­போது நண்­பர்­க­ளைச் சந்­தித்­துப் பேசு­வது ஆறு­தல் தர­லாம்.

நலன் பேணு­தல் முக்­கி­யம்

பொறுப்­பு­கள் கூடி­விட்­ட­தால் குழந்தை மீது கவ­னம் செலுத்தி தங்­க­ளைப் பற்றி புதுப் பெற்­றோர் மறந்­து­வி­டக்­கூ­டாது. தங்­க­ளின் தேவை­க­ளை­யும் முக்­கி­ய­மா­கக் கருதி நலன் பேண வேண்­டும்.

நாம் நன்­றாக இருந்­தால்­தான் நம்மை நம்­பி­யுள்ள குழந்­தையை நன்­றா­கப் பார்த்­துக்­கொள்ள முடி­யும் என்­பதை மறந்­து­விடக்­கூ­டாது.