தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையரிடம் சமூக ஊடக அங்கீகாரத்தின் தாக்கம்

2 mins read
851fadce-7ef8-496f-bea4-b9c51d74f9cb
-

கரு­ணா­நிதி துர்கா

பல்­வேறு தரப்­பி­ன­ரை­யும் ஈர்த்­துள்ள சமூக ஊட­கங்­க­ளால் நன்­மை­களும் உண்டு என்­றா­லும்­கூட ஒரு­வ­ரின் மன­ந­லம், தன்­னம்­பிக்கை ஆகி­ய­வற்­றைப் பாதிக்­கும் பிரச்­சி­னை­க­ளை­யும் இவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

மற்­ற­வர்­க­ளு­டன் தன்னை ஒப்­பிட்­டுப் பார்க்கும் மனித இயல்புக்கு ஏற்ப, சமூக ஊட­கத்­தில் மற்­ற­வர்­ பதி­வு­களுக்­குக் கிடைக்­கும் வர­வேற்­பை­யும் தங்­கள் பதி­வு­க­ளுக்­குக் கிடைப்­ப­தை­யும் ஒப்­பி­டு­வோர் அதி­கம்.

விருப்­பக் குறி­யீ­டு­க­ளைக் குவிப்­ப­தும் அதி­க­மா­னோ­ரைப் பின்­தொ­டர்­வோ­ரா­கப் பெற்­றி­ருப்­ப­தும் தங்­கள் மதிப்­பைக் கூட்­டு­வ­தா­க இளையர் பல­ரும் கரு­து­கின்­ற­னர்.

சமூக ஊட­கத்­தில் சித்­தி­ரிக்­கப்­படும் அழகு சார்ந்த தக­வல்­களால் தன்­னம்­பிக்கையைத் தொலைத்தோரும் உண்டு. சமூக ஊடக அங்கீகாரம் குறித்துக் கருத்துரைத்தனர் சிங்கப்பூர் இளையர்கள் சிலர்.

டிக்­டாக், இன்ஸ்­ட­கி­ராம், வாட்ஸ்­அப் போன்ற சமூக ஊட­கங்­க­ளைப் பொழு­து­போக்­கிற்­காகப் பயன்­ப­டுத்­துவதாகக் கூறினார் தன்­ய­ஸ்ரீ, 17. பெரும்­பா­லும் தனது கருத்­து­களைப் பகிர்ந்துகொள்­ளும் விதமான காணொ­ளி­க­ளை­யும் நகைச்­சு­வை­களையும் இவர் பதிவு செய்­வ­துண்டு.

"நான் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­தத் தொடங்­கி­ய­போது பின்­தொ­டர்­வோர் எண்­ணிக்­கை­யும் எனது பதி­வு­க­ளுக்­கான விருப்­பக் குறி­யீ­டு­களும் குறை­வாக இருந்­தன. அப்­போது அதை எண்ணி மனம் வருந்­தி­ய­துண்டு. ஆனால் இப்­போது அந்த எண்­ணிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் என்னை நானே எடை­போ­டக் கூடாது என்­பதை உணர்ந்­துள்­ளேன்," என்­றார் இவர்.

சமூக ஊட­கங்­க­ளின் மூலம் ஊக்­கம் கிடைத்­தா­லும் அவை தன்­னம்­பிக்­கைக்­கான அடித்­த­ளம் அல்ல என்­பது தன்யஸ்ரீயின் கருத்து.

பள்ளி வாழ்க்­கை­யைப் பற்றி இன்ஸ்­டகி­ராம் தளத்­தில் பதி­வி­டும் செல்­ல­துரை நாக­லட்­சுமி, 20, தொடக்கத்தில் ஒவ்­வொரு பதி­வுக்­கும் எத்­தனை விருப்­பக் குறி­யீ­டு­கள் கிடைக்­கின்­றன என்­பதை நுணுக்­க­மா­கக் கவ­னித்ததுண்டு.

"விருப்­பக் குறி­யீ­டு­க­ளுக்­கும் பின்­னூட்­டக் கருத்­து­க­ளுக்­கும் நான் கொடுக்­கும் அள­வுக்கு மற்­ற­வர்­கள் முக்­கி­யத்­து­வம் கொடுப்­ப­தில்லை என்­பதை இப்­போது உணர்ந்­துள்­ளேன்," என்று கூறும் இவர், தற்போது நண்­பர்­க­ளு­டன் உரை­யாட மட்­டுமே சமூக ஊடகங்களைப் பயன்­ப­டுத்துகிறார்.

இன்ஸ்­ட­கி­ராம், டிக்­டாக், டுவிட்­டர், பின்ட்­ரஸ்ட், பீரி­யல் என்று பல­த­ரப்­பட்ட சமூக ஊடகத் தளங்­களைப் பயன்­ப­டுத்­து­கி­றார் ஆகில் முக­மது பிலால், 17.

இசை, திரைப்­ப­டங்­கள், தனது சொந்த வாழ்க்கை, சமூ­கப் பிரச்­சி­னை­கள் சார்ந்த விழிப்­பு­ணர்­வுத் தக­வல்­கள் போன்­ற­வற்றை இவர் பதிவு செய்­கி­றார்.

"சமூக ஊட­கப் பதி­வு­களில் நம்­மைத் தாழ்த்திப் பேசு­வோ­ரை­யும் சில நேரங்­களில் எதிர்­கொள்ள நேரிடும்," என்று இவர் குறிப்­பிட்­டார்.

பாராட்டு மகிழ்ச்சி தரக்­கூ­டி­ய­தாக இருந்­தா­லும் இப்­போ­தெல்­லாம் அதற்கு அதி­க­ முக்­கி­யத்­து­வம் கொடுப்­ப­தில்லை ஆகில்.

மகிழ்ச்­சி­யான தருணங்­க­ளை­யும் நினை­வு­க­ளை­யும் பதிவு செய்­யும் தள­மாக சமூக ஊட­கங்­களைக் காண்­கி­றார் பழ­னி­யப்­பன் கஸ்­தூரி, 19.

"பின்­தொ­டர்­வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்­கும்போது நாம் புகழ்பெற்றவர் எனக் கரு­தப்­ப­டு­கி­றோம். ஆனால், இ­வர்­களில் பலர் நண்­பர்­கள் அல்ல என்­பதே உண்மை," என்று இவர் கூறி­னார்.

இணையத் துன்­பு­றுத்­தல்­களை எதிர்கொண்டாலும் தன்­னம்­பிக்கை அதனால் பாதிக்­கப்­ப­டா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்டியது முக்கியம் என்று கூறி­னார் கஸ்­தூரி.