சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

2 mins read
976f8bb9-6dc2-40d6-ab49-f6c2419770fc
-

தமி­ழர் பேரவை தலை­மை­யில் சிங்­கப்­பூர்த் தமிழ் அமைப்­பு­கள் ஒன்­றி­ணைந்து சென்ற மாதம் 26ஆம் தேதி உல­கத் தாய்­மொழி நாளைக் கொண்­டா­டின.

உம­றுப் புல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் புக்­கிட் தீமா தொகு­தி­யின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தமி­ழர் பேர­வை­யின் மதி­யு­ரை­ஞ­ரு­மான திரு ஆர். ரவீந்­தி­ரன் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்­டார்.

கல்வி பயி­லும்­போ­தும் வேலை­யி­டத்­தி­லும் தமிழ்­மொழி பேசு­வ­தில் இளை­யர்­கள் எதிர்­நோக்­கும் சவால்­கள் பற்றி அவர் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

சக்தி நுண்­கலை நட­னப் பள்ளி மாண­வி­யர், பாவேந்­தர் பார­தி­தா­சன் இயற்­றிய சங்கே முழங்கு பாட­லுக்கு நட­ன­மாடி நிகழ்ச்­சி­யைத் தொடங்கி வைத்­த­னர். கவி­மா­லைத் தலை­வர் இன்பா தாய்­மொழி பற்­றிய கவி­தையை வாசித்­தார்.

தமி­ழர் பேர­வைத் தலை­வர் வெ. பாண்­டி­யன் வர­வேற்­புரை ஆற்­றி­னார். அதி­பதி நாட­கக் குழு­வி­னர் தாய்­மொ­ழி­யைக் கரு­வா­கக் கொண்ட குறு­நா­ட­கத்­தைப் படைத்­த­னர். இளை­யர்­களே வச­னம் எழுதி, பேசி, நடித்த குறு நாட­கம் பார்­வை­யா­ளர்­க­ளின் பாராட்­டைப் பெற்­றது.

நிகழ்ச்­சி­யில், தாய்­மொ­ழியை அடுத்த தலை­மு­றைக்­குக் கொண்­டு­செல்­வ­தில் நாம் வெற்றி பெற்­றுள்­ளோமா? என்­னும் தலைப்­பில் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது.

இளை­யர்­க­ளுக்கு ஏற்ற நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்­தால் நிச்­ச­ய­மாக இளை­யர்­கள் கலந்­து­கொள்­வார்­கள், இளை­யர்­கள் அதி­கம் புழங்­கும் இன்ஸ்­டா­கி­ராம், டிக் டாக், டுவிட்­டர் போன்ற சமூக வலைத்­த­ளங்­களில் தாய்­மொ­ழிக் கற்­ற­லைத் தூண்­டும் விதத்­தில் பதி­வு­கள் இடம்­பெ­று­வது இளை­யர்­களை ஈர்க்க உத­வும் என்று சில எடுத்­துக்­காட்­டு­க­ளு­டன் இளை­யர்­கள் கலந்­து­ரை­யா­டி­னர்.

தமி­ழா­சி­ரி­யர்­க­ளு­டன் பெற்­றோர்­களும் வீட்­டில் தமி­ழில் பேச, பிள்­ளை­களை ஊக்­கப்­ப­டுத்த வேண்­டும் போன்ற கருத்­து­கள் முன்­வைக்­கப்­பட்­டன. சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழக மாணவி முத்து சுவேதா, சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழக மாணவி அருணா கந்­த­சாமி, சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மாணவி கம­லக்­கண்­ணன் யாழினி, நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மாணவி மோகன் ஹரி­வர்த்­தினி, விக்­டோ­ரியா தொடக்­கக் கல்­லூரி மாணவி ஜீவந்­திகா ஆகி­யோர் கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர்.

இளை­யர்­க­ளு­டன் முனை­வர் இரத்­தின வேங்­க­டே­ச­னும் முனை­வர் மன்னை க. இரா­ஜ­கோ­பா­ல­னும் இதில் பங்­கேற்­ற­னர். சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத் தலை­வர் தன­பால் குமார் கலந்­து­ரை­யா­டலை வழி­ந­டத்­தி­னார்.

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் நா. ஆண்­டி­யப்­பன் நிகழ்ச்­சியை நடத்த ஒத்­து­ழைப்பு நல்­கிய அமைப்­பு­க­ளுக்­கும் பார்­வை­யா­ளர்­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்­தார்.

மொத்தம் 16 அமைப்­பு­கள் இந்த தாய்­மொழி நாள் கொண்­டாட்­டத்­தில் ஒருங்­கி­ணைந்­தன. ஏறக்­கு­றைய 200 பேர் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­தாக ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.