மரபுடைமையைக் கொண்டாட அடுக்கடுக்காக நிகழ்ச்சிகள்

மரபுடைமையைக் கொண்டாட அடுக்கடுக்காக நிகழ்ச்சிகள்

3 mins read
ee3e28ef-7e0e-40c1-ad5a-469746370c85
-
multi-img1 of 2

கரு­ணா­நிதி துர்கா

புதிய நட­வ­டிக்­கை­க­ளை­யும் நிகழ்ச்­சி­க­ளை­யும் தேசிய மர­பு­டை­மைக் கழ­கம் அறி­மு­கப்

படுத்­து­கிறது.

இந்த நட­வ­டிக்­கை­களும் நிகழ்ச்­சி­களும் இம்­மா­தம் மற்­றும் அடுத்த மாதம் நடை­பெ­று­கின்­றன.

இம்­மா­தப் பள்ளி விடு­மு­றை­யின்­போது மாண­வர்­கள் மர­பு­டை­மை­யைப் பற்றி தெரிந்­து­கொள்­ள­வும் விடு­முறை காலத்தை மகிழ்ச்­சி­யாக கழிக்­க­வும் இந்த நட­வ­டிக்­கை­கள் வகை செய்­கின்­றன,

அதே நேரத்­தில், பெற்­றோர்­இந்த நிகழ்ச்­சி­க­ளின் மூலம் தங்­க­ளது பிள்­ளை­க­ளு­டன் நேரத்தை செல­வி­ட­லாம்.

இதன்­மூ­லம், குடும்பப் பிணைப்பு வலுப்­படும் என்று கழ­கம் கூறி­யது.

மர­பு­டைமை தொடர்­பான இந்த நட­வ­டிக்­கை­களில் பொது மக்­கள் கலந்­து­கொள்­ள­லாம். அனைத்து வய­தி­ன­ருக்­கான நட­வ­டிக்­கை­களும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

நெசவு மூலம் கைவினை,

வடி­வ­மைப்பு அனு­ப­வம் பெறு­தல்

தேசிய வடி­வ­மைப்பு நிலை­யத்­தில் இம்­மா­தம் 18ஆம் தேதி­யன்று குடும்­பங்­க­ளுக்­கான கைவி­னைப் பட்­டறை நடத்­தப்­படும். 4 வயது முதல் 9 வயது வரை­யி­லான சிறு­வர்­க­ளு­டன் பெற்­றோர் முன்­ப­திவு செய்து இல­வ­ச­மாக இந்த நட­வ­டிக்­கை­யில் பங்­கு­பெ­ற­லாம்.

மலாய்க்­கா­ரர்­க­ளின் பாரம்­ப­ரிய உண­வு­வ­கை­களில் கெத்­துப்­பாட்­டும் ஒன்று. தென்னை ஓலை­யைக் கொண்டு கெத்­துப்­பாட்டை எவ்­வாறு வடி­வ­மைப்­பது என்­பதை இந்­ந­ட­வ­டிக்­கை­யி­லி­ருந்து கற்­றுக்­கொள்­ள­லாம். நேரம்: காலை மணி 10 - 11.30

'செலப்­பி­ரெட் மொனி­யு­மென்ட்ஸ்!'

செயிண்ட் ஜோசஃப் தேவா­ல­யத்­தில் அடுத்த மாதம் 1, 15, 21, 28ஆம் தேதி­களில் சிறப்பு சுற்­றுப்­ப­ய­ணம் ஒன்று நடத்­தப்­படும். சிங்­கப்­பூ­ரின் பழ­மை­யான தேவா­ல­ய­மான செயிண்ட் ஜோசஃப் தேவா­ல­யம் இந்­

நி­கழ்ச்சிக்கு முக்­கிய நினை­வுச்­சின்­ன­மாகக் கருதப்படுகிறது.

பெரி­ய­வர்­கள் $5 கட்­ட­ண­மும் மூத்த குடி­மக்­கள், மாண­வர்­கள் $3 கட்­ட­ண­மும் செலுத்தி சுற்­றுப்­ப­ய­ணத்­தில் கலந்து கொள்­ள­லாம். இந்­நி­கழ்ச்சி வெவ்­வேறு நேரங்­களில் நடத்­தப்­படும்.

இம்­மா­தப் பள்ளி விடு

முறையை முன்­னிட்டு சிங்­கப்­பூர் சிறார் அருங்­காட்­சி­ய­கத்­தில் இம்­மா­தம் 11ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பல நட­வ­டிக்­கை­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்

­ப­ட்டுள்ளன. இம்­மா­தம் 31ஆம் தேதி வரை அருங்­காட்­சி­ய­கத்­திற்கு இல­வ­ச­மா­கச் செல்­ல­லாம்.

'ஆர்ட் வியு­விங்'

சிங்­கப்­பூர் குழந்­தை­கள் அருங்­காட்­சி­ய­கத்­தின் 'டிஸ்­க­வரி' அறை­யில் ஓவி­யக் கண்­காட்­சிக்கு நாளை ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

5 வயது முதல் 6 வயது வரை­யி­லான சிறு­வர்­க­ளு­டன் பெற்­றோர் முன்­ப­திவு செய்து $10 கட்­ட­ணம் செலுத்தி இந்­தக் கண்­காட்­சி­யைக் கண்டு ரசிக்­க­லாம்.

பிள்­ளை­க­ளின் கண்­ணோட்­டம், சிந்­த­னை­யைப் பற்றி தெரிந்து­கொள்­வ­தற்கு ஏற்ற நட­வ­டிக்­கை­யாக இது அமை­யும்.

நேரம்: பிற்­ப­கல் மணி 3 -

மாலை மணி 4

இது­போன்று மேலும் பல நட­வ­டிக்­கை­க­ளுக்கு சிங்­கப்­பூர் சிறார் அருங்­காட்­சி­ய­கத்­தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

அவற்­றுக்கு முன்­ப­திவு செய்ய www.go.gov.sg/cmsg எனும் இணை­யப்­பக்­கத்­துக்­குச் செல்­ல­வும்.

சாங்கி தேவா­ல­யம் மற்­றும் அருங்­காட்­சி­ய­கம் ஒவ்­வொரு வார­மும் செவ்­வாய்க்­கி­ழமை முதல் ஞாயிற்­றுக்­கி­ழமை பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­படும்.

சிங்­கப்­பூரை ஜப்­பான் கைப்­பற்றி ஆட்சி செய்­த­போது போர்க் கைதி­கள், பொது­மக்­க­ள் சந்­தித்த சவால்­கள் ஆகி­ய­வற்றை

சித்­திரிக்­கும் கண்­காட்­சிக்கு அங்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இக்­கண்­காட்­சி­யைக் காண சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வாசி

களும் கட்­ட­ணம் செலுத்த தேவை­யில்லை.

நேரம்: காலை மணி 9.30 - மாலை மணி 5.30