மலேசியாவில் சந்தோஷ் நாராயணன் இசை விருந்து

2 mins read
17efd2e4-48e3-44b8-a7f7-4e461d4dd3b9
-

பிர­பல தமிழ்த் திரைப்­பட இசை­ய­மைப்­பா­ளர் சந்­தோஷ்

நாரா­ய­ணன் இம்­மா­தம் 18ஆம் தேதி­யன்று மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்­கி­றார். இந்­நி­கழ்ச்சி மாலை 6 மணி அசி­யாட்டா அரீ­னா­வில் நடை­பெ­று­கிறது.

'சூப்­பர் ஸ்டார்' ரஜி­னி­காந்த் நடிப்­பில் வெளி­வந்த கபாலி திரைப்­ப­டத்­துக்கு இசை­ய­மைத்­தி­ருந்த சந்­தோஷ் நாரா­ய­ணன், மலே­சி­யா­வில் இசை நிகழ்ச்சி நடத்­து­வது இதுவே முதல்­முறை.

அது­மட்­டுமல்ல, இதுவே சந்­தோஷ் நாரா­ய­ண­னின் முதல் அனைத்­து­லக இசை­நி­கழ்ச்சி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

'சவுண்ட்ஸ் ஆஃப் தி சவுத்' எனும் தலைப்­பில் மேடை ஏற்­றப்­படும் இந்த இசை­நி­கழ்ச்­சிக்கு மலே­சி­யா­வைச் சேர்ந்த ரீச் புரொ­டக்­‌ஷன்ஸ் நிறு­வ­னம் ஏற்­பாடு செய்­துள்­ளது.

இந்த இசை­நி­கழ்ச்சி தொடர்­பாக கோலா­லம்­பூ­ரில் உள்ள லெ மெரி­டி­யன் ஹோட்­ட­லில் அண்­மை­யில் செய்­தி­யா­ளர் கூட்­டம் நடை­பெற்­றது.

அதில் சந்­தோஷ் நாரா­ய­ண­னு­டன் அவ­ரது மனைவி மீனாட்சி ஐய­ரும் கலந்­து­கொண்­டார்.

பிர­பல தமிழ்த் திரைப்­படப் பாடல்­க­ளை­யும் இதற்கு முன் கேட்­டி­ராத புதிய பாடல்­க­ளை­யும் ரசி­கர்­கள் முன் கொண்டு வந்து மகிழ்­விக்க திற­மை­மிக்க பாட­கர்­கள் பட்­டா­ளம் காத்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

நிகழ்ச்­சிக்கு மெரு­கூட்ட 'டீ' என்று அழைக்­கப்­படும் பிர­பல பாடகி தீக்­‌ஷிதா வெங்­க­டே­ச­னும் இந்­நி­கழ்ச்­சி­யில் பாட இருக்­கி­றார். இவர் ஆஸ்­தி­ரே­லி­யா­வைச் சேர்ந்த இலங்­கைத் தமி­ழர்.

இவர் பாடிய 'எஞ்­சாய் எஞ்­சாமி' பாடல் யூடி­யூப்­பில் இது­வரை 433 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான முறை பார்த்­தும் கேட்­டும் ரசிக்­கப்­பட்­டுள்­ளது. இப்­பா­டல் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் யூடி­யூப்­பில் வெளி­யி­டப்­பட்­டது.

நிகழ்ச்­சி­யில் துருவ் விக்­ரம், ஹரி­ச­ரண், சூப்­பர் சிங்­கர் பிரி­யங்கா போன்ற நட்­சத்­தி­ரங்­களும் கலந்­து­கொள்­கின்­ற­னர்.

"இந்­தி­யா­வுக்கு வெளியே முதல்­மு­றை­யாக இசை­நி­கழ்ச்சி ஒன்றை மேடை­யேற்ற இருக்­கி­றேன். அதற்­காக நான் மிகுந்த ஆவ­லு­டன் காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன். எனது ஆக அண்­மைய படைப்­பு­களை ரசி­கர்­க­ளி­டம் பகிர்ந்­து­கொள்ள இருக்­கி­றேன். அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைக்­கும் சக்தி இசைக்­கு உண்டு. எனது இசை­நி­கழ்ச்­சி­யும் அவ்­வாறு செய்­யும் என நம்­பு­கி­றேன்," என்­றார் 39 வயது சந்­தோஷ் நாரா­ய­ணன்.