ஆஸ்கரில் மீண்டும் வாகைசூடிய தமிழ்

ஆஸ்கரில் மீண்டும் வாகைசூடிய தமிழ்

3 mins read
8ecf3263-04c8-44a5-8051-ca42fc3d56a5
-
multi-img1 of 2

நெட்­ஃபி­லிக்ஸ் தளத்­தில் இடம்­பெற்­றி­ருக்­கும் 'தி எலி­ஃபண்ட் விஸ்­ப­ரர்ஸ்' ஆவ­ணப்­ப­டம் இவ்­வாண்டு சிறந்த ஆவ­ணக் குறும்படத்­துக்­கான ஆஸ்­கர் விரு­தைப் பெற்­றுள்­ளது.

கட்­டா­யம் பார்க்க வேண்­டிய தர­மான ஆவ­ணப் படம் என்று பல விமர்­ச­கர்­க­ளால் வரு­ணிக்­கப்­பட்­டுள்ள இந்த ஆவ­ணப்­ப­டத்­துக்­கும் தமி­ழுக்­கும் நெருங்­கிய தொடர்­புண்டு.

41 நிமி­டங்­கள் நீடிக்­கும் ஆவ­ணப் படத்­தில் பெரும்­ப­குதி தமிழ்­மொ­ழி­யில் இடம்­பெற்­றுள்­ளது.

மேலும், தமிழ்­நாட்­டின் முது­மலை யானை­க் காப்­பி­டத்­துக்­குக் கொண்டுவரப்­படும் யானைக் குட்டி­க­ளைக் காத்து வளர்க்­கும் பொம்­ம­னும் பெல்­லி­யும்­தான் ஆவ­ணப் படத்­தின் பிர­தா­ன கதா­பாத்­தி­ரங்­கள் ஆவர்.

விரு­தைப் பெற்­றுக்­கொள்ள மேடை­யே­றிய 'தி எலி­ஃபண்ட் விஸ்­ப­ரர்ஸ்' ஆவ­ணப்­ப­டத்­தின் இயக்­கு­நர் கார்த்­திகி கொன்­சால்­வெஸ், "இயற்கை உல­குக்­கும் மனிதர்க­ளுக்­கும் உள்ள புனித பந்­தம், பழங்­குடி இனமக்­களை மதிப்­ப­தன் அவ­சி­யம், நம்­மு­டன் வெளிகளைப் பகிர்ந்துகொள்­ளும் மற்ற உயி­ரி­னங்­க­ளுக்­குக் காட்ட வேண்­டிய கருணை ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து வாழ்­தல் ஆகி­ய­வற்­றின் முக்­கி­யத்­து­வத்­தைப் பற்றி பேச வந்­தி­ருக்­கி­றேன்," என்­றார்.

தமிழ் தெரிந்த பெண் கார்த்­திகி

தமிழ் தெரிந்த பெண் ஒரு­வர் முதன்­மு­றை­யாக ஆஸ்­கர் விருதை வென்­றி­ருக்­க­லாம்.

உத­கை­யில் பிறந்து நீல­கிரி மலைப் பாது­காக்­கப்­பட்ட வனப்­ப­கு­தி­யில் வளர்ந்து கோயம்­புத்­தூ­ரில் படித்த கார்த்­திகி, இயக்­கிய முதல் ஆவ­ணப்­ப­டம் இது­வா­கும்.

ஒளிப்­ப­தி­வா­ள­ரா­க­வும் புகைப் படக் கலை­ஞ­ரா­க­வும் பணி­யாற்றி­யுள்ள அவர், ஆவ­ணப்­ப­டத்­தின் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளான யானைக் காப்­பா­ளர்­கள் பொம்மன், பெல்லி உள்­ளிட்ட பழங்­குடி இனமக்­க­ளு­டன் ஐந்து ஆண்­டு­கள் வசித்து வந்­தார்.

பார்­வை­யா­ளர்­க­ளின் மன­தைக் கொள்­ளை­கொண்ட ரகு யானைக்­குட்டி பிறந்து மூன்று மாதங்­க­ளி­லி­ருந்து அவர் அத­னு­டன் பழகி வந்­தார். சுமார் 450 மணி­நே­ரக் காணொ­ளி­களை கார்த்­திகி சேர்த்து வைத்­தி­ருந்­தார். அதுவே ஆவ­ணப்படம் ஆனது. தம்­மு­டன் தங்­கள் அறி­வாற்­ற­லைப் பகிர்ந்­து­கொண்ட பொம்­மன், பெல்லி இரு­வ­ருக்­கும் கார்த்­திகி விருது மேடை­யில் நன்­றி­கூ­றத் தவ­ற­வில்லை.

சிறந்த ஆவ­ணக் குறும்­ப­டம் என்ற பிரி­வில் இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்ட படம் அவ்­வி­ருதை வென்­றி­ருப்­பது இதுவே முதன்­மு­றை­யா­கும்.

சூர­ரைப் போற்­று­வு­டன் தொடர்பு

ஆவ­ணப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான குனித் மோங்கா தமிழ்த் திரை­யு­ல­கத்­துக்­குத் தெரி­யா­த­வர் அல்ல. தமிழ் நடி­கர் சூர்யா நடித்து 2019ல் வெளி­யான சூர­ரைப் போற்று படத்­தின் தயா­ரிப்­பா­ளர்­களில் இவ­ரும் ஒரு­வர்.

மேடை­யில் நெகிழ்ச்­சி­யு­டன் ஆஸ்­கர் விரு­தைப் பெற்­றுக்­கொண்ட குனித், 1.4 பில்­லி­யன் இந்­திய மக்­க­ளுக்கு அதை அர்ப்­ப­ணித்­தார். இந்­தி­யத் தயா­ரிப்பு ஒன்று முதன்­மு­றை­யாக வென்­றதை சுட்­டிக்­காட்­டிய அவர், இரண்டு பெண்­கள் அதை சாத்­தி­ய­மாக்­கி­னர் என்­றார்.

இது குனித் பெற்றிருக்கும் இரண்­டா­வது ஆஸ்­கர் விரு­தா­கும். 2018ல் 'பீரி­யட். எண்ட் ஆஃப் செண்­டன்ஸ்' எனும் ஆவ­ணப்­ப­டத்­துக்­காக இதே பிரி­வில் அவர் விரு­தைப் பெற்­றார். ஆனால் அது அமெ­ரிக்­கத் தயா­ரிப்­பாக ஆஸ்­கரை வென்­றது.

பெல்லி, பொம்­மன், ரகு, அம்மு

விரு­து­பெற்ற செய்­தி­யைக் கேட்ட பெல்லி, ஒரு காலத்­தில் யாரும் அண்­டா­மல் தனித்­து­ விடப்­பட்ட தம்மை இன்று அனை­வ­ரும் அர­வ­ணைத்­துக்கொண்­டுள்­ள­தா­கக் கூறி, மகிழ்ச்சி தெரி­வித்­தார்.

யானைக்­காப்­பா­ளர்­க­ளான பெல்­லி­யும் பொம்மனும் எவ்­வாறு தங்­கள் இனத்­தி­லி­ருந்து தனித்­து­வி­டப்­பட்ட ரகு, அம்மு என்ற இரண்டு யானைக் குட்டி­க­ளைப் பாது­காத்து வளர்த்து அவற்றை மன­த­ள­வில் தங்­கள் சொந்­தப் பிள்­ளை­க­ளாக்­கிக் கொள்­கி­றார்­கள் என்­பதே ஆவ­ணப்­ப­டத்­தின் கதை­யா­கும்.

இரு­வ­ரும் மலைக்­கா­டு­களில் பல­நூறு ஆண்­டு­க­ளாக வாழ்ந்து வரும் காட்­டு­நா­யக்­கர் எனும் மலை­வாழ் இனத்­தைச் சேர்ந்­த­வர்­கள். எளியவர்கள் என்றாலும் பேரன்பு காட்டும் பெருமக்கள்.

மனி­தர்களுக்கும் விலங்கு­க­ளுக்­கும் இருக்­கும் தொடர்­பை­யும் ஒன்­றால் மற்­றொன்றை வாழ­வும் சாக­வும் வைக்க முடி­யும் என்­பதையும் ஆவ­ணப்­ப­டம் எடுத்­து­ரைக்­கிறது. அத்துடன், முது ம­லை­யின் எழிலை அது பார்­வை­ யாளர்­க­ளுக்குக் கடத்­து­கிறது.

பச்சைப் பசே­லென இருக்­கும் மலைப்­ப­கு­தி­யில், யானையும் மனிதரும் விளை­யாடி, இரு உயி­ரி­னங்­கள் நிபந்­த­னை­யற்ற அன்­பைப் பரி­மா­றிக்­கொள்­ளும் காட்­சி­கள் மனதிலும் கண்­க­ளி­லும் ஈரம் கசி­யவைக்கக்கூடியவை.

இயற்­கை­யும் அன்­புமே இந்த உல­கத்தை இயங்கவைத்துக்­கொண்­டி­ருக்கின்றன என்ற புரிதலை ஏற்படுத்தும் 'தி எலி­ஃபண்ட் விஸ்­ப­ரர்ஸ்' தவிர்க்க முடியாத தமிழ்ப் படமாகும்.