தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நடத்தும் இவ்வாண்டின் திருக்குறள் விழாவை முன்னிட்டு பாலர் பள்ளி முதல் உயர்நிலை ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் வரைக்குமான போட்டிகள் இடம்பெறவுள்ளன.
கழகத்தின் திருக்குறள் விழா ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும். தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் இவ்விழாவிற்கான போட்டிகளைக் கழகம் நேரடியாக நடத்தவுள்ளது.
இப்போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பீட்டி ரோட்டில் உள்ள உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வெவ் வேறு நேரங்களில் நடத்தப்படும்.
பாலர் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் ஒன்று, இரண்டு மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலர் பள்ளி ஒன்றாம், இரண்டாம் வகுப்பு பாலர்களுக்கு மனனப்போட்டிகள் நடைபெறும்.
தொடக்கநிலை ஒன்று, இரண்டு வகுப்பு மாணவர்களுக்கான மனப்பாடம் செய்து பொருளுடன் ஒப்பிக்கும் போட்டிகள் நடைபெறும்.
தொடக்கநிலை மூன்று, நான்கு வகுப்பு மாணவர்களுக்கு மனப் பாடம் செய்து பொருளுடன் ஒப்பிக்கும் போட்டிகள் நடத்தப்படும்.
தொடக்கநிலை ஐந்து, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒப்பித்தல் போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவையும் இடம்பெற இருக்கின்றன.
உயர்நிலை ஒன்று முதல் ஐந்து வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெறும்.
போட்டிகள் நடைபெறும் குறிப்பிட்ட நேரத்தையும் மேல்விவரங் களையும் கீழ்க்காணும் இணையமுக வரியில் பெற்றுக்கொள்ளலாம்.
https://www.tamilmozhi.org/calendar_events_detail.php?id=34
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து கேத்திரபாலன் மூக்காண்டியுடன் தொலைபேசி எண் 9004 3427இலும் கார்த்திக் சிதம்பரத்துடன் தொலைபேசி எண் 9241 0109இலும் tirukkuralvizha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி யிலும் கழகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
போட்டிகளுக்கான பதிவுத் தாள்கள் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தை வந்து சேரவேண்டிய இறுதி நாள். மார்ச் 16ஆம் தேதி இரவு 11.59மணி ஆகும்.
செய்தி: தமிழ் மொழி
பண்பாட்டுக் கழகம்

