தீபிகாவின் பெருமிதப் புன்னகை; 'நாட்டு நாட்டு' பாடலின் உற்சாகத் தீ

தீபிகாவின் பெருமிதப் புன்னகை; 'நாட்டு நாட்டு' பாடலின் உற்சாகத் தீ

1 mins read
ea8b6ce9-3e89-443f-bc75-a67519195213
-
multi-img1 of 2

சிறந்த அசல் பாட­லுக்­கான விருதை ஆஸ்­கர் நிகழ்ச்­சி­யில் 'நாட்டு நாட்டு' தெலுங்­குப் பாடல் வெல்­வ­தற்கு முன்­ன­தாக அதன் மேடை அரங்­கேற்­றத்தை அறி­முகம் செய்ய வந்­தார் இந்­திய நடிகை தீபிகா படு­கோன். நாட்டு நாட்டு என்ற பாடல் தலைப்பை அவர் உச்­ச­ரித்த ஒவ்­வொரு முறை­யும் பலத்த கை­தட்­ட­லும் பேரொ­லி­யும் அரங்­கில் ஒலித்­தது.

கைதட்­ட­லும் உற்­சா­கம் நிறைந்த விசில்­களும் ஓய ஒவ்­வொரு முறை­யும் பேச்சை சற்று நிறுத்தி, பெரு­மி­த­மும் பெரு மகிழ்ச்­சி­யும் நிறைந்த சிரிப்பை அள்­ளி­வீ­சி­னார் தீபிகா.

'நாட்டு நாட்டு' பாட­லுக்­குக் குரல் கொடுத்த கால­பை­ரவா, ராகுல் சிப்­பி­லி­குன்ஜ் இரு­வ­ரும் பாட, 20க்கும் அதி­க­மான நட­ன­மணிகள் ஆட, மேடை­யில் உற்­சா­கத் தீ பற்­றிக்­கொண்­டது.

இசை­ய­மைப்­பா­ளர் கீர­வாணி, ஆர்­ஆர்­ஆர் படத்­தின் இயக்­கு­நர் எஸ் எஸ் ராஜ­மெ­ளலி, நடி­கர்­கள் ராம்­ச­ரண், ஜூனி­யர் என்­டி­ஆர் உள்­ளிட்­டோர் அமர்ந்து நட­னத்தை ரசித்­த­னர்.

பாடல் முடிந்த மறு­நொடியே அரங்­கில் இருந்த வர்கள் எழுந்து கைதட்­டிக் கூச்­சல்­இட்டுப் பாராட்­டி­ய­போதே அதற்கான விருது உறுதி­யா­கி­விட்­டது.