முன்னாள் புற்றுநோயாளிக்கு செயற்கை மூக்கு

முன்னாள் புற்றுநோயாளிக்கு செயற்கை மூக்கு

2 mins read
176b6c34-07dd-40da-b95a-618df647c678
-
multi-img1 of 5

புற்­று­நோ­யால் மூக்கை இழந்­த­ வ­ருக்கு முப்­ப­ரி­மாண முறை­யில் அச்­ச­டிக்­கப்­பட்ட செயற்கை மூக்கை டான் டோக் செங் மருத்­து­வ­மனை பொருத்­தி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் முப்­ப­ரி­மாண முறை­யில் அச்­சி­டப்­பட்ட முதல் செயற்கை மூக்கு அதுவே என்று மருத்­து­வ­மனை கரு­து­கிறது.அசல் உடல் உறுப்­பு­கள் போலவே இருப்­ப­து­டன் நோயா­ளி­க­ளின் தேவை­க­ளுக்கு ஏற்ற செயற்கை உறுப்­பு­களை வழங்க இந்த முன்­னோ­டித் திட்­டம் வழி­வ­குக்­கும் என்று மருத்­து­வ­மனை நம்­பு­கிறது.

செயற்கை கைவி­ரல் உள்­ளிட்ட மற்ற செயற்கை உடலுறுப்பு­ களை அச்­சிட்­டுப் பொருத்த அது திட்­ட­மிட்­டுள்­ளது.

தோல் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்ட திரு ஜே எஃப் லிய­னின் மூக்கு சென்ற ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்­றப்­பட்­டது.

இது­போன்ற மற்ற சம்­ப­வங்­களில் கையில் உள்ள திசுக்­களை எடுத்து அறுவை சிகிச்சை மூலம் மூக்கை வடி­வ­மைக்க வழி­யுண்டு. ஆனால் திரு லியன் தோல் புற்று நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர் என்­ப­தால், மூக்­குப் பகு­தி­யில் மீண்­டும் புற்­று­நோய் ஏற்­ப­டக்­கூ­டும் என்று மருத்­து­வர்­கள் பயந்­த­னர்.

இவ்­வே­ளை­யில் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் மருத்­துவ முப்­ப­ரி­மாண அச்சு நிலை­யம் சென்ற நவம்­ப­ரில் திரு லிய­னுக்­கென்றே வடி­வ­மைக்­கப்­பட்டு பிசி­னால் ஆன மூக்கை அச்­சிட்­டுத் தர முன்­வந்­தது.

2020இல் செயல்­ப­டத் தொடங்­கிய அந்­நி­லை­யம் 2022இல் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்­கப்­பட்­டது. எட்டு அச்சு இயந்­தி­ரங்­கள் உள்ள நிலை­யத்­தில் மேடய்­ரம் எனும் முப்­ப­ரி­மண அச்சு நிறு­வ­னத்­தின் பொறி­யிய­லா­ளர்­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர். அறுவை சிகிச்­சை­யிலும் நோய் பற்றி மருத்­து­வர்­கள் விளக்­க­வும் உத­வு­வது, பயிற்சி போன்ற தேவை­க­ளுக்­காக நிலை­யத்­தில் உடல் உறுப்பு மாதி­ரி­கள் முப்­ப­ரி­மாண முறை­யில் அச்­சி­டப்­பட்டு வரு­கின்­றன.

திரு லிய­னுக்கு முன்­னர் மேற்­கொள்­ளப்­பட்ட சிடி சோத­னை­கள் மூலம் உரு­வாக்­கப்­பட்ட முப்­ப­ரி­மா­ணப் படத்­தைக் கொண்டு மூக்கு அச்­சி­டப்­பட்­டது.

அதைப் பொருத்­து­வ­தற்­காக திரு லியன் வந்­த­போது அவர் உடல் எடை குறைந்­து­விட்­டார் என்­றும் மூக்கு அவ­ருக்­குப் பொருந்­த­வில்லை என்­றும் தெரிய­வந்­தது. திரு லிய­னின் முகம் மீண்­டும் கைய­டக்க ஊடு­க­திர் கரு­வி­யால் அள­வெ­டுக்­கப்­பட்டு மூக்கு அச்­சி­டப்­பட்­டது.

அடுத்து மூக்கு பார்ப்­ப­தற்கு இயற்­கை­யா­னது போல தெரி­ய­வில்­லையே என்ற ஆதங்­கம் மருத்­து­வர்­க­ளுக்கு ஏற்­பட்­டது.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம் கிழக்­கின் அழகு, நலத்­து­றை­யின் தலை­வர் ஜெசி கோவை அவர்­கள் அணு­கி­னர்.

அரங்க ஒப்­ப­னை­யில் கை தேர்ந்த திரு­வாட்டி கோ இது­போன்ற புதிய முயற்­சி­யில் ஈடு ­ப­டத் தயங்­கி­னார். பிறகு, அந்­தச் சவாலை ஏற்­றுக்­கொண்ட அவர், தமது சக ஊழி­ய­ரு­டன் சேர்ந்து திரு லியனை பல­முறை சந்­தித்து, பிசி­னா­லான சாயத்­தைத் தேர்வு செய்­தார். செயற்கை மூக்­குக்கு நுணுக்­க­மாக சாயம் பூசப்­பட்­டது. சென்ற 7ஆம் தேதி திரு லிய­னுக்கு செயற்கை மூக்கு பொருத்­தப்­பட்­டது.