மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசுத் தொகை இனி $3,000

மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசுத் தொகை இனி $3,000

2 mins read
6662553d-9a0a-44e5-ba05-ece4efb9bbeb
-

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் ஆனந்த பவன் உண­வ­கத்­தின் ஆத­ர­வு­டன் வழங்­கி­வ­ரும் ஆனந்த பவன் மு.கு. இரா­மச்­சந்­திரா புத்­த­கப் பரி­சுக்­கான தொகை இவ்­வாண்டு முதல் $3,000ஆக அதி­க­ரிக்­கப்­படும்.

இம்­மா­தம் 5ஆம் தேதி, தேசிய நூல­கத்­தின் இமே­ஜி­னே­ஷன் அறை­யில் மாலை 4 மணிக்கு நடை­பெற்ற 107ஆவது கதைக்­க­ளம் நிகழ்ச்­சி­யில் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் தலை­வர் நா. ஆண்­டி­யப்­பன் அதைத் தெரி­வித்­தார்.

இந்த ஆண்டு முதல் மு.கு.இரா­மச்­சந்­திரா புத்­த­கப் பரி­சுத் தொகை 1,000 வெள்ளி உயர்த்­தப்­பட்டு 3,000 வெள்­ளி­யாக வழங்­கப்­படும் என்­றார் அவர்.

இந்த ஆண்டு புத்­த­கப் பரிசு, கவி­தைத் தொகுப்­புக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அத­னால் கடந்த மூன்று ஆண்­டு­களில் வெளி­யீடு செய்­யப்­பட்ட கவி­தைத் தொகுப்பு­களை வரும் 31ஆம் தேதிக்­குள் அனுப்பி வைக்­கும்­படி அவர் சொன்­னார்.

முன்­ன­தாக, நிகழ்ச்­சி­யில் கழ­கத்­தின் காலஞ்­சென்ற முன்­னாள் தலை­வர் சுப.அரு­ணா­ச­லத்­தின் இரண்­டா­மாண்டு நினை­வஞ்­சலி இடம்­பெற்­றது.

உள்­ளூர் படைப்­பா­ளர் மாதங்கி கலந்­து­கொண்­டார். வர­லாற்­றுப் புனை­வி­லக்­கி­யத்­திற்கு தர­வி­றக்­கப்­படும் தக­வல்­க­ளின் நம்­ப­கத்­தன்­மை­க­ளை­யும் சரி­பார்ப்­ப­தின் முக்­கி­ய­வத்­துத்தை வலி­யு­றுத்­தி­னார். அவ­ரது படைப்­பு­கள், பங்­க­ளிப்பு பற்­றி­யும் பேசப்­பட்­டது.

தமிழ் மொழி விழா ஏப்­ரல் மாதத்­தில் நடை­பெ­ற­வி­ருப்­ப­தால், அடுத்த கதைக்­க­ளம் மே மாதம் நடை­பெ­றும் என்று நிகழ்ச்­சி­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

'உள்­ளூர் எழுத்­தா­ளர் அறி­மு­கம்' அங்­கம் மாற்­றப்­பட்டு 'உள்­ளூர் எழுத்­தா­ளர்­க­ளின் சிறு­கதைத் தொகுப்பு அல்­லது நாவல்­ க­ளின் ஆய்­வும் கலந்­து­ரை­யா­ட­லும்' எ­னும் புதிய அங்­கம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.

செய்தி, படம்: சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம்