சளிக்காய்ச்சலைத் தவிர்க்க வழிமுறைகள்

சளிக்காய்ச்சலைத் தவிர்க்க வழிமுறைகள்

2 mins read
fdf30328-94bd-48c0-a79c-e3c79945c0ed
-

அனுஷா செல்­வ­மணி

தற்­போது மழைக்­கா­ல­மாக இருப்­ப­தால் நம்­மில் பல­ருக்கு நோய்­ ஏற்­படும் சாத்­தி­யம் அதி­க­மாக உள்­ளது. குறிப்­பாக சளிக்­காய்ச்­சல், இன்­ஃபு­ளு­யென்ஸா கிருமி நம்மை புரட்­டிப்­போ­டக்­கூ­டும்.

இத்­த­கைய சூழ­லில் நம்மை எவ்­வாறு பாது­காத்­துக்­கொள்­வது என்­பது குறித்து லிட்­டில் இந்­தி­யா­வில் ஷிஃபா மருந்­த­கத்தை நடத்­தும் டாக்­டர் முஹம்­மது கஸாலி ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கட்­டுக்­குள் கொண்டு வந்­துள்­ள­போ­தி­லும் அடுத்த சில நாள்­களில் சளிக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என நம்­பப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார். முன்­னு­ரைக்க முடியா வானி­லை­யும் பலர் முகக்­க­வ­சம் அணி­யா­மல் இருப்­ப­தும் இதற்­கான முக்­கிய கார­ணங்­கள் என டாக்­டர் கஸாலி தெரி­வித்­தார். உரு­மா­றும் புதிய சளிக்­காய்ச்­சல் வகை­கள் தலை­தூக்­கு­வ­தா­க­வும் சுவாச திர­வத் துளி­க­ளால் கிரு­மி­கள் பர­வு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

இதை முறி­ய­டிக்க சளிக்­காய்ச்­சல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வது நல்­லது என அவர் வலி­யு­றுத்­தி­னார்.

அவ்­வாறு செய்­தால் நோய் எதிர்ப்­பாற்­றல் அதி­க­ரிக்­கும் என்­றார் அவர்.

சளிக்­காய்ச்­சல் வரும்­வரை காத்­தி­ருக்­கா­மல் தடுப்­பூ­சியை முன்­கூட்­டியே போட்­டுக்­கொள்ள வேண்­டு­மென்ற டாக்­டர் கஸாலி, தடுப்­பூசி போட்ட பிறகு அது நம் உட­லில் செயல்­பட இரண்டு வாரங்­கள் ஆகும் என்று கூறி­னார்.

நம் சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு வலு­வாக உள்­ள­தால் மிகக் கடு­மை­யான சளிக்­காய்ச்­சல் பர­வல் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் மிக­வும் குறை­வாக உள்­ளது. சரா­ச­ரி­யாக ஒரு நாளில் சளிக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்­படும் எட்டு நோயா­ளி­களை டாக்­டர் கஸாலி பரி­சோ­தித்து சிகிச்சை அளிக்­கி­றார். சளிக்­காய்ச்­ச­லுக்­கான அறி­கு­றி­கள் தென்­பட்டு சிகிச்சை அளித்த பிற­கும் பாதிப்பு தொடர்ந்­தால் அது நிமோ­னியா காய்ச்­ச­லாக இருக்­கக்­கூ­டும் என்று அவர் எச்­ச­ரித்­தார்.

நோயெ­திர்ப்பு சக்தி குறை­வாக இருந்­தால், மழைக்கால­மாக இருக்­கும் இந்­நே­ரத்­தில், வெளிப்புறங்களில் நீண்டநேரம் இருக்காதீர்கள் என்றும் வெளியே செல்லும்போது முடிந்தவரை முகக்­க­வ­சத்தை அணிந்திருப்பது நல்லது என்றும் சாதா­ரண சளிக் காய்ச்­சலுக்கான அறி­கு­றி­கள் தென்பட்டாலும் உட­ன­டி­யாக மருத்­து­வரை நாடுவது நல்லது என்றும் டாக்டர் கஸாலி கூறினார்.