நீரிழிவு நோய் இருப் பவர்களுக்கு பழங்கள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
பழங்கள் பொதுவாக உடலுக்கு நன்மை செய்தாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அது சில நேரம் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயாளி களைப் பொறுத்த வரை, ஒவ்வொரு பழமும் ரத்தச் சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது.
இதனால் சில பழங்களை தவிர்ப்பது நல்லது.
காரணம், ரத்தச் சர்க்கரை அளவை மோசமாக உயர்த்தக் கூடிய பழங்களும் உள்ளன.
ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருப்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இந்தப் பழங்களைச் சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள் கிளைசமிக் இன்டக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) மற்றும் கிளைசமிக் லோடு (கிளைசமிக் சுமை) குறைவாக உள்ள பழங்களை தாராளமாக உண்ணலாம்.
எடுத்துக்காட்டாக ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, கொய்யா, நாவல் பழம், கிவி பழம், செர்ரிபழம், பீச்பழம், பெர்ரிபழம், அத்திப்பழம் வெண்ணை பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை உண்ணலாம்.
நீரிழிவு நோய்க்கும் குதிகால் வலிக்கும் தொடர்பு உண்டு.
நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் ஆகியோருக்கு ரத்தத்தில் நீரிழிவு அளவு கட்டுப்பாட்டில் இல்லாத பொழுது குதிகால் வலி ஏற்படலாம்.
இதற்கு முக்கிய காரணம் 'பிளாண்டர் பேசியைடிஸ்'.
குதிகால் எலும்பில் பிளாண்டர் பேசியா இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு குதி கால் வலி உண்டாகலாம். இது தவிர நீரிழிவு நோயாளிகள் குதிகால் உயரமான காலணிகள் மற்றும் கூம்பு வடிவ காலணிகளை அணியக்கூடாது.

