இசைமேதை பீத்தோவன்: முடி முதல் குடி வரை

இசைமேதை பீத்தோவன்: முடி முதல் குடி வரை

1 mins read
e7c30465-7b8c-47c7-b5d0-3616858a60e7
-

மேற்­கத்­திய செவ்­விசை மேதை பீத்­தோ­வன் மறைந்து கிட்­டத்­தட்ட 200 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அவ­ரது தலை­மு­டி­யைக் கொண்டு அவ­ரது மர­பணு வரி­சையை அறி­வி­ய­லா­ளர்­கள் வரி­சைப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

பீத்­தோ­வ­ன் உயி­ரி­ழக்க முக்­கி­யக் கார­ண­மாக இருந்த அவ­ரது கல்­லீ­ரல் நோய் பற்றி அவர்­கள் கூடு­தல் தக­வல்­க­ளைப் பெற்­றுள்­ள­னர். ஆனால் அந்த இசை­மே­தைக்கு ஏன் காது கேளாது போனது என்­பது ஆய்­வா­ளர்­க­ளுக்கு இன்­ன­மும் புலப்­ப­ட­வில்லை.

கேம்­பி­ரிட்ஜ் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­கள் அதை வழி­ந­டத்­தி­னர். மர­ப­ணுக்­க­ளின்­படி அவ­ருக்குக் கல்­லீ­ரல் நோய் வரக்­கூடிய சாத்­தி­யம் இருந்­த­தா­க­வும் பீத்­தோ­வ­னின் குடிப்­ப­ழக்­கம் நோய்க்கு வழி­வ­குத்­தி­ருக்­க­லாம் என்­றும் அவர்­கள் கூறி­னர். மேலும் பீத்­தோ­வன் இறப்­ப­தற்கு சில மாதங்­க­ளுக்கு முன்­னர் அவ­ருக்கு பி வகை கல்­லீ­ரல் அழற்சி நோய் ஏற்­பட்­ட­தா­க­வும் மர­பணு வரிசை தெரி­வித்­தது.

தனி­யார், அர­சாங்­கங்­கள் ஆகி­யவை வைத்­தி­ருந்த பீத்­தோ­வ­னின் எட்­டு­த­லை­மு­டி­களை ஆய்­வா­ளர்­கள் சோதித்­த­னர். அவற்­றில் ஐந்து உண்­மை­யாக பீத்­தோ­வ­னின் தலை­மு­டி­தான் என்று தீர்­மா­னித்து அவற்றை ஆய்வு செய்­த­னர்.

மர­ப­ணுக்­க­ளின் தரம் சேதப்­ ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­தா­க­வும் மிக­வும் சிர­மப்­பட்­டு­தான் மர­பணு மாதி­ரி­க­ளைப் பெற முடிந்­தது என்­றும் ஆய்­வா­ளர்­களில் ஒரு­வ­ரான ஜோஹா­னஸ் குராஸ் கூறி­னார்.

ஜெர்­ம­னி­யின் போன் நக­ரில் 1770இல் பிறந்த லுட்­விக் வான் பீத்­தோ­வன், 1827இல் வியன்­னா­வில் கால­மா­னார். 29 வய­துக்கு மேல் படிப்­ப­டி­யா­கக் செவிப்­புலனை இழந்த பீத்­தோ­வ­னுக்கு 1818இல் முழு­மை­யா­கக் காது கேளா­மல் போனது. அதற்கு மர ­ப­ணு­வ­ரி­சை­யின் மூலம் விளக்கம் கிடைக்­க­வில்லை என்று ஆய்­வாளர்­கள் கூறி­னர்.