எல்லாம் தெரிந்தவர்போல் காட்டிக்கொள்ள வேண்டாமே...

எல்லாம் தெரிந்தவர்போல் காட்டிக்கொள்ள வேண்டாமே...

2 mins read

ஓர் இடத்­துக்­குப் புதி­தா­கச் செல்­லும்­போது அங்­கி­ருப்­ப­வர்­க­ளி­டம் நமக்­குத்­தான் எல்­லாம் தெரி­யும் என்று காட்­டிக்­கொள்­வ­தைப் பொது­வாக பல­ரும் தவிர்த்­து­விடு­வர். கார­ணம், வேலை­யி­ட­மாக இருந்­தால் எல்­லாம் தெரிந்­த­வ­ராக நடந்­து­கொள்­ப­வ­ருக்­குத்­தான் கூடு­தல் பணி­கள் வந்து சேரும். சுற்­றி­யுள்­ள­வர்­களும் நண்­ப­ரா­கவோ உற­வா­கவோ நெருங்­க­மாட்­டார்­கள்.

இருப்­பி­னும், புதி­தாக மண வாழ்க்­கை­யில் இணை­வோர், இந்த அறி­வு­ரையை மன­தில் நிறுத்­திக்­கொண்­டால் பிரச்­சினை­கள் உரு­வா­வ­தைத் தடுக்க முடி­யும் என்று கூறப்­படு­கிறது.

உதா­ர­ணத்­திற்கு, புதி­தாக திரு­ம­ண­மான ஒரு தம்­ப­தி­ய­ரில் அந்­தக் கண­வன் மட்­டுமே ஒரு விவ­கா­ரம் குறித்து முடி­வெடுத்து­வி­டக்­கூ­டாது. அதற்­குப் பதி­லாக, மனை­வி­யின் கருத்­தை­யும் கேட்­ட­றிந்து முடி­வைக் கூற­வேண்­டும்.

மனை­வி­யின் கருத்­தையோ முடி­வையோ அறி­யும்­வரை அந்­தக் கண­வன் தன்னை 'எல்­லாம் தெரிந்­த­வ­னாக' காட்­டிக்­கொள்­வதைத் தவிர்க்­க­வேண்­டும்.

இதை எல்லா புது­ம­ணத் தம்­ப­தி­ய­ரும் பழக்­க­மாக்­கிக்­கொண்­டால் மண வாழ்க்­கை­யில் கண­வன், மனைவி இரு­வ­ரும் சரி­சமம் என்ற உணர்வே மேலோங்­கும். அத்­து­டன் மோத­லை­யும் தவிர்க்க முடி­யும்.

கண­வன், மனைவி கூட்­டாக ஒரு திட்­டத்தை வகுக்­கும்­போது அவர்­க­ளுக்­கி­டையே உற­வும் மேம்­படும் என்­கின்­ற­னர் திரு­மண ஆலோ­ச­கர்­கள்.

ஒரு­சில வேளை­களில் கண­வன் அல்­லது மனைவி மற்­றொரு­வ­ருக்­காக விட்­டுக்­கொடுக்­கும் பக்­கு­வத்­தை­யும் வளர்த்­துக்­கொள்ள இந்த அறி­வுரை உத­வும்.

எடுத்­துக்­காட்­டாக, குழந்தை பெற்­றுக்­கொள்ள ஓராண்டு காத்­தி­ருக்­க­லாம் என்­ப­தில் மனைவி உறு­தி­யாக இருந்து, கார­ண­மறிய விரும்­பா­மல் கண­வன் ஒத்­து­ழைக்­கா­விட்­டால் இரு­வருக்­கும் இடையே வாக்­கு­வாதம் ஏற்­ப­ட­லாம்.

ஆனால், அந்­நே­ரத்­தில் மனைவி­யின் விருப்­பத்­திற்­குக் கண­வன் விட்­டுக்­கொ­டுத்து தன்னை 'எல்­லாம் தெரிந்­த­வ­னாக' காட்­டிக்­கொள்­ளா­மல் புரிந்து நடந்­து­கொண்­டால் இரு­வ­ருக்­கும் இடை­யி­லான உறவு வலுப்­பெ­றும்.

"வெற்­றி­க­ர­மான திரு­ம­ணங்­கள் ஒவ்­வொன்­றி­லும் சற்று செவி­டாக இருப்­பது உத­வி­யிருக்­கும்," என்ற நியூ­யார்க் டைம்­சில் இடம்­பெற்ற ஒரு­வ­ரது கூற்று இங்கு மிகப் பொருத்­தம். கண­வன், மனைவி ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் மதிப்­ப­ளிக்­கும் வழக்­கத்­தைப் பின்­பற்றி வந்­தால் நாள­டை­வில் பிள்­ளை­க­ளி­டத்­தி­லும் அதே அறி­வு­ரை­யைப் பின்­பற்­ற­லாம்.

பிள்­ளை­க­ளைக் கண்­டிக்­கும்­போது பெற்­றோர் தங்­களை 'எல்­லாம் தெரிந்­த­வ­ரா­க­வும்' பிள்­ளை­கள் 'உல­க­ந­டப்பு அறி­யா­த­வ­ரா­க­வும்' இருப்­ப­தா­கக் கூறு­வ­தைத் தவிர்க்­க­வேண்­டும். இது­போன்ற தரு­ணங்­களில் வாக்­கு­வா­தம் சூடு­பி­டித்து மனம் புண்­படும் அள­வுக்­குப் போய்­வி­ட­லாம்.

வீட்­டுக்­குத் தாம­த­மாக வரும் பிள்­ளை­யி­டம், "உன் வய­தைத் தாண்­டித்­தான் நான் வந்­தேன். எனக்­குக் காது குத்­தாதே. ஏன் இவ்­வ­ளவு தாம­தம்?" என்று பெற்­றோர் வின­வி­னால் தன்­னைப் பெற்­றோர் புரிந்­து­கொள்ள தவ­றி­விட்­ட­தா­கத்­தான் அந்­தப் பிள்­ளைக்­குத் தோன்­றும்.

அதற்­குப் பதி­லாக, 'எல்­லாம் தெரிந்­த­வ­ராக' பெற்­றோர் தங்­களைக் காட்­டிக்­கொள்­ளா­மல் கார­ணங்­கேட்டு கண்­டிப்­பில் கொஞ்­சம் அன்பு கலந்­தால், உறவு பாதிப்­ப­டை­யாது.

இனி, திரு­மண வாழ்க்­கை­யில் அடி­யெ­டுத்து வைக்­க­வுள்ள நம் சொந்­தங்­க­ளுக்கு 'எல்­லாம் தெரிந்­த­வ­ராக உன்­னைக் காட்­டிக்­கொள்­ளாதே' என்ற அறி­வுரை­யை­யும் நாம் சேர்த்­துக் கூற­லாம்.