அலுப்பு தெரியாதிருக்க பாட்டெடுத்து விடும் விக்னேஷ்

அலுப்பு தெரியாதிருக்க பாட்டெடுத்து விடும் விக்னேஷ்

2 mins read
25cc2d4e-7c5e-4716-806f-8a6342f17619
-

வினோத் குமார்

மழை பெய்­தால் அந்­தத் தரு­ணத்­திற்கு ஒரு பாடல், சக ஊழி­ய­ருக்­குக் காதல் தோல்வி என்­றால் அதற்­கேற்ற ஒரு பாடல் எனத் தாம் வாக­னம் கழு­வும் வேலை­யிடத்தை உயி­ரோட்­ட­மாக வைத்­தி­ருக்­கி­றார் சிங்­கப்­பூர் பெட்­ரோலி­யம் நிறு­வன ஊழி­யர் திரு விக்னே‌ஷ் மகா­லிங்­கம்.

புத்­து­ணர்ச்­சி­யு­டன் வேலை­யைச் செய்­யும் அதே­வே­ளை­யில் சக ஊழி­யர்­களை உற்­சா­க­மும் படுத்­த­வேண்­டும் என்­ப­தற்­காக தமிழ் பாடல்­க­ளைப் பாடி­ய­வாறு வேலை பார்க்­கி­றார் இவர்.

ஒரு நாளில் கிட்­டத்­தட்ட 12 மணி நேரம் வரை வேலை செய்­யும் 25 வயது விக்­னே‌ஷ், உடல் சோர்­வைக் குறைக்­க­வும் வேலை­யி­டத்­தில் சுறு­சு­றுப்­பாக இயங்­க­வும் தமக்­குப் பிடித்த தமிழ் பாடல்­க­ளைப் பாடு­வ­தை­யும் ஒரு பணி­யா­கக் கருதி செய்­வ­தாக தமிழ் முர­சி­டம் பகிர்ந்­து­கொண்­டார்.

வாக­னம் கழு­வும் நிலை­யத்­தில் மேற்­பார்­வை­யா­ள­ராக உள்ள அவர், காலை 8 மணிக்­குத் தொடங்கி மாலை 4 மணி வரை வேலை செய்­வ­தா­க­வும் பின்­னர் நான்கு மணி நேரம் கூடு­தல் வேலை செய்து வரு­மா­னம் ஈட்டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

"ஒரு சில நாள்­கள் அதி­க­மான கார்­கள் வரும். அத­னால் வேலைப் பளு­வும் அதி­க­ரித்­து­விடும். அப்­போது சில நேரம் தமிழ் தெரிந்த சக ஊழி­யர்­க­ளு­டன் கூட்­டா­கப் பாடிக்­கொண்டே வேலை செய்­வது அனை­வ­ருக்­கும் கூடு­தல் உற்­சா­கம் தரும்," என்­றார் விக்­னே‌ஷ்.

தமிழ்­நாட்­டின் பட்­டுக்­கோட்­டை­யைச் சேர்ந்த விக்­னே‌ஷ், சிங்­கப்­பூ­ரில் நான்கு ஆண்­டு­களாக வேலை செய்து வரு­வ­தா­க­வும் நாள் ஒன்­றுக்கு ஏறக்­கு­றைய 40 கார்­க­ளைக் கழு­வு­வ­தா­க­வும் கூறி­னார்.

தமக்கு இசை­ஞா­னம் இல்­லா­விட்­டா­லும் இசை­ய­மைப்­பா­ளர் யுவன் சங்­கர் ராஜா­வின் பாடல்­கள் விக்­னே­‌ஷிற்கு மிக விருப்­ப­மா­ன­வை­யாம்.

"ஒரு சம­யம் மதிய வேளை­யில் பாடிக்­கொண்டே நான் வேலை செய்­வ­தைப் பார்த்த வாடிக்­கை­யா­ளர் ஒரு­வர், உண­விற்­காக 50 வெள்­ளியை அன்­பளிப்­பா­கக் கொடுத்­தது மறக்க முடி­யாத ஒரு தரு­ணம்," என்­றார் விக்­னே‌ஷ்.

வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குச் சிறந்த அனு­ப­வத்­தைத் தரும் அதே­நே­ரம் தம் வேலை­யில் தொடர்ந்து மேம்­ப­டு­வ­தில் அதிக கவ­னம் செலுத்தி வரு­வ­தாக விக்­னேஷ் கூறி­னார்.

புதி­தாக வரும் தொழில்­நுட்­பங்­க­ளைப் பய­மின்­றிப் பயன்­படுத்தி வேலையை விரை­வாக முடிக்க வேண்­டும் என்ற ஆசை தமக்கு இருப்­ப­தா­க­வும் இவர் கூறினார்.