தன்னம்பிக்கையால் சவால்களை வென்றோர்

தன்னம்பிக்கையால் சவால்களை வென்றோர்

4 mins read
8360c7a7-13ca-449b-8543-34906019faf3
-
multi-img1 of 2

ஆ. விஷ்ணு வர்­தினி

நேற்று அனைத்­து­லக திரு­நர் தினம். திரு­நங்­கை­யர், திரு­நம்­பி­யர் ஆகி­யோர் குறித்த விழிப்­பு­ணர்வை அதி­க­ரிப்­ப­தற்­கும் சமூ­கத்­திற்கு இவர்­க­ளின் பங்­க­ளிப்­பைக் கொண்­டா­டு­வ­தற்­கும் இந்த நாள் அர்ப்­ப­ணிக்­கப்­ப­டு­கிறது.

இருப்பினும் இவர்களின் நம்­பிக்­கை­கள் சமூ­கத்­தின் கண்­ணோட்­டத்­தால் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கும் நிலை இன்­னும் முற்­றி­லும் ஒழிந்­த­பா­டில்லை.

அத­னைச் சீர்­ப­டுத்த, உலகெங்கும் பல்­வேறு சமூக ஆத­ர­வுத் திட்­டங்­களும் அமைப்­பு­களும் தற்­ச­ம­யம் இயங்கி வரு­கின்­றன. இருப்­பி­னும் திருநர்­கள் பல்­வேறு சவால்­களை எதிர்­கொள்­ளவே வேண்டியுள்ளது.

தங்­க­ளின் அடை­யா­ளத்தை வகுத்­துக்­கொண்டு, சமூ­கத்­திற்குப் பங்களிக்கும் தேவேஷ்­வர், சாக்‌ஷி இரு­வ­ரின் வாழ்க்­கைப் பய­ணங்­களும் தனித்­து­வ­மா­னவை.

அடை­யா­ளத்தை நிலை­நாட்ட அவர்­கள் எதிர்­கொண்ட போராட்­டங்­களும் தன்­னம்­பிக்­கை­யோடு மேற்­கொண்ட முயற்­சி­களும் குறிப்­பி­டத்­தக்­கவை.

'எனக்கு நானே உந்­து­தல்'

பல குரல்­களில் பாடும் திறன் படைத்த சாக்‌ஷி ஹரேந்­தி­ரன் வளர்ந்து வரும் ஓர் உள்­ளூர் நட்­சத்­தி­ரம்.

பல சவால்­களை எதிர்­கொண்ட இவர், ஆர்­வம், நம்­பிக்கை, பயிற்சி ஆகி­ய­வையே கலைத்­து­றை­யில் முன்­னேற தாம் செய்த முத­லீ­டு­கள் என்­கி­றார்.

ஆண் குரல், பெண் குரல் இரண்­டி­லும் பாடு­வது சாக்­‌ஷி­யின் தனித்­து­வ­மான வல்­லமை. இது வெள்­ளித்­திரை நட்­சத்­தி­ரம் விஜய் சேது­ப­தி­யின் கவ­னத்­தை­யும் ஈர்த்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

சாக்­‌ஷி­யின் பாடலை ரசித்­த­தா­க­ நேர்­கா­ணல் ஒன்­றில் அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

மேலும், 'சூப்­பர் டீலக்ஸ்' திரைப்­ப­டத்­தில் ஷில்பா என்ற திரு­நங்கை கதா­பாத்­தி­ரத்­தில் தான் நடித்­த­போது சாக்­‌ஷி­யை­யும் அவ­ரின் நளி­னத்­தை­யுமே நினை­வில் வைத்­தி­ருந்­த­தா­க­வும் விஜய் சேது­பதி அந்த நேர்­கா­ணலில் குறிப்பிட்டிருந்தார்.

பல­ர­றிய தன்னை திரு­நங்­கை­யாக ­மே­டை­யில் அடை­யா­ளப்­படுத்­தி­க் கொண்ட சாக்‌ஷியின் சாத­னை­க­ளுக்­குப் பின் பல வலி­கள் உண்டு.

அவர் இசை­யின்­மேல் கொண்­டி­ருந்த ஆர்­வம் தொடர்ந்து பல­ரின் கவ­னத்தை ஈர்க்­கக்­கூ­டிய கலைத்­து­றை­யில் இவரை அடி­யெ­டுத்து வைக்­கச் செய்­தது, .

"வித்­தி­யா­ச­மான, குறு­கு­றுக்­கும் பார்­வை­களை எதிர்­கொள்­ளும்­போது மனத்­திற்கு சங்­க­ட­மாக இருக்­கும். ஏதோ பெரிய குற்­றம் செய்­த­து­போல ஒரு கணம் அவை உணர வைக்­கும்.

"ஆனால், இந்­தச் சவால்­கள் எனக்கு நானே ஆதா­ர­மாக இருக்­க­வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தின," என்­றார் 27 வயது சாக்‌ஷி ஹரேந்­தி­ரன்.

குடும்ப உறுப்­பி­னர்­கள் தனது வாழ்க்­கை­யில் தூண்­க­ளாக இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"சமூ­கத்­தி­ன­ரின் பார்­வை­யால் துவண்­டு­வி­டா­மல் தொடர்ந்து செயல்­பட வேண்­டும். அதைத் தனிப்­பட்ட விமர்­ச­ன­மாக எடுத்­துக்­கொள்­ளா­மல் முன்­னேற வேண்­டும். இதற்­கான வலு­வைத் தந்­தது குடும்­பத்­தி­ன­ரின் ஆத­ரவே," என்­றார் சாக்‌ஷி.

ஏறத்­தாழ ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தனது அடை­யா­ளத்­தைக் குறித்து முடிவு எடுத்த வேளை­யில் குடும்­பத்­தி­னர் பக்­க­ப­ல­மாய் இருந்­ததை சாக்‌ஷி நினை­வு­கூர்ந்­தார்.

கலைத்­துறை தனக்கு அளித்­துள்ள அங்­கீ­கா­ரங்­களில் மிக­வும் முக்­கி­ய­மா­னது நடி­கர் விஜய் சேது­ப­தி­யின் பாராட்டு என்­றார் அவர்.

உணர்ச்­சிப் பெருக்­கா­லும் பெரு­மி­தத்­தா­லும் நெகிழ்ந்த அவர், கலைத்­துறை அனை­வ­ரை­யும் அர­வ­ணைக்­கக் கூடி­யது என்­ப­தற்கு தான் ஓர் எடுத்­துக்­காட்டு என்­றார்.

திரைப்­ப­டத் துறை­யி­லும் காலடி எடுத்து வைத்­துள்­ளார் சாக்‌ஷி.

"எனக்கு நானே உந்­து­தல். வேறு யாரு­மில்லை. எனது வளர்ச்சி என்னை ஊக்­கப்­ப­டுத்­து­கின்­றது.

"ஒவ்­வொரு நாளை­யும் இதுவே எனது வாழ்­வின் கடைசி நாள் எனும் வித­மா­கக் கொண்­டாடி வாழ்­வ­தில் நான் மகிழ்­கி­றேன்," என்று கூறி­னார் சாக்‌ஷி.

'ஒரு­போ­தும் வருந்த மாட்­டேன்' ்

விலங்­குப் பரா­ம­ரிப்பு நிலை­யம் நடத்­தி­வ­ரும் தேவேஷ்­வ­ரின் வாழ்க்­கை­யில் சவால்­க­ளுக்­குக் குறை­வில்லை.

பிழைப்­புக்­கா­கத் தொடங்­கிய விலங்­குப் பரா­ம­ரிப்­புப் பணியே தேவேஷ்­வ­ரின் ஆர்­வ­மாக உரு­வெ­டுத்­தது.

வாழ்க்­கை­யில் பற்­றுக்­கோல் ஏதும் இல்­லா­மல் தனி­மை­யாக உணர்ந்த வேளை­யில், அவர் இத்­து­றை­யில் முழு­வீச்­சில் இறங்­கி­னார். விலங்­கு­க­ளின் அன்­பில் தான் மன­நி­றைவு அடைந்­த­தாக இவர் கூறி­னார்்.

விலங்கு வதைத் தடுப்­புச் சங்­கத்­தில் அதி­கா­ரி­யா­கப் பணி­யாற்­றி­ய­போது அவர் அன்­றா­டம் கையாண்ட விலங்கு வன்­கொ­டு­மைச் சம்­ப­வங்­கள் தேவேஷ்­வரை நிலை­கு­லைய வைத்­தன.

அந்த மன­உ­ளைச்­ச­லில் இருந்து விடு­பட, தானே சொந்­த­மாக நாய்­கள் பரா­ம­ரிப்பு மையம் ஒன்றை அவர் தொடங்­கி­னார்.

விலங்­குப் பரா­ம­ரிப்பு உத­வி­யா­ள­ராக இருந்த காலத்­தி­லேயே சொந்­த­மாக இப்­படி ஒரு பரா­ம­ரிப்பு மையம் தொடங்­க­வேண்­டும் என்ற கனவு தேவேஷ்­வ­ருக்கு இருந்­தது.

நிரந்­தர வேலை­யில் இருந்த இவர் அதற்­கா­கத் தனது வேலை­யைக் கைவி­ட­வும் துணிந்­தார்.

அதில் சவால்­கள் இல்­லா­ம­லில்லை. தான் எதிர்­நோக்­கிய சவால்­கள் அனைத்­தை­யும் மன­உ­று­தி­யு­டன் கடந்து சென்­றார்.

'ஓ மை போவ்ட்' எனும் பரா­ம­ரிப்பு மையத்தை 2018ஆம் ஆண்­டில் தேவேஷ்­வர் தொடங்­கி­னார்.

"இந்த வர்த்­த­கம் தொழில் மட்­டு­மன்று. எனது அடை­யா­ள­மும் புதிய வாழ்க்­கைக்­கான குறி­யீ­டும்­கூட," என்­றார் தேவேஷ்­வர்.

"விலங்கு வதை தொடர்­பான சட்­டங்­கள் சிங்­கப்­பூ­ரில் குறைவு. பெரும்­பா­லும் அப­ரா­தம் கட்­டு­வ­தோடு குற்­ற­வா­ளி­கள் தப்­பித்­து­வி­டு­கின்­ற­னர்.

"இது­கு­றித்­தும் விலங்­குப் பரா­ம­ரிப்பு குறித்­தும் மேலும் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த தொடர்ந்து முயற்சி செய்­வேன்," என்­றார் 37 வயது தேவேஷ்­வர் வனி­யப்­பெ­ரு­மாள்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தொடர்­பான இடை­யூ­று­க­ளால் தனது வர்த்­த­கம் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்­றார் இவர்.

அவ­சி­யம் குறைந்த நிறு­வ­னம் என்ற பிரி­வில் ஒதுக்­கப்­பட்ட 'ஓ மை போவ்ட்' மையம் கிரு­மிப் பர­வல் தொடர்­பில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்ட கால­கட்­டத்­தில் முடங்­கி­யது.

ஒரு கட்­டத்­தில் நிலை­மை­யைச் சமா­ளிக்க இய­லா­மல், தனக்கு இல்­லம்­போல் திகழ்ந்த 'ஓ மை போவ்ட்' மையத்தை மூட­வும் அவர் தயா­ரா­னார்.

"கட­னில் மூழ்­கி­யி­ருந்த எனக்கு அர­சாங்க நிதி­யு­தவி கிடைப்­ப­தும் கடி­ன­மாக இருந்­தது," என்று குறிப்­பிட்ட தேவேஷ்­வர், "ஆனா­லும் நான் மனம் தள­ர­வில்லை. தொடர்ந்து போரா­டி­னேன்," என்று கூறி­னார் தேவேஷ்­வர்.

சிர­மப்­பட்ட வேளை­யில், பல­த­ரப்­பட்­டோர், புரி­த­லு­டன் தனக்கு உத­விக்­க­ரம் நீட்­டி­ய­தாக இவர் குறிப்­பிட்­டார். மீண்­டும் இயங்­கத் தொடங்­கிய 'ஓ மை போவ்ட்' மையம் மெல்ல மீண்டு வந்­தது தனக்கு மகிழ்ச்­சி­யை­யும் மன­நி­றை­வை­யும் அளிப்­ப­தா­கக் கூறி­னார் தேவேஷ்­வர்.

யாரை­யும் சார்ந்து செயல்­ப­டா­மல், தன்­னை­யும் தனது ஆற்­ற­லை­யும் மட்­டுமே நம்பி களத்­தில் குதித்­த­தாக் கூறிய தேவேஷ்­வர், இது­கு­றித்து தாம் இது­வரை வருந்­தி­யதே இல்லை என்­றார். வருங்­கா­லத்­தி­லும் எத்­த­கைய சூழ­லி­லும் ஒரு­போ­தும் தனக்கு இந்த வர்த்­த­கம் குறித்து வருத்­தம் இருக்­காது என்­றார்.