முக ஒப்பனை செய்வோர் இரவில் அதை அகற்ற மறக்கக் கூடாது: வல்லுநர்கள்

முக ஒப்பனை செய்வோர் இரவில் அதை அகற்ற மறக்கக் கூடாது: வல்லுநர்கள்

2 mins read

அனுஷா செல்­வ­மணி

இர­வு­நே­ரத்­தில் வீட்­டுக்குத் தாம­த­மாகத் திரும்­பும் சிலர், உறங்­கச் செல்­லு­முன் முக ஒப்­ப­னையை அகற்ற சோம்­பல் அடை­வார்­கள். எவ்­வ­ளவு களைப்­பாக இருந்­தா­லும் ஒப்­ப­னை­யு­டன் உறங்­கச் செல்­வது முகத்­தில் விஷத்­தைப் பூசிவிட்டுச் செல்­வ­தற்கு சமம் என்­கின்­ற­னர் சில வல்­லு­நர்­கள்.

உறக்­கம் முக்­கி­யமா ஒப்­ப­னையை அகற்­றி­விட்­டுத் தூங்­கச் செல்­வது முக்­கி­யமா என்று கேட்­டால் பலர் உறக்­கத்­துக்கு முக்­கி­யத்­து­வம் தரு­வதை அவர்­கள் சுட்­டி­னர்.

நீண்­ட­கா­லத்­திற்கு இவ்­வாறு ஒப்­ப­னையை இர­வில் அகற்­றா­மல் விடு­வ­தால் சரு­மம் அதன் பொலிவை இழக்­கும். களைப்­பைப் பொருட்­ப­டுத்­தா­மல் இர­வில் கட்­டா­யம் ஒப்­ப­னையை அகற்­றி­வி­டு­வது நல்­லது என சரு­மப் பரா­ம­ரிப்பு வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.

அண்­மை­யில் அமெ­ரிக்­கா­வில் பொது மக்­க­ளி­டம் இது­கு­றித்­துக் கலந்­து­ரை­யா­டும் காணொளி 'டிக்­டாக்' தளத்­தில் பதி­வி­டப்­பட்­டது.

அதில் பங்­கேற்ற பெண்­கள் பலர் இர­வு­நே­ரத்­தில் ஒப்­ப­னையை அகற்­றி­விட்டு உறங்­கச் செல்ல சோம்­பல் அடை­வ­தா­கக் கூறி­னர். 'முகப் பூச்­சைக் கழு­வி­னா­லும் கண் மையை அகற்­றப் பெரும்­பா­லான நேரங்­களில் சோம்­ப­லாக இருப்­ப­தாக அப்­பெண்­கள் குறிப்­பிட்­ட­னர்.

'ரத்­னம்ஸ் அலெர்ஜி அண்ட் ஸ்கின் சென்­டர்' எனும் சிகிச்சை நிலை­யத்­தின் இயக்­கு­ந­ரான தோல் மருத்­து­வர் கே.வி. ரத்­னம், இவ்­வாறு ஒப்­ப­னையை அகற்­றா­மல் இருப்­ப­தால் ஏற்­படும் பக்க விளை­வு­கள் குறித்து விளக்­கம் அளித்­தார்.

ஒப்­ப­னைப் பொருள்­கள், சூரி­யக் கதிர்­க­ளி­லி­ருந்து காத்­துக்­கொள்­ளும் களிம்­பு­கள் ஆகி­ய­வற்­றில் ரசா­ய­னங்­கள் அதி­கம் சேர்க்­கப்­ப­டு­வதை அவர் சுட்­டி­னார். இயற்கை மூலப்­பொ­ருள்­கள் சேர்க்­கப்­ப­டு­வ­தால் அவை சரு­மத்தை மென்­மை­யாக்­கும் என்­ப­தற்கு ஆதா­ரம் இல்லை என்­றார் அவர். இந்த ரசா­ய­னங்­கள் சரு­மத் துளை­களை அடைத்து முகப்­ப­ருக்­களை உண்­டாக்­கும் என்­றார் அவர்.

"நீண்ட நேரம் ஒரு­வர் ஒப்­ப­னையை அகற்­றா­மல் இருப்­ப­தால் தோல் சிவத்­தல், அரிப்பு போன்­றவை ஏற்­ப­டக்­கூ­டும். அத்­து­டன் சரு­மம் ஒவ்­வா­மை­யால் பாதிக்­கப்­படக்­கூ­டும். எனவே, ஒவ்­வொரு நாளும் ஒப்­ப­னையை மறக்­கா­மல் கழு­வி­விட்­டுத் தூங்­கச் செல்­வது முக்­கி­யம்," என்­றார் மருத்­து­வர் ரத்­னம்.

சரு­மத்தை மெரு­கூட்­டும் எனும் தவ­றான நம்­பிக்­கை­யில் சிலர் ஒப்­ப­னையை அகற்­று­வ­தில்லை என்­றார் அவர்.

பல ஆண்­டு­கள் அனு­ப­வம் வாய்ந்த ஒப்­ப­னைக் கலை­ஞர் மகேஸ்­வரி, "ஒப்­ப­னையை அகற்­றா­மல் உறங்­கச் சென்­றால், முகப் பருக்­கள் அதி­க­மா­கும். முகத்­தில் இருக்­கும் நுண்­ணு­யி­ரி­கள் தலை­ய­ணை­மேல் படு­வ­தால், தூங்­கும்­போது அவை மீண்­டும் நம் சரு­மத்­திற்­குள் நுழைந்­து­விடும்," என்று கூறி­னார்.

கண் ஒப்­ப­னையை அகற்­றா­விட்­டால் கண்­களில் தொற்று ஏற்­படும் என்று அவர் எச்­ச­ரித்­தார்.

துடைப்­பான்­க­ளைப் பயன்­படுத்­து­வதை விட­வும் நன்கு கழு­வி­விட்டு உறங்­கு­வதே பாது­காப்­பா­னது. சுத்­தப்­படுத்­தும் எண்­ணெய்­யைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று கூறும் இவர், "சரு­மத்­தைப் பாது­காக்­கா­மல் எவ்­வ­ளவு ஒப்­ப­னையை அள்ளிப் பூசி­னா­லும் பய­னில்லை," என்­றார்.