தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் ஆத்திசூடி வரிகள் வெளியீடு

1 mins read
35cd61db-6529-4878-b055-4049f7d1e577
-

இவ்­வாண்டு சிங்­கப்­பூர் தமிழ்­மொழி விழா­வின் முதல் நாள் நிகழ்ச்­சி­களில் ஒன்­றாக ஏப்­ரல் 1ஆம் தேதி கெபுன் பாரு சமூக மன்­றம், இயோ சூ காங் சமூக நிலை­யம் ஆகி­ய­வற்­றின் இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழுக்­கள் இணைந்து "வாங்க சிரிக்­க­லாம்" என்ற நகைச்­சுவை நிகழ்ச்­சியை கெபுன் பாரு பல­நோக்கு அரங்­கத்­தில் நடத்­தி­யுள்­ளன.

நிகழ்­வின் முக்­கிய அம்­ச­மாக கெபுன் பாரு அடித்­தள உறுப்­பி­ன­ரான முத்­த­ழகு மெய்­யப்­ப­னின் முயற்­சி­யால் மொழி­பெ­யர்க்­கப்­பட்டு புத்­த­க­மாக்­கப்­பட்ட ஆத்­தி­சூடி நூல் மின்­னி­லக்க காட்­சி­யாக வெளி­யீடு கண்­டது.

கெபுன் பாரு தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹென்றி குவெக்­கும் இயோ சூ காங் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் யிப் ஹோன் வெங்­கும் ஆத்­தி­சூடி இணைய மின்­னி­லக்க காட்­சித் திரையை அதி­கா­ர­பூர்­வ­மாக திறந்து வைத்­த­னர்.

"சிங்­கப்­பூ­ரின் ஆட்சி மொழி­க­ளான மலாய், சீனம், தமிழ், ஆங் கிலம் ஆகி­ய­வற்­றின் வழி­யா­க­வும் இன நல்­லி­ணக்­கத்தை வலுப்­பெ­றச் செய்­ய­லாம் என்ற நோக்கில் இந்­நூல் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது," என்­றார் திரு மெய்­யப்­பன்.

"சிறி­ய­வர்­கள்­மு­தல் பெரி­ய­வர்­கள்­வரை அனை­வ­ருக்­கும் ஆத்தி­சூ­டி­யின் நீதிக் கருத்­து­கள் சென்று­சே­ரும் வகை­யில் தீவு முழு­வ­தும் உள்ள வீட­மைப்­புக் கழ­கக் கட்­டடங்களின் மின்­தூக்­கித் தளங்­களில் மின்­னி­லக்­கக் காட்சி­யாக அங்­குள்ள திரை­களில் அன்­றா­டம் காட்­டப்­படும் நோக்­கத்­து­டன் இந்­நூல் மொழி­பெ­யர்க்­கப் பெற்­றது," என்­றும் திரு மெய்­யப்­பன் குறிப்­பிட்­டார்.