நாட்பட்ட மூக்கடைப்புக்கான காரணங்கள்

நாட்பட்ட மூக்கடைப்புக்கான காரணங்கள்

2 mins read
8a049d53-6990-47c0-b8be-1722579e6b85
-

எப்­போ­தும் மூக்­க­டைப்பு, மூச்­சு­வி­டும்­போது சத்­தம், அடிக்­கடி சளி போன்ற அறி­கு­றி­கள் இருக்­கும் நாட்­பட்ட மூக்­க­டைப்பு அரி­தா­னது இல்லை என்று கூறி­யுள்­ளார் அமெ­ரிக்­கா­வின் செயிண்ட் லூயிஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மருத்­து­வத் துறை­யைச் சேர்ந்த தொற்­று­நோய் நிபு­ணர் மார்க் டைக்­விக்ஸ்.

வீட்­டில் அல்­லது அலு­வ­ல­கத்­தில் மூக்­குக்கு எரிச்­சலை ஏற்­ப­டுத்­தும் பொருள்­கள், ஒவ்­வாமை, சுவா­சக் குழா­யில் தொற்று போன்­ற­வற்­றால் மூக்கு அடைப்பு ஏற்­ப­ட­லாம்.

மூக்கு துவா­ரங்­க­ளுக்கு நடு­வில் உள்ள குருத்­தெ­லும்பு நடு­வில் இல்­லா­மல் ஒரு பக்­க­மாக இருக்­கும்­போது மூச்­சுக்­காக ஒரு பாதை பெரி­தா­க­வும் மற்­றொன்று சிறி­ய­தா­க­வும் இருக்­க­லாம். இத­னால் சிறிய மூச்­சுப் பாதை அடிக்­கடி அடைத்­துக்­கொள்­ள­லாம் என்று டாக்­டர் டைக்­விக்ஸ் குறிப்­பிட்­டார்.

காலப்­போக்­கில் மூக்­கில் உள்ள எலும்பு வளை­யும்­போது மூக்­க­டைப்பு ஏற்­ப­டக்­கூ­டும் என்­றார் அவர்.

பொடுகு, எச்­சில், சிறு­நீர் செல்­லப் பிரா­ணி­க­ளின் முடி, போன்ற­வை­யும் தூசும் மூக்­கில் உள்ள மெல்­லிய திசுக்­க­ளைப் பெரி­தாக்கி, அழற்­சியை ஏற்­ப­டுத்­த­லாம். மேலும், உடல் நறு­ம­ணத் திர­வங்­கள், வாக­னத்­தி­ருந்து வெளி­யே­றும் கரும்­புகை, சிக­ரெட் நாற்­றம் போன்­ற­வற்­றா­லும் மூக்­க­டைப்பு உண்­டா­க­லாம் என்று நியூ­யார்க் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மருத்­து­வத் துறை­யில் பணி­யாற்­றும் டாக்­டர் சாரா ஹாக்­மன் தெரி­வித்­தார்.

மேலும் சளி, காய்ச்­சல், கொவிட்-19 கிரு­மித்­தொற்று, போன்­ற­வற்­றா­லும் வெப்­ப­நிலை, காற்­றில் ஈரப்­ப­தம் போன்­ற­வற்­றில் மாற்­றத்­தா­லும் மூக்­க­டைப்பு ஏற்­ப­டக்­கூ­டும் என்று டாக்­டர் டைக்­விக்ஸ் விவ­ரித்­தார்.

இரண்டு வாரத்­துக்­கும் அதி­க­மாக மூக்­க­டைப்பு நீடித்­தால், குறிப்­பாக சளி ஏற்­பட்­ட­பி­றகு அந்­நிலை உண்­டா­னால் சைனஸ் தொற்று ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்­றார் டாக்­டர் சாரா ஹாக்­மன். காது­வலி, காய்ச்­சல், கன்­னத்­தில் வலி போன்­றவை சைனஸ் தொற்­றின் அறி­கு­றி­கள் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ரத்த அழுத்­தத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் சில வகை மருந்­து­க­ளின் பக்­க­வி­ளை­வாக மூக்­க­டைப்பு ஏற்­ப­ட­லாம் என்­றார் டாக்­டர் டைக்­விக்ஸ். அத­னால் மருந்­து­கள் அல்­லது சத்­து­ம­ருந்­து­கள் போன்­ற­வற்றை உட்­கொள்­ளும்­போது, அவற்­றின் பக்­க­வி­ளை­வு­க­ளைப் பற்­றித் தெரிந்­து­கொள்­வது முக்­கி­யம் என்­றார் அவர்.

முத­லில் மெல்­லி­ழைத் தாளில் மூச்சை நன்கு வெளி­யில் இழுத்­து­விட்டு சளியை வெளி­யேற்றி மூக்­க­டைப்பை அகற்­ற­லாம் என்று தி கிலீட்­லண்ட் கிளி­னிக்­கின் மூக்கு நிபு­ணர் டாக்­டர் ராஜ் சிந்த்­வானி பரிந்­து­ரைத்­தார். ஆனால் அதை வேக­மா­கச் செய்­யா­மல் மெது­வா­கச் செய்ய வேண்­டும் என்­றார் அவர்.

கடை­யில் வாங்­கக்­கூ­டிய உப்­பு­க­லந்த (செலைன்) மூக்­குத் தெளிப்­பானை மூக்­கில் அடித்து, மூக்­க­டைப்பை அகற்ற முய­ல­லாம் என்று டாக்­டர் மார்க் டைக்­விக்ஸ் கூறி­னார்.

நிறைய தண்­ணீர் குடிப்­ப­தால் மூக்­குச் சளி, கெட்­டி­யா­கா­மல் எளி­தில் வெளி­வ­ரும் என்­றும், சுடு­நீ­ரில் குளிப்­ப­தும் மூச்­சுக்­கு­ழா­யில் உள்ள அடைப்பை நீக்­கும் என்­றும் டாக்­டர் சாரா ஹாக்­மன் கூறி­னார்.

சில வகை ஒவ்­வா­மைக்­குக் கடை­யில் ஆண்­டி­ஹிஸ்­ட­மின் மருந்­து­களை வாங்­க­லாம். ஆனால் அவற்றை இரண்டு வாரத்­துக்கு மேல் உட்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தால் மருத்து­வரை நாடு­வது சிறந்­தது என்றும் கூறப்பட்டுள்ளது.