தமிழின் அழகே அழகு என்ற தலைப்பில் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் பங்கேற்கும் தமிழ்மொழி விழா உமறுப் புலவர் அரங்கில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியிலிருந்து நடைபெற இருக்கிறது.
அந்த விழாவில் திரு ஜோ மல்லூரி சிறப்புப் பேச்சாளராக பங்கேற்கிறார். பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் கலந்துரையாடலை முனைவர் சிவகுமாரன் வழிநடத்த இருக்கிறார்.
ஏற்பாட்டுக்குழுத் தலைவரான திரு ராமமூர்த்தி ராம்ஜி விழாவை வழிநடத்த இருக்கிறார்.
'தமிழின் அழகே அழகு' (சிலப்பதிகாரம் வாயிலாக) என்ற தலைப்பில் பல பள்ளிகளில் இருந்து ஐம்பது மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்ததில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள்,பள்ளிகள், நடுவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சிறப்பு விருந்தினர் நினைவுப் பரிசு வழங்கிக் கெளரவிக்க இருக்கிறார்.
பங்கெடுத்த அனைத்து மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் காசோலை வழங்கப்பட இருக்கிறது.

