ஸேக்-சலாம் இந்தியா, சிங்கப்பூரில் உள்ள இந்திய முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான இந்திய முஸ்லிம் பேரவையுடன் இணைந்து ஏப்ரல் 1ஆம் தேதி சமூக நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பல்லின மக்கள் கிட்டத்தட்ட 1,000 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நோன்பு துறந்தனர். அனைவருக்கும் நோன்புக் கஞ்சி, குளிர்பானம், இறைச்சி பிரியாணி வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் மலாய் வர்த்தக தொழில் சபையின் தலைவர் பரீத் கான் கலந்துகொண்டார்.
இந்திய முஸ்லிம் பேரவையை 1992ல் நிறுவி அதனுடைய சமூகப் பங்களிப்புகளில் தொடர்ந்து பயணித்துவரும் அமைப்புகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இந்திய முஸ்லிம் பேரவையை நிறுவப் பாடுபட்டவர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த எம்.கே.ஏ. ஜப்பார், இபுறாஹீம் மரைக்கான் போன்றோர் உட்பட முன்னாள், இந்நாள் பங்காளி அமைப்புத் தலைவர்களுக்குப் பாராட்டு வழங்கப்பட்டது.
அத்துடன் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முஹம்மது பிலால், முன்னாள் துணை அமைச்சரும் குவைத்துக்கான சிங்கப்பூர் தூதருமான ஸைனுல் அபிதீன் ரஷீத், பேரவை உருவாகப் பேராதரவு வழங்கியதை நினைவு கூர்ந்தார்.
செய்தியும் படமும்:
இந்திய முஸ்லிம் பேரவை

