உட்லண்ட்ஸ் நூலகத்தில் திருக்குறள் குறித்து உரை

உட்லண்ட்ஸ் நூலகத்தில் திருக்குறள் குறித்து உரை

1 mins read

தேசிய நூலக வாரி­யத்­தின் தமிழ்ச் சோலை திறக்­கப்­பட்டு ஓராண்டு நிறை­வ­டை­யப் போவதை முன்­னிட்டு சிறப்பு சொற்­பொ­ழி­வுக்­கும் கலந்­து­ரை­யா­ட­லுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

வரும் 16ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­ப­கல் 2 மணி முதல் 3.30 மணி வரை உட்­லண்ட்ஸ் வட்­டார நூலக அரங்­கத்­தில் (கீழ்த்­த­ளம் பி1) நிகழ்ச்சி நடை­பெ­றும்.

திருக்­கு­றளை ஆங்­கி­லத்­தில் மொழி­பெ­யர்த்­த­வ­ரும் அழ­கிய தமி­ழில் பேசிக் கவர்பவருமான தாமஸ் ஹிட்­டோஷி, 'கழி­பெ­ருங் காரிகை: திருக்­கு­ற­ளில்(ன்) அழகு' என்ற தலைப்­பில் சிறப்­புரை ஆற்­ற­வி­ருக்­கி­றார்.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஏற்­பாட்­டில் நடை­பெ­றும் தமிழ் மொழி விழா நிகழ்ச்­சி­களில் ஒன்­றாக இந்­நி­கழ்ச்சி அமை­யும். பிற்­ப­கல் 1.45 மணிக்­குள் இருக்­கை­யில் அமரும்­படி நூலக வாரி­யம் பொது­மக்­களைக் கேட்­டுக்­கொண்டுள்ளது.