இன்னாரென்ற பேதமின்றி எல்லாரும் கூடிய நன்னாள்

இன்னாரென்ற பேதமின்றி எல்லாரும் கூடிய நன்னாள்

2 mins read

நோன்­புப் பெரு­நாளை முன்­னிட்டு ஜமால் முஹம்­மது கல்­லூரி முன்­னாள் மாண­வர்­கள் சங்­க­மும் மஸ்­ஜித் அப்­துல் கபூர் பள்­ளி­வா­ச­லும் முதன்­முறை­யாக இணைந்து அண்­மை­யில் நல்­லி­ணக்க நோன்பு துறப்பு நடத்­தின.

இந்­திய முஸ்­லிம் சமூ­கத்தை வழி­ந­டத்­தும் குழு­வின் www.imcsc.sg இணை­யத்­த­ளம் இந்­நி­கழ்­வில் அறி­முகப்­ப­டுத்­தப்­பட்­டது. மேலும், குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்கு உண­வுப்­பொ­ருள்­களும் நோன்­புப் பெரு­நாள் அன்­ப­ளிப்­பு­களும் வழங்­கப்­பட்­டன.

கடந்த வியா­ழக்­கி­ழமை பள்­ளி­வா­ச­லின் பன்­னோக்கு அரங்­கில் நடை­பெற்ற இந்­நிகழ்­வில் சம­ய­ மு­றைப்­படி பள்­ளி­வா­ச­லின் இமாம் உஸ்­தாத் அஜீ­ஜூல்லா ஹசனி இறை­வ­ச­னங்­களை ஓதி­னார்.

சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட உள்­துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் டாக்­டர் முகம்­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம், "பல இன, சமய நல்­லி­ணக்­கம் வலு­ப்பெ­ற­வும் ஒன்­று­பட்ட சமூ­க­மாக நாம் உறு­தி­யு­டன் வள­ர­வும் சமூக அமைப்­பு­கள் இது­போன்ற நிகழ்­வு­க­ளைத் தொடர்ந்து நடத்த வேண்­டும்," என்றார்.

பல இன மக்­கள் வாழும் சிங்­கப்­பூ­ரில் ஒற்­று­மை­யை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் போற்றி மேம்­ப­டுத்­தும் நோக்­கில் இந்­நி­கழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக சங்­கத்­தின் தலை­வர் முனை­வர் மு. அ. காதர் தெரி­வித்­தார்.

பல இன மக்­க­ளு­டன் சமூ­கத் தலை­வர்­கள், சங்­கத்­தின் உறுப்­பி­னர்­கள், பள்­ளி­வா­சல் நிர்­வா­கி­கள், பொது­மக்­கள் என ஏறத்­தாழ 250க்கும் மேற்பட்­டோர் இந்­நி­கழ்­வில் கலந்து­கொண்­ட­னர்.

"இந்த நோன்பு துறப்பு நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­தன் மூலம் இஃப்தார் என்­ப­தன் முக்­கி­யத்­து­வத்தை அறிந்­து­கொண்­டேன். பல்­லின மக்­கள் வாழும் சிங்­கப்­பூ­ரில் இத்­த­கைய நிகழ்ச்­சி­கள் புரிந்­து­ணர்­வைப் பலப்­ப­டுத்த உத­வு­கின்­றன," என்று கூறி­னார் அர­சாங்க ஊழி­ய­ரான நாரா­ய­ணன் ஆண்­டி­யப்­பன், 52.

சுயதொ­ழில் செய்­து­வ­ரும் 52 வயது அப்­துல் ரஹீம், "அனை­வ­ரு­ட­னும் கூட்­டாக இந்­நி­கழ்­வில் பங்­கு­கொண்­டது கூடு­தல் மகிழ்ச்­சி­ய­ளித்­தது," என்­றார்.