கேன்பரா சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிக் குழுவின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியில் இந்த ஆண்டு பட்டிமன்றம் நடக்க இருக்கிறது.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் 'மரியாதை என்பது இன்று வயதுக்கே/
திறமைக்கே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்தப் பட்டிமன்றம் இம்மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கேன்பரா சமூக மன்றத்தில் நடை
பெறும்.
பட்டிமன்றத்தின் நடுவராக திரு யூசுப் ராவுத்தர் ரஜித் செயல்பட, வயதுக்கே என்ற அணியில் முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன்,
திரு நிர்மல், செல்வன் ப்ரபவ் ஆகியோரும், திறமைக்கே என்ற அணியில் திருமதி இசக்கிசெல்வி, திருமதி நபிலா நஸ்ரின், செல்வன் ரோகித்குமார்
ஆகியோரும் பேச இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியுடன் பாலர் பள்ளிச் சிறுவர்கள், தொடக்கநிலை ஒன்று முதல் மூன்று வரையுள்ள மாணவர்களுக்கு ஆடை அலங்காரப் போட்டியும் நடை
பெறும்.
மேலும் சைவ உணவு, சமூக மன்றத்தின் மற்ற நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்க நுழைவுக் கட்டணம் 5 வெள்ளி வசூலிக்கப்படுகிறது.
பட்டிமன்றத்தில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டு மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் அழைக்கிறது.
மேல்விவரங்களுக்கு 90016400 என்ற எண்ணில் திரு ரஜித்தைத் தொடர்புகொள்ளவும்.

