சபிதா ஜெயகுமார்
பல சமயத்தினர் ஒன்றுகூடிய வசதி குறைந்த பிள்ளைகளுக் கான நோன்பு துறக்கும் ‘இஃப்தார்’ நிகழ்ச்சி சென்ற புதன்கிழமை நடைபெற்றது.
‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ எனும் இலாப நோக்கமற்ற அமைப்பின் ‘ஷோவிங் கேர் டுகெதர்’ எனும் சமயங்களுக்கு இடையிலான நடவடிக்கை ஏற்பாட்டுப் பிரிவு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
இதில் அறுபதுக்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு நோன்புப் பெருநாள் நன்கொடையும் விளையாட்டுப் பொருள்களும் அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன. அப்பிள்ளைகள் ‘தி ஆல்ஃபாபெட் புரொஜெக்ட்’ எனும் முழுமையான ஆதரவு திட்டத்தின் புதுப் பயனாளிகள்.
ரமலான் மாதத்தில் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க ஏதுவாக அவர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு அன்பளிப்புப் பைகளும் ‘என்டியுசி’ பற்றுச்சீட்டு களும் வழங்கப்பட்டன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பிடோக் சமூக சேவை அலுவலகத்தின் ஆதர வில் இராமகிருஷ்ணா மிஷன் வளாகத்தில் இந்த நோன்புத் துறப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது.
“இந்து நண்பர்களுக்கு நோன்பு துறப்பு விருந்தளிப்பது இதுவே முதல் முறை,” என்று குறிப்பிட்டார் சிங்கப்பூர் அனைத்து சமய அமைப்பின் தலைவரான டெர்ரி கீ.
வசதி குறைந்த பின்னணியில் இருந்து வரும் எங்களைப் போன்ற குடும்பங்களுக்கு இது போன்ற திட்டங்கள் பேருதவி யாக இருப்பதாக திருவாட்டி சமியா பிந்தி ரோஹானி தெரிவித்தார்.