வெளிநாட்டு ஊழியர்களுக்காக நோன்புத் துறப்பு ஏற்பாடு

வெளிநாட்டு ஊழியர்களுக்காக நோன்புத் துறப்பு ஏற்பாடு

1 mins read
9e986bef-c262-414f-be2d-5b76db8101d2
-

உழைத்­துக்­க­ளைத்த தொழி­லா­ளர்­க­ளுக்கு 'ஜீடாஸ்' எனப்­படும் சிங்­கப்­பூர் ரத்­தி­னக்­கல் வர்த்­த­கர்­கள் சங்­கம் மூன்­றா­வது ஆண்­டாக நோன்பு துறப்பு நிகழ்வு ஒன்­றுக்­குக் கடந்த 15ஆம் தேதி­யன்று ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அதி­கம் கூடும் பள்­ளி­வா­சல்­களில் ஒன்­றான மஸ்­ஜித் அல் ஃபிர்தெ­ளஸ் பள்­ளி­வா­ச­லில் நடந்த இந்த நோன்பு துறப்­பில் முன்­னாள் நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் திரு அம்­ரின் அமீன் கலந்­து­கொண்­டார்.

வெளி­நாட்டு ஊழி­யர் சகோ­த­ரர்­க­ளுக்­காக அவர்­கள் கூடும் இடத்­திற்கே சென்று இவ்­வாறு உத­வு­வது சிறப்­பான சேவை என்று கூறிச் சங்­கத்­தி­ன­ரின் முயற்­சி­யைப் பாராட்­டி­னார் அவர்.

ஜீடாஸ் தலை­வர் முஹம்­மது பிலால், செய­லா­ளர் ரஃபி அஹ­மது, துணைச் செய­லா­ளர் அப்­துல் ரஷீத், பொரு­ளா­ளர் ஜஹ­பர் சாதிக் ஆகி­யோ­ரும் இந்­நி­கழ்­வில் கலந்­து­கொண்­ட­னர்.

செய்தி/படம்: ஏற்­பாட்­டுக்­குழு